35 தாய் நிலம்

 

mullu

 

scann-1

(.கடைசி மறைந்த வரிகள்.)   நடந்த  போராட்டத்தாலெழுந்த   முட்கம்பி  வேலியது

27- 10- 2009 ம் ஆண்டு இலண்டன் தமிழ் வானொலியில் வாசித்த கவிதையிது.
எங்கோ மறைந்திருந்து தூசி தட்டிய போது கண்டேன்.
பதித்து ஆவணமாக்கலாமென பதிவிட்டேன்.

ஒரு    படம்   தேடலாமென் இதே தலைப்பைக் கொடுத்த போது
இன்னும் மினுக்கமாக அன்று வார்ப்பு .கொம் க்கு
நான் எழுதிய கவிதை கண்டேன் இதோ அது

அந்த ஒரு நாள்..

பயங்கரவாதம் ஒடுக்கப்பட்டுவிட்டதாய்,
தீவிரவாதம் அழிக்கப்பட்டுவிட்டதாய்,
தீவிரமாகத் தம்பட்டம் அடிபடுகிறதே,
தீந்தமிழே இதைக் கேட்டால் வெட்கமுறும்!

எரிகுண்டு, நச்சுவாயு வீசி மக்களை
மரிக்கவைத்த அந்த ஒரு நாள்,
பெரிசும்சிறிசுமாய் இருபதினாயிரத்திற்கும் மேலான
அரிய உயிர்களை எடுத்தது அன்பின்வாதமா!

தினம் ஆள்கடத்தல், வன்புணர்ச்சிகளின்
கனம், கொள்ளையடிப்பு, அகிம்சைவாதமா!
அரசதீவிரவாதம், அரசபயங்கரவாதம்
உரசாத பரவச ஆட்சியா நடக்கிறது!

அந்து ஒரு நாள் மட்டுமல்ல
வந்த பல தசாப்தங்களாக நம்மைக்
கடந்த இனவாதக் கொடுமைகளையடக்க
நடந்த போராட்டத்தாலெழுந்த முட்கம்பி வேலியது!

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
21-10-09

இணைப்பும் தருகிறேன்.  http://www.vaarppu.com/padam_varikal.php?id=44

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 28-4-2017

gate line

4 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. கரந்தை ஜெயக்குமார்
    ஏப் 28, 2017 @ 12:56:57

    நிலைமை மாறும்

    மறுமொழி

  2. raveendran Sinnathamby
    ஏப் 28, 2017 @ 16:57:17

    nice poem &realy

    மறுமொழி

கரந்தை ஜெயக்குமார் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி