255. பா விதை விதைக்கிறேன்!

 

 

 

பா விதை விதைக்கிறேன்!

 

ழுத்துப் பூக்கள்
விழுத்தும் சுகந்தத்தில்
கழுத்தில் மாலையால்
அழுத்தும் கௌரவத்தில்
இழுத்துச் செல்கிறது
எழுத்து ஊர்வலமென்னை.

தனுள் புகுதலோ
அதன் தொழிற்பாடோ
மதன் லேகியமே!
ஆதன்(ஆன்மா) அமைதியாகும்
ஆதாயமும் உண்டு
ஆதாரத் தமிழால்.

 ழையும் காற்றில்
குழையும் ரம்மியத்தில்
உழைக்கும்  தைரியப்பூ!
ஏழையாகாத இதயம்.
மழையாகும் ஆனந்தம்
கீழைத்திசையாய் ஒளிரும்!

ளமான உயிர்க்கரையில்
அளப்பரிய ஆனந்தப்பூ
தளமென் தமிழ்வலை!
குளப்பாதீரென் தமிழிராகம்!
இளப்பமாய் நீரெண்ணினால்
இளக்காரம் உமக்கே!

பூவிதையாய் தமிழில்
பாவிதை விதைக்கிறேன்.
விவிதமான(பலவிதமான) நிவேதனம்(ஒப்புவித்தல்)
பவித்திரமான சேவிதமாக(தொண்டு)
பாவுகிறேன் நானிதை.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
27-11-2012.

 

                           

 

4. பயணம். மலேசியா. 14

4. பயணம். மலேசியா. 14

 

போராளிகள் அடையாளச் சிலை பார்த்தோம். அந்த இடத்தைச் சுற்றியுள்ளவை பாராளுமன்றத் தொடர் மாடி வீடுகள்.

கோலாலம்பூர் நகரம் கிளங் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. மலேசிய மொழியில் குவாலாலும்பூர் என்பது ” கலங்கிய சங்கமம்” என்ற கருத்துடையது.

வெள்ளீயச் சுரங்கங்கள் அமைக்க மலாய் மன்னனால் சீன தொழிலாளர்கள் இங்கு தருவிக்கப்பட்டனர். இவர்கள் கொம்பக் ஆறும், கிளாங் ஆறும் கலக்குமிடத்தில் (இங்கு) தங்கினார்கள். ஆரம்பத்தில் தென்னங் கீற்றுகளாலான இவர்கள் இடங்கள் பின்னர் செங்கற்களாலான கட்டிடமாக ஆகியது. செங்கல்லுகள் ஓடுகளாலான கட்டிடங்களிற்குச்  செங்கற் சூளைகள் அமைந்த இடமே சிலங்கூரில்  பிறிக் பீஃல்ட்(Brik field)  என்று கூறும் லிட்டில் இந்தியாப் பகுதியாக அமைந்தது.  வெள்ளீயச் சுரங்கங்களே பின்பு வணிக மையங்களாக மாறி எல்லை நகரமாக உருவெடுத்தது.

ஏன் இந்தச் சிறு அறிமுகம் என்று யோசித்தீர்களா!

அடுத்த நாள் கோலாலும்பூர் மத்திய சந்தை பார்க்கலாம் என்று சாந்தியும் தீலீபனும் (மகன் – மருமகள்) கூட்டிப் போனார்கள். வாகனம் நிறுத்திய இடத்தின் எதிர்ப்புறம் தெருவைக் கடந்து சிறிது தூரம் நடக்க சந்தை வருகிறது. கடக்க முன்னர் இதில் ஒரு பாலம் உள்ளது. இந்தப் பாலத்தில் நின்று பார்த்தால் கிளங் ஆறும் கொம்பக் ஆறும் சேரும் இடம் தெரிகிறது. முதலாவது படம் பாருங்கள். பாலத்தால் இறங்கி ஆற்றோடு ஒரு பக்கமாக நடந்து

சந்தையை அடைந்தோம். நான் பின்னாலே வந்து படம் எடுத்தேன்.

 google photo.
குட்டிக் குட்டி சதுரங்களாக பெட்டிக் கடை என்று கூறலாம் (மாதம் 3000யிரம் றிங்ஙெட் வாடகையாம்) மலேசிய கைப்பணி, கலாச்சாரப் பொருட்கள் அத்தனையும் வாங்கலாம்.

