43. காதலர் மகிழ்வூஞ்சல்.

காதலர் மகிழ்வூஞ்சல்.

சோலையிலே மனச் சாலையிலே

சிலைபோலொருவர் நிலைத்திடல்

வலையிட்டவரைச் சிறை செய்தல்

கலையது காதல் மலர்வதால்.

சுந்தர மார்பில் சாய்ந்தும்

மந்திர மொழி தோய்ந்தும்

இந்திர ஆழியில் நீந்தியும்

அந்தரவுலகில் ஆடிப் பாடுவார்.

(காதலர்தினக் கவிதை.)

 

valentinepoem

19 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. bganesh55
    பிப் 25, 2013 @ 01:57:20

    படங்களுடன் நீஙகள் பகிரும் கவிதைகள் படிக்க வசதியாகவே இருக்கின்றன. உங்கள் தமிழ் வழமைபோல் இனிமையாக ரசனையாக இருக்கிறது. மிக ரசித்தேன் வேதாம்மா.

    மறுமொழி

  2. VAI. GOPALAKRISHNAN
    பிப் 25, 2013 @ 03:15:56

    தலைப்பும் கவிதையும் மனதில் ஊஞ்சலாடி மகிழ்விக்கின்றன. பாராட்டுக்கள்.

    மறுமொழி

    • கோவை கவி
      பிப் 26, 2013 @ 18:20:01

      மிக்க நன்றியும் மகிழ்வும் நீங்கள் வந்து கருத்திட்டமைக்கு.
      மனதில் ஊஞ்சலாடி மகிழ்விக்கின்றது.
      ஆண்டவன் ஆசி நிறையட்டும்.

      மறுமொழி

  3. பழனிவேல்
    பிப் 25, 2013 @ 07:41:27

    “சுந்தர மார்பில் சாய்ந்தும்
    மந்திர மொழி தோய்ந்தும்
    இந்திர ஆழியில் நீந்தியும்
    அந்தரவுலகில் ஆடிப் பாடுவார்.”

    மகிழ்வூஞ்சல் மட்டற்ற மன மகிழ்ச்சியை தந்தது.

    மறுமொழி

    • கோவை கவி
      பிப் 26, 2013 @ 18:23:33

      ”..மகிழ்வூஞ்சல் மட்டற்ற மன மகிழ்ச்சியை தந்தது…”
      வந்து கருத்திட்டமைக்கு மிக மகிழ்வும் மிக்க நன்றியும்
      இறையருள் நிறையட்டும்

      மறுமொழி

  4. ranjani135
    பிப் 25, 2013 @ 11:51:44

    உங்கள் கவிதை வரிகள் எங்களையும் ஊஞ்சலில் ஆட்டியது.
    அற்புதம்!
    பாராட்டுக்கள்!

    மறுமொழி

    • கோவை கவி
      பிப் 26, 2013 @ 18:35:53

      அப்பாடா சகோதரி இன்று தான் தங்கள் பெயரை அழுத்த தங்கள் வலையில் வந்து விழுந்தேன்.
      மற்ற நாட்களில் எங்கெங்கோ போய் கருத்திடும் இடம் தேடி வருவேன்.
      அப்படியே பேஃவறிட்டில் பதிந்து வைத்துள்ளேன். வலையும் மண்ணிறம் கறுப்பு என்று கலர்புஃல்லாக இருக்கிறது.

      எனக்கு வந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி. இறையாசி நிறையட்டும்.

      மறுமொழி

  5. Rajarajeswari jaghamani
    பிப் 25, 2013 @ 13:01:24

    மகிழ்வூஞ்சல். அழகு ..பாராட்டுக்கள்..

    மறுமொழி

  6. T.N.MURALIDHARAN
    பிப் 25, 2013 @ 23:09:56

    நல்ல கவிதை நல்ல வாழ்த்தட்டை வடிவமைப்பு.நீங்களே உருவாக்கியதா? அருமை

    மறுமொழி

    • கோவை கவி
      பிப் 26, 2013 @ 21:48:19

      ”..வாழ்த்தட்டை வடிவமைப்பு.நீங்களே உருவாக்கியதா? …”’
      அந்திமாலை உருவாக்கியது சகோதரா.
      தங்கள் கருத்திடுகைக்கு மிக்க நன்றியும், மகிழ்வும்.

      மறுமொழி

  7. mahalakshmivijayan
    பிப் 26, 2013 @ 11:01:31

    அலையும் நீரோடை விழிகளால்
    நிலை தடுமாறும் இதயங்கள் , இந்த வரிகள்
    சூப்பரோ சூப்பர் !

    மறுமொழி

  8. kuttan
    பிப் 27, 2013 @ 15:24:06

    மயக்கும் ஊஞ்சல்!

    மறுமொழி

  9. பூங்குழலி !!!
    மார்ச் 01, 2013 @ 11:14:45

    சுந்தர மார்பில் சாய்ந்தும்
    மந்திர மொழி தோய்ந்தும்
    இந்திர ஆழியில் நீந்தியும்
    அருமை…………..

    மறுமொழி

  10. கோவை கவி
    ஜன 22, 2020 @ 10:35:03

    Anthmaalai web site …..post once 24-2-2013

    மறுமொழி

கோவை கவி -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி