7. அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 7

img_03031
(பெடரேசன் சதுக்க வாசல் 2 பேருந்து தயாராக உள்ளது. ஏறினால் மெலபேர்ண் சுற்றலாம்.)

அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 7

 

மெல்பேர்ண் நகரம் சுற்றிப்பார்த்தல்…..
என்ன!.. மழைத் தூற்றலாக இருந்தது. எடுத்த படங்கள் மழைத்துளிகளுடன் இருந்தது. அதனால் எங்கும் இறங்கிச் சுற்றவில்லை. வாகனத்திலேயே விபரங்களை ஒலி பெருக்கி மூலம் அறிந்தோம்.
ஆம் வாகனத்தில் ஏறும் போதே காதில் வைத்துக் கேட்க மின்சார இணைப்பு தருகிறார்கள். எந்த மொழியில் தேவையோ அதற்குரிய இலக்கங்களை அழுத்திக் கேட்கலாம்

img_01761
வானெட்டும் கட்டிடங்கள் மலைப்பாக இருந்தது. ” அமெரிக்காவும் இப்படித் தான் இருக்குமோ ” என்றேன் இவரிடம்.
பல்கலைக் கழக வைத்தியசாலைக் கட்டடம்,

(எனது படம் மழைத்துளியோடு எடுத்தது. அடுத்து வருவது கூகிள் படம்.)img_03121

medical-building

கிங்ஸ் டொமைன்ஸ் பாக், குவீன்ஸ் விக்டோரியா பூங்கா பூக்கள் கடிகாரம்,

img_03991

img_04161-jpg-floral-clock

google photo   of flora clock 25561615-the-floral-clock-and-the-statue-of-king-edward-vii-in-the-queen-victoria-gardens-in-melbourne-in-aus

and fountain   walker-fountain-kings-domain-melbourne-water-featu

கான்சர் வைத்தியசாலைக் கட்டிடம்,  உலகில் அதிக தோல் கான்சர் அவுஸ்திரேலியாவில் தானாம்.  மிக அழகான கட்டிடம். முழுதாக என்னால் எடுக்க முடியவில்லை ஆதலால் இதுவும் கூகிள் படமே.

comprehensive-cancer-center

நாற்சதுர விளையாட்டிடம் ஸ்ரேடியம்  ஏஏஎம்  பாக் என்று கூறும் இடம்.

img_04221

This is my photo and down google....AAMI park   (Melbourne Rectangular Stadium)

1024px-aamipark

பாராளுமன்றம் என்று விசேட இடங்களை விபரித்தபடி பயணம் தொடர்ந்தது.

img_04191

இப்படி மரத்தைக் கண்டதும் தென்னை பனை என்று மனம் ஏமாந்தது. 

எங்கு இறங்கிப் பார்க்க விருப்பமோ அங்கு இறங்கிப் பார்த்து அடுத்த அதே இன வாகனம் நிற்கும் தரிப்பிடத்தில் பயணச் சீட்டைக் காட்டி ஏற முடியும்.

எமக்கு உள் நாட்டிற்குள் விமானப் பயணம் செய்ய சிறு பயணப் பெட்டி ஒன்று (traveling bag) வாங்க வேண்டிய தேவையாக இருந்தது.
வாகனச் சுற்றுலா முடிய நாம் உணவு உண்டோம். சீஸ் பேகரும் மில்க் ஷேக்கும் தான். ஆம் ஆரோக்கியமற்ற உணவு தான். அவசரத்திற்கு வேறு வழியில்லை. சுற்று வட்டத்தில் கடை தேடிப் புகுந்தோம்.
மெல்பேர்ண் முடிய கன்பரா நகரம் செல்வது எமது திட்டம். ஆம் பேருந்தில் கன்பரா செல்லும் திட்டம்.
பேருந்து நிலையம் எங்குள்ளது என்று பயணப் பெட்டி வாங்கிய கடையிலேயே விசாரித்த போது ” சவுதேன் குறொஸ் ” க்குப் போக வேண்டும், டிராம் வண்டியில் பயணிப்பது உள் நகரத்தில் இலவசம். இந்தப் பக்கத்தால் போய் அந்தப் பக்கம் திரும்பி வருகிற டிராமில் ஏறுங்கள் 3வது தரிப்பிடத்தில் இறங்குங்கள் என்று அழகாகக் கூறினார்கள்.
இதன் படி துணிந்து ஏறிச் சரியாகப் போய் இறங்கி விசாரித்தோம். அழகாக விபரங்களை எழுதித் தொலை பேசி இலக்கத்துடன் தந்தனர்.