ஒரு குதூகலம் தரும் இடமாக இருந்தது. நான் இப்போதைய நவீனமான பெரிய மோதிரம் 3 வாங்கினேன்.

வித்தியாசமான நிற கற்கள் பதித்தவை.  சீன,  இந்திய என்று பல வகைக் கடைத் தொகுதிகள் உள்ளன.
மேல் மாடியிலும் கடைகள் உள்ளன.
சுற்றி முடிய சென்டுல் (cendul   )  மலேசிய பிரபல குளிர் பானம், இங்கும் சாந்திக்கு வேணுமென்று பார்த்தோம்.

தேங்காய் பால், மண்ணிறச் சீனி, ஐஸ், ஜெலி கலந்த கலவை. பெரிய ஐஸ் கட்டிகளை அரத்தினால் வெட்டிப் போட்டு மிக்சியில் அடித்துத் தருகின்றனர். 

பிளாஸ்ரிக் உறையில் போட்டுத் தருகின்றனர். உறிஞ்சியினால் அப்படியே உறிஞ்சிக் குடிக்க வேண்டியது தான். பழைய கட்டிடங்களும், நவீன கட்டிடங்களின் கலவையை

old and new building  in the samme place.

இந்தப் படத்தில் காணலாம்.   கீழே இருக்கும் படம் மத்திய சந்தை ஒரு காட்சி வெளியிலிருந்து பார்க்க.

நாளை வேறு இடம் செல்வோம்.

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
24-11-2012.

254. அழகு என்பாள் கவிதை தந்தாள்.

 

அழகு என்பாள் கவிதை தந்தாள்.

 

ழவன் உலகினுயிர் நாடி என்பாள்.
குழலிசைக்கு நற்குண முண்டு என்பாள்.
பழகும் தமிழ் அழகு என்பாள்.
அழகு எல்லாம் கவிதை என்பாள்.

ழகாம் இயற்கை, ஆடும் மயில்
அழகு என்பாள் கவிதை தந்தாள்.
குழவுக்(இளமை) கவிதையாள் மயக்கும் பெண்ணாள்.
மழவுக்(இளமை) கவிதை தமிழில் தந்தாள்.

ழலை தெய்வீக மயக்கம் என்றாள்.
மழலையும் இறைவன் கவிதை என்றாள்.
மழலையாம் உயிர்க் கவிதையும் தந்தாள்.
பழகும் கவிதை மயக்கும் பண்பால்.

யிரின் இராகம் கவிதை என்றால்
பயிரிட முடியும் நற்பண்புகள்.
துயரிடையும் ஆத்மார்த்த தத்துவங்கள்
ஆயிரமாயிரமாய்ச் சொரியும் கவித் தூறல்.

யிர்க்கும் உணர்வுகளின் உயிர்ப்புனல்(குருதி)
உயிர் மெய்யாம் கவிதைச்சாரல்.
உலகை ஆளும், உலகை ஆட்டும்
உணர்வு வரிகளின் ஊக்க எழுச்சி.

டி விளையாடு பாப்பா- கவிதை
ஆடி விளையாடும் மழலைக்கு பாரதி
பாடிப் பயனுறத் தேடி எழுதினான்.
பாடி ஐசுவரியம் ஐரோப்பாவிலும் பெறுகிறார்.

ணனிக் காலத்திலும் மனனம் செய்து
விசனமின்றிப் பாட எண்ண மொளிரும்
வண்ணச் சிந்தனை வெற்றியிது.
மந்திரக் கோலொரு சுந்தரக் கவிதை.

 

(செழியனின் கவிதைப் போட்டிக்கு எழுதிய கவிதை இது)

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
3-10-2012.

 

                           

 

 

30. 50வது ஆச்சரிய வாழ்த்து.

நரேந்திரன் நடராஜா ஒரு
நல்ல நண்பரெம் அயலவர்.
நகைத்திட இவர் வியப்படைய
நாமும் ஒத்துளைத்தோம் இன்று.
ஐம்பது அகவை தொடும்
ஐக்கியமான நண்பருக்கின்று
ஐயுறவு படாத விருந்து.
ஐசுவரியங்கள் பெருக வாழட்டும்!
அமுத வாழ்வில் புவியில்
குமுதினியுடன் இணைந்து இல்லறத்தில்
குத்துவிளக்காய் ஒளிருகிறார் நால்வர்.
குழந்தைகளாய் வளர்ந்த ஆண்கள்.
”சுர்” என்று கோபமடைவார்
”சர்”என்று இறக்கிடுவார்.
பாசக்காரப்பயல் நாம்
பாசமுடன் மகிழ்கிறோம் அயலவரென்று.
மகிழ்வுடன் இனிய பிறந்தநாள் வாழ்த்து.

