இதில் முதல் பத்துப் பாடல்கள் எனது 6வது நூல்
மனக்கடல் வலம்புரிகள் – ல் பிரசுரமானது இனிய தமிழெழுது- வரை (கீழிருந்து பாருங்கள்)
*
செந்தமிழ் வாழியவே!
*
செந்தமிழ் வாழியவே! எம் வேர்!
நந்தமிழ் வாழியவே! எம் உயிர்!
தீந்தமிழ் தொல்காப்பியத் தமிழ் பார்!
அருந்தமிழை அழகாய்ப் பேசுவீர்!
*
செம்மொழி! திராவிட மொழிக் குடும்பத்தின்
முதன்மை மொழியில் ஒன்று, நறுந்தேன்!
பைந்தமிழ்! எட்டுக் கோடியினருக்கும் மேலானவர்
அருந்தமிழைப் பேசும் பெருமையுடைத்து.
*
இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுக்கும் மேலானது!
மிரண்டிடாதீர்! குமரிக்கண்டத்தில் தோன்றிய மொழி!
முரணற்றது மணிமகுடம் சங்க இலக்கியங்கள்!
திரண்ட இலக்கிய மரபுடைத்து.
*
திருக்குறள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, நாலடியார்
பெரும் பொக்கிசப் புதையல் தமிழ்!
கருத்தோடு காத்து வளர் செந்தமிழை!
விருப்போடுயர்ந்து செந்தமிழ் வாழியவே!
*
வள்ளுவர், கம்பர், பாரதி, ஒளவை
அள்ளிப் பரப்பிய ஆதி மொழி!
அள்ளி அணையுங்களெம் தெய்வ மொழியை!
தள்ளாதீர் செந்தமிழ் வாழியவே!
*
பா ஆக்கம் பா வானதி
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
15-5-2016
*