stores_located_in_southern_cross_station

stock-photo-melbourne-australia-november-ticket-office-and-woolworths-supermarket-at-southern-cross-336538412

திரும்பவும் அதே போல டிராம் ஏறிய இடம் வந்து சேர்ந்தோம். தெரியாத இடத்தில் இதை ஒரு சாதனை போலக் கருதி எங்களை நாங்களே மெச்சினோம்.
ஏன் கன்பராவுக்குப் பேருந்துப் பயணம்?…. புகையிரதம், விமானம் வேகமாகப் போகும் காட்சிகள் பார்ப்பது குறைவாகும். பேருந்தில் அழகாகப் பார்த்துப் போகலாம். ஆனால் கன்பராவிற்குப் பேருந்து 8 மணித்தியால ஓட்டம், பரவாயில்லை என்று முடிவெடுத்தோம்.
இப்போது தம்பி மகன் சுபோதனுக்கு தொலை பேசியில் கூறினோம் நாம் வீடு வரத் தயார் என்று. அவரும் வந்து கூட்டிப் போனார். நடுப் பட்டினம், வாகனம் நிறுத்தும் பிரச்சனையால் இந்த ஏற்பாடு.
சரி இரவாகுதே இரண்டுங் கெட்ட நேரம் இரவுணவு வாங்கிப் போவோம் என்று தம்பி மகனிடம் கூற சரி என்று றிச் மகால் (waymont)  உணவகம் சென்றோம்.  

rich-mahal

Enter a caption

(last 3 pics google)

என்ன வாங்கலாம் என்றால் செவ்வாய் கிழமைகளில் அப்பம் செய்வார்களாம் ஒருவர் சுட்டுக் கொண்டு நின்றார். அதை கொம்போ -1 கொம்பொ – 2 என்று பணிக்க (ஓடர் பண்ண) வேண்டுமாம். எடுத்துக் கொண்டு போவதாக கூறினோம். ஒரு முட்டை அப்பம், ஒரு பாலப்பம், ஒரு சும்மா அப்பமென தேவையான அளவு வாங்கிக் கொண்டு போனோம். கொம்போ என்றால் கொம்பினேசன் (எதோடு எது என்று) ஆக இருக்கும் என்றார் இவர்.
வீட்டிலே உணவு காத்திருந்தது. ஆயினும் அப்பம் மேலதிகமானது தான்.
அன்று நன்கு அலைச்சல் நடை…..நடை. இரவு நன்கு நித்திரை கொண்டு எழுந்தோம்.

மிகுதியை அடுத்த 8ம் பகுதியில் காண்போம்.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
31-10-2016.

AAMI park   (Melbourne Rectangular Stadium)

aamipark3

2. நான் பெற்ற விருதுகள்

 

4698127_orig-jpg-hh

 

தடாகம் கலை இலக்கிய வட்டம் உலகம் தழுவிய கவிதைப் போட்டி
மாதம் தோறும் நடத்துவார்கள்.
அதில் பங்கு பற்றி பெற்ற சிறப்புகள் இவை.
முன்பு பெற்றது ” கவியூற்று.”
அதன் பெயர் இப்போது ” கவினெழி”
என்று மாற்றினார்கள்.

12932819_10207960930878314_8540364630834742709_n

unnamed

unnamed-1

கவியூற்று
கவினெழி.
கவியருவி.
குழுவிற்கு மனமார்ந்த நன்றி.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.  29-10-2016.

retro-clipart-of-a-line-border-of-black-and-orange-diamonds-by-andy-nortnik-302

5. கண்ணதாசன் சான்றிதழ் 6

13723882_1751422235122551_619705988644798997_o

மனம் வலிக்கிறது.