 

 

க.இலங்காதிலகம் (Vetha) – திலீபன்- லாவண்யா குடும்பம்

 

 

 

 

 

 

39. திண்டாடாது தாண்டு!

 

திண்டாடாது தாண்டு!

 

ண்டு விழி நர்த்தனம்
கண்டு தவழ்ந்தது கீர்த்தனம்!
சீண்டும் காதலின் நிர்ணயம்
கொண்டு வருமோ தீர்மானம்!

மீன்விழி மயக்கமேந்த
மீனாவார் கோடி நீந்த
வீணென எண்ணார் காந்த
மின்னலில் சந்தம் சிந்த.

பொற்குவியலாய், புதையலாய்
அற்புத பதங்கள் உதயம்.
சொற்சுவை அமுத நிதியம்
கற்பனையில் பாவில் பதியும்.

வலான ஆசைக் காதல்
தூவலாகும் மனதின் தூண்டுதல்
நாவலர் என்றால் காதலில்
பாவலராவார் புனையும் பாவில்.

பூவாய்ப் பூவாய் வதனம்
பாவாய் வரையும் நயனம்.
நோவாய் கரையும் சயனம்
ஈவாய் நிம்மதிப் பயணம்.

சிக்குதல் சிக்கல் தரும்.
விக்கியும் தாகம் வரும்.
மக்கிடா ஆசை பெரும்
தக்கையாய் வாழ்வில் சேரும்.

துண்டு அப்பிள் உதடு
கண்டு நேச நண்டு
தூண்டும் நோண்டும் தாண்டு
திண்டாடாது அமைதியைக் கொண்டு!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
20-8-2012.

 

 

 
 

39. கவிதை பாருங்கள்(photo,poem)

 

புகார் முகில்கள்
அகார மெழுத
ஏகாந்தம் தேடவோ
கைகாட்டுது மின்னல்!
வானம் கழுவி
தானம் செய்ய
சோனம்(மேகம்) இப்படியோ
கோணம் பார்க்கிறது!

தீக்குச்சியின்றி தீயுமின்றி
தீயும் மின்னலே!

முடிந்துவிட்ட ஒரு பிறந்த நாள் வாழ்த்தை இங்கு பதிகிறேன்.

வலையில் இருக்கட்டுமென்று.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
15-11-2012.

253. விந்தைகள் புரிந்திடு!

 

விந்தைகள் புரிந்திடு!

 

விந்தில் தானே மானுடம்
விந்தையாய் உருவானது.
அந்தம் வரை வாழ்ந்து
விந்தைகள் புரிந்திடு!

ந்தம் அணைத்துப் பாச
சந்தம் இழைத்து இசை!
முந்தைப் பழைய இசை
சிந்தை மகிழ்ந்து அசை!

முகிழும் அன்பால் ஆளு!
மகிழ்வாயிரு நாளும்!
வாக்குறுதி வரங்களைக் காத்திடு!
பூக்கும் நிலவாய் ஒளிர்ந்திடு!

தீதினைச் சூதினை வெல்ல
சாதனை வித்தை ஊன்ற
வேதனை துடைத்து எறி!
நாதனை ஆராதனை செய்!

புத்துயிர் பிறக்கும்.
புன்னகை புளகித்து நிறையும்.
புகழுடை உயிர் மறையும்.
புதிராகித் துயில் மறக்கும்.

ளராது உழைத்து வாழ
தளராது உன்னை நம்பு!
தளராத நம்பிக்கையே வாழ்வின்
தளராத பிடிப்பு நிமிர்!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
12-11-2012.


 

4. பயணம் மலேசியா 13.

national monument 

 

4. பயணம் மலேசியா 13.

 

மலேசியா போக முதலே கூகிளில் மேய்ந்து ஓரளவு எதை எதைப் பார்ப்புது என்று  ஒரு பட்டியல் போட்டிருந்தோம். அதன்படி தேசிய நினைவுச் சின்னமான( national monument   ) போராளிகள் நினைவுச் சின்னம் பார்க்கப் புறப்பட்டோம்.

