4. பயணம் (மலேசியா) 5.
திருமணம் இனிமையாக கோலாலம்பூர் சித்தி விநாயகர் கோவில் கொண்டாட்ட மண்டபத்தில் நடந்தது. கீழ் பகுதியில் இரவு உணவு மண்டபமாக ஒழுங்கு செய்திருந்தனர்.
புதுத் தம்பதிகள் போர்ணியோவில் மலேசியா ஆட்சிப் பகுதியான சரவக்கிற்கு (Sarawak ) சென்றனர். இது சாந்தியின் உத்தியோகப் பகுதியின் பரிசாக 3-4 நாள் பயணமாக இருந்தது.
நாமும் மகளவையுமாக அடுத்த நாள் ஒரு வாடகைக் கார் பிடித்து இடங்கள் பார்க்கப் புறப்பட்டோம். முதலில் புட்ற யெயா (Putra Jeya ) என்று கூறும் திட்டமிட்டுச் செய்த புதிய மலேசிய நிர்வாக நகரம் (administrative capital of Malaysia) சென்றோம். இங்கு நாம் ஒரு மணித்தியாலம் செலவழிக்கலாம் என்றார் சாரதி. (ஒரு மணி நேரம் போதாது)
கோலாலம்பூரின் மேலதிக சன நெருக்கம், அடைசல், தேக்கம் என்ற காரணங்களால் நிர்வாக நகரம் இங்கு மாற்றப்பட்டது. தேசிய தலை நகரமாக கோலாலம்பூரும், வியாபார, அரச நிர்வாகம் இங்குமாக உள்ளது.
இது ஆதியில் 1918ல் பிறங் பிசார் (Prang Besar ) என்று பிரிட்டிசாரினால் திறக்கப்பட்ட இடமாம்.
97.4 விகித இஸ்லாமியரும், 1.0விகித இந்துக்களும், 0.9 விகித கிறிஸ்தவரும், 0.4 விகித புத்த மதத்தினரும், இன்னும் பலரும் வாழ்கின்றனராம் புற்ர யெயாவில்.
(3.5கி.மீட்டர்) குறுக்கு வெட்டு 2.7 மைல்களாகுமாம் இதன் இடப்பரப்பு.
சுமார் 9 பாலங்கள் இங்கு உள்ளதாம்.
இது 1990ல் தொடங்கிய வேலைத் திட்டம். 1999ல் கோலாலம்பூரிலிருந்து உத்தியோக பூர்வமாக இங்கு மாறினார்கள். கோலாலம்பூரிலிருந்து 25 கி.மீட்டர் தெற்காக இந்த நகர் உள்ளது.
துங்கு அப்துல் ரகுமான் புட்ற்ரா மலேசிய முதல் பிரதம மந்திரியின் பெயராம். புற்ரா(Putra ) என்றால் இராசகுமாரன். யெயா (success or Victory )என்றால் வெற்றியாளன்-வெற்றி.
புற்ரயெயா கோலாலம்பூருக்கும் தேசிய விமான நிலையத்திற்கும் ( KLLA ) நடுவில் உள்ளது.
மிகப் பெரிய உல்லாசப் பயண நகரமாகவும் நாட்டின் நிர்வாக நகரமாகவும், நாட்டின் அடையாளமாகவும் உள்ளது.
சைபர் யெயா குளம் ( Ciber Jeya lake ) சுற்றி வர உள்ளது.
பிரதம மந்திரியின் இருப்பிடம் பெர்டனா புற்ரா (Perdana Putra ) என்றும்
Perdana Putra. (our photo)
– மகாநாடுகள் நடத்தும் கட்டிடத்தின்(convention center) கூரை வித்தியாசமானது. ( cowboy hat ) கூரை யாக உள்ளது. மிக அழகு!
convention center.
படத்தில் தெரியும் தெருவூடாக சென்று இடது புறமாகத் திரும்பிச் சென்றோம் (வாகனத்தில்). பின் டென்மார்க் வந்து வாசித்து அறிந்தேன். (இதன் கூகிள் படம் தான் நீங்கள் பார்ப்பது.)
இங்கு அரசாங்க நிர்வாகக் கட்டிடங்கள் அனைத்தும் மிக நவீனமாகக் கட்டப்பட்டு ஆடம்பரமாகவும் தோற்றம் தருகிறது. உள்ளே போனதும் பெரிய சதுக்கம் உள்ளது. அதுவே மிகக் கவர்ச்சியாக உள்ளது. வாகனத்தை நிறுத்தி விட்டு நடந்தோம். வலது புறமாக இஸ்லாம் மதக் கோவில் (மொஸ்க்) ரோசா நிற கிரனைட் கல்லிலே கட்டப்பட்டு மிக அழகான தோற்றமாக உள்ளது.
My husband taking photo.
google photo.
இதன் ஸ்தூபி 116 மீட்டர் உயரமாக, 36 மீட்டர் சதுர அடியான அகலமாகக் கட்டப்பட்டது.15 ஆயிரம் மக்கள் கூடித் தொழ முடிந்த இடமாம். பக்தாத்திலிருந்து கட்டிடக் கலைஞர்கள் வந்து கட்டப்பட்டதாம். இந்தப் பள்ளிவாசல் அடித்தளச் சுவர்மொறக்கோ காசபலன்ங்கா(casabalanca) மாதிரியில் அமைந்ததாம். இதன் உள்ளே செல்ல அவர்களைப் போல உடையணிந்தால் தான் செல்ல முடியுமாம். செல்ல அனுமதி கிடைக்குமாம்.
நாம் வெளியே நின்று பார்த்து, புகைப்படங்கள் எடுத்தோம்.
our photo.
பள்ளி வாசல் மிக அமைதி, அழகோ அழகு, ஆடம்பரமாக இருந்தது.
இனி அங்கம் 6ல் தொடருவோம்.
வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
3-8-2012
0.000000
0.000000