முகிலோ அலையோவென மருள் காட்டும்
முடிவற்ற அழகிய வெளியது உலகில்.
துடிப்பு மகிழ்வுடன் மக்கள் உலாவ
துலங்கும் வானெல்லை காணா அழகு.

முத்தமிடுவது போலப் பாவனை காட்டி
முத்தமிடாத பிரமிக்கும் கடலும் வானும்
சங்கமிப்பதாய்க் காட்டும் மாய அழகு
பொங்கும் நைஸ் கடற்கரையழகு குலைந்தது.

பயங்கரவாதம் வேலி தாண்டித் தாங்கொணா
மனவலிகள் தருவது புதுமையல்ல சூரியன்
உதித்து மறையும் செயலாக ஆகிவிட்டது.
அழகு நைஸ்நகரில் நாமுமொருமுறை வலம்வந்தோம்.

பாரவண்டியை அதி வேகமாய்ச்  செலுத்தி
பாதகமாய் எண்பத்தி நான்கு உயிர்கள்
பிள்ளைகள் பெரியவர்களாக பலியெடுத்ததும் பலர்
படுகாயமுற்றதுமான தகவலால் மனம் வலிக்கிறது.

விழுந்திட நொண்டும் வகையாய் தமிழில்
எழுகின்றது பல எழுத்துப் பிழைகள்.
பழுது கண்டு மனம் வலிக்கிறது.
இழுக்குடை நிலை இது மாறட்டும்.

அழகு, இயற்கை, ஆனந்தக் கொண்டாட்டம்.,
பழகும் உடன் பிறப்புகளைப் பிரிந்தோம்
துழாவும் மன வலிகளுடன் மேற்கிலெமக்கு
பழகிவிட்ட பாழும் துன்ப விளையாட்டிது

சுற்றிலும் ஈட்டிகளாக வெற்றி ஏணிகளாக
நற்குணம் மாற்றும் குற்றுயிராகவும் ஆக்கும்
கற்றவனும் கல்லாதவனும் பெறும் சாகசமிது
குற்றிக் குதறி மனம் வலிக்கிறது

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
15-7-2016

2008-7-6_11638_flower_divider_13793720_42120324_std

1. நான் பெற்ற விருதுகள்.

14632817_1798499823748125_4523818041012046638_n-1

 

எனது எழுத்துலகப் பயணத்தில் பெற்ற விருதுகளை
இங்கு பதிவது இங்கு தேவையெனக் கருதுகிறேன்.
கண்ணதாசன் சான்றிதழ் காலக் கவிதைகளுடன்
தனி பதிவாக இங்கு பதிகிறேன். அதன் மூலம்
இறுதியாகப் பெற்ற விருதுடன் இப்பதிவைத் தொடங்குகிறேன்.

அங்கீகாரம்

(சங்காத்தம் – இணக்கம்)

வாழ்தலின் ஒரு அங்கம்.
தாழ்தலைத் தடுக்கும் அங்கீகாரம்.
ஆழ்தலை ஏந்தும் அங்குசம்.
இங்கிதமான கைப்பிடி முன்னோக்க.

எங்கும்  வசப்படாது ஏமாற்றும்.
தங்காதும் ஓடும் தரித்திரமாக.
கங்கை தான் திறமைக்கு.
கிங்கிணியான இன்பம் எட்டினால்.

வங்காள விரிகுடாவாகும் பலருக்கு.
பொங்கி வழிந்து ஓடும்.
சங்க காலம் முதல்
சங்கடம் தரும் புள்ளி.

சங்கரன் முதல் சாதாரணனும்
அங்கீகார சங்கமத்தில் ஐக்கியமாக
சங்கற்பமிடுவதே பெரும் யாகம்.
சங்காத்தம்  எம் திறனிலுண்டு.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
26-10-2016

oo

 

 

அன்று கவியுலகப் பூஞ்சோலையாக இருந்தது.

இன்று     (25-10-2016) தமிழமுது கவிச்சாரல் என்று

பெயர் மாறியவர்களிற்கு எழுதிய நன்றி வரிகள்.