45 நிமிடமளவு வாகன ஓட்டம் மருமகள் சாந்தி தனது வாகனத்திலேயே கூட்டிச் சென்றார் – மகனோடுமாகச் சென்றோம்.

உள்ளே செல்லும் பாதை..

சுதந்திரப் போரில் இறந்தவர்கள் – யப்பான் முற்றுகை  இரண்டாம் உலகப் போருடன், மற்றும் உள்ளகப் பிரச்சனைகளாக  1948 -1960 காலப்பகுதியில் 11 ஆயிரம் பேர் இறந்தனராம். இவர்கள் நினைவாகக் கட்டப்பட்டது.

முதல் படத்துப் படிகளால் ஏறிச் செல்ல இந்த வெளியுடன்  இந்தக் கட்டிடம்.

உலகத்திலேயே உயரமான குழுநிலை உருவச்சிலைகள், வெண்கலத்தில் செய்யப்பட்டது. 15 மீட்டர் உயரம் (49.21அடி) 7 ஆயுதம் ஏந்திய போர்வீரர் நிற்பது போல. (வரைகலை designed by Australian sculptor Felix de Weldon . இவரே யு.எஸ்.ஏ யில் உள்ள  war memorial   க்கும் பொறுப்பானவர்.    )

இதனருகிலேயே நினைவுத் தூபியும் உள்ளது.
மலேசியப் பிரதம மந்திரிதுங்கு அப்துல் ரக்மான் 1960ல் ஐக்கிய அமெரிக்காவிற்கு சென்ற போது வேஜீனியாவில கட்டப்பட்ட போர் நினைவுச் சின்னத்தைப் பார்த்து அதில் மனம் கவரப்பட்டு லேக் கார்டெனுக்கு (lake garden) எதிர்ப்புறமாக 1966ல் இந்த உருவச் சிலைகளைக்கட்டி முடித்தனர்.

வருடத்தில் ஆடி 31ல் போராளிகள் நாள் ( warrior’s day   ) என்று அன்று பிரதம மந்திரி மிலிட்டரி தலைவர்கள், போலிசார் இறந்த வீரர்களிற்காக மாலையிட்டு மரியாதை செய்வார்கள்.

ஒவ்வொரு புறக் காட்சி.

இதன் எதிர் புறமாக லேக் கார்டின் உள்ளது. இதன் ஆதிப் பெயர் பப்ளிக் கார்டின். பின்னரே இந்தப் பெயரை 2011 ஆனி மாதத்தில் வைத்தனர்.
மிகப்பரந்த இடப்பரப்பை நிரப்பும்  இப் பிரதேசத்தில் வண்ணத்திப்பூச்சி, மான், ஒர்க்கிட் மலர்கள் என தனித் தனியாகப் பிரத்தியேகப் பிரிவுகள் உள்ளது. நாம் இதனூடாக வாகனத்தில் ஓடியே வந்தோம் உள்ளே சென்று பார்க்கவில்லை.

நீங்கள் லேக் கார்டின் என்று கூகிளில் படப் பகுதியை அழுத்தினால் பிரமாதமான படங்களைக் காணலாம். வியப்புடையது.

இங்கு உணவுடன் சென்று அமர்ந்து முழு நாளையே கழிக்கலாம். சாந்தி தனது சகோதரிகளின் பிள்ளைகளைக் கூட்டி வந்து நாளைக் கழிப்பதாகக் கூறினார்.
நமது கண்டி மலைப்பிரதேசம் போல மிக குளுகுளுவாக இருந்தது.

அங்கம் 14 ல்  வேறு பார்ப்போம்.

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
9-11-2012

தெருவைக் கடந்து வாகனத் தரிப்பிடம் செலலுகிறோம்.

38. கவிதை பாருங்கள்(photo,poem)

 

கெழுக்கட்டையும் மோதகமும்
பழுத்த மாங்கனியும்
தொழுதுனக்கு ஈவேன்
தொழுது மாங்கனி பெற்றவனே!
பொழுதெல்லாம் நாளும்
வழுவில்லாத் தமிழை
வாழும்வரை நீயெனக்கு
முழுதாகத் தா மூத்த விநாயகனே!
(பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை)

 

                                        

 

 

 

தொலைத்தவை எத்தனையோ. 8.

   8.

பனைவளவில் அப்பா உயரமான பாத்தி செய்த பின்னர் கடகம் ஒன்று கொண்டு வந்து, ” வா பனங்கொட்டைகள் பொறுக்குவோம்”.. என்று> சுற்றியுள்ள பனைகளின் கீழ் கொட்டைகளைப்

பொறுக்கிக் கடகத்தில் போட்டோம்.

படத்தில் நீங்கள் பார்க்கும் கடகம் சாதாரணமாக் வீட்டில் சபையில் உணவு பரிமாறும் போது இதில் சோறு, பப்படம் , பலகாரங்கள் வைத்துப் பரிமாறுவார்கள். பனை மட்டை நாரில் செய்த கடகத்தை, குப்பை அள்ளவோ, பனங்கொட்டை பொறுக்கவோ பாவிப்பார்கள். அப்பா கொண்டு வந்தது நாரில் பின்னிய கடகமே.

இதில் நீங்கள் பார்ப்பது பனம் பழம். இதனுள் கொட்டையே

நிலத்தில் ஊன்றப்பட்டது.

ஆச்சி அப்பு வீட்டு மாடுகளை இங்கு மேயக் கட்டினால் பனம் பழங்களைப் பிரித்து நக்கிச் சாப்பிடும். பழத்திலிருந்து வேறான கொட்டைகள் வெயிலுக்குக் காய்ந்து  கொட்டைகள் மீந்திருக்கும்.

அப்பா செய்த மண் மேட்டில் இந்தக் கொட்டைகளை ஒரு அடி இடைவெளியில் புதைப்பார். நான் பார்த்தபடி ”ஏனப்பா இது? ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? ” என்பேன்.

”..இவை மழை, வெயில் பட்டு முளை விட்டு வளரும். நாங்கள் இதை வேற இடத்திலும் நட முடியும். வேற ஆட்களுக்கும் கொடுக்கலாம்”.. என்பார்.

இங்கு
.

…மரம் நடும் உணர்வு,
  இயற்கை பேணல்
என்பன,

செயல்களால் பிள்ளைகளுக்குப் பெற்றோரால் ஊட்டப் படுகிறது.
இதன் பின்னர் அடிக்கடி அப்பாவோடு போய் இதைப் பார்ப்போம். சில முளை விடும். சில கொட்டைகள் பூஞ்சணம் (பூரான்)ஆகி விடும்.

பூரானைக் கோடரியால் பிளந்தால் உள்ளே சுவையான வெள்ளை நிறப் பூரான் மிக ருசியானது. வீட்டிற்கு.   வேலைக்கு வரும் ஆட்களிடம் கேட்டு வெட்டிச் சாப்பிடுவோம்.

இது மட்டுமல்ல – கிணற்றடியில் நாம் குளித்து, கழுவும் நீர் சிறிது தூரம் வாய்க்காலில் ஓடி பின்னர் பரவலாக வளவினுள் பாயும். எப்போதும் ஈரலிப்பான பகுதியாக இருக்கும்.  இங்கு காய்ந்த முழுத் தேங்காய்களை (செத்தல் தேங்காயை) குழியில் புதைப்பார். இது தனக்கு மட்டுமல்ல, கூப்பிடும் தூரத்தில் உள்ள ஆச்சி வீட்டுக் கிணற்றடியிலும் சென்று புதைப்பார்.

 தென்னங்கன்று

எப்போதும் தென்னங் கன்றுகள் தயார் நிலையில் என் தலைக்கு மேல் வளர்ந்திருக்கும். நாம் உள்ளே புகுந்து சோலை போலத் தடவுவோம். தென்னை ஓலைகளாகப் பிரியாது ஒட்டியபடி இருக்கும். மிகவும் குளிர்மையாகவும் அந்த இடம் இருக்கும்.

எப்படி இவைகளை மறப்பது!

பசும் நினைவாகப் படம் விரிகிறது எப்போதும்.

இன்று காணிகள் கைமாறி, யார் யாரோ குடியேறி, வீடுகளும் இடிந்தும், புதிதுகள் கட்டப்பட்டும்…
உண்மையில் இவை தொலைந்து போன சொர்க்கங்களன்றி வேறு என்ன!..!!!!…..

(17-10-2012 ஆனந்த விகடனின்  ”காடுகளின் காதலன்” எனும் ஆக்கமும் தீக்குச்சி பற்ற வைத்தது போல என்னுள் சுடரிட்டதன் விளைவே இந்தப்பதிவு.)

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
2-11-2012.