 

line-png-3png

6. அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 6

img_02591

அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 6

அமரரான என் தங்கையின் இலங்கையில் வாழும் மகளின் மகன் தோழனாக நின்றார்.
திருமண மண்டபத்தில் முதலில் பால்சோறு, கட்டைச் சம்பல் என்று கூறுவோம் அதை மேலே தூவி சிறிது கிறீமும் விட்டுப் பரிமாறினார்கள்.

img_02581

சிறு வாழையிலைத் துண்டு வெட்டி அதன் மேல் தான் பால் சோறு ( கிரிபத்) புக்கை பரிமாறியிருந்தது. கேக் துண்டு போல நாற்கோணமாக வெட்டி வித்தியாசமாக இருந்தது. நல்ல சுவையாகவும் இருந்தது.

14359230_10153662383936403_8411760873378307168_n
தாலி கட்டி முடிந்தவுடன் திருமணப் பதிவும் நடந்தது. திருமணப் பதிவுகாரரும் ஒரு சிங்களப் பெண்மணி சின்னஞ் சிறுவர்களைக் கூப்பிட்டு மணமக்களோடு சுற்றி நிற்க வைத்து சின்ன ஒரு பேச்சு நடத்தி மோதிரம் மாற்றி எழுத்து நடத்தி முடித்தார் அது வித்தியாசமாக இருந்தது. இதன் படங்கள் தேடியபடி உள்ளேன். கிடைத்தால் பயணக் கதை இடை நடுவில் போடுவேன்.
எழுத்து முடிய…. கவனியுங்கள்!!…அதே கூறைச்சேலை பட்டு வேட்டியுடனேயே பென்னம் பெரிய திருமண கேக் ஒன்று வெட்டினார்கள் மணமக்கள்.

cake-2

குழுவாகப் படங்கள் எடுத்த பின்பு, படங்கள் எடுப்பவர்கள் மணமக்களைக் கடத்திக் கொண்டு போய் விட்டனர் வெளியே படம் எடுக்க என்று.

மாலை நாங்களும் வீடு வந்தோம்.
அடுத்த நாள் மெல்பேர்ண் நகரம் சுற்றிப் பார்க்க என்று தம்பி மகன் எங்களை மெல்பேர்ண் நடு பட்டினத்திற்குக்   கூ ட்டிப் போய் இறக்கி விட்டுimg_02941

வாகனத் தரிப்பிடம் தேடி அலைந்தார். நாங்கள் எமது வேலை முடிய மாலையில் தொலை பேசித் தகவல் தருவதாகக் கூறி எங்களை விட்டிட்டுப் போகச் சொன்னோம் அவருக்கும் வேலை என்பதால் போய்விட்டார்.

மெல்பேர்ண் நடு மையம் (பிஃளின்டேர்ஸ் தெரு) புகையிரத நிலையத்தின் முன்பு நிற்கிறோம். சுற்றி வர பெஃடரேசன் சதுக்கம். நின்ற இடத்திலிருந்து 2-3 படங்கள் தட்டினேன்.

img_02931

img_02971
” மெல்பேர்ண் விசிட்டேர்ஸ் சென்ரர் ” ஒரு வகையில் சொல்லப் போனால் ஊர் சுற்றுவோரின் தகவல் நிலையம் நீல நிறத்தில் ஒரு பக்கத்தில் எமது கண்ணில் தட்டுப் பட்டது. ” இதோ பாருங்கோப்பா உள்ளே போய் பார்ப்போம் ” என்று புகுந்தோம்.

img_02981
சிறிய இடமாக இருந்தது. படிக்கட்டு தெரிந்தது. படியால் கீழே இறங்கினோம் பரந்த இடத்தில் பல கந்தோர்கள், கழிவறை வசதி என்று இருந்தது. நகரம் சுற்றிப் பார்க்கும் பயணச் சீட்டு வாங்கினோம். ஒரே பயணச் சீட்டை ஒரு நாள் பாவிப்பது, 2 நாள் பாவிப்பது என்ற வகையில் வாங்க முடியும். நாம் ஒரு நாளுக்காக வாங்கினோம். நாளை பேருந்தில் கன்பரா நகரம் செல்வது எமது திட்டம். மேலே வந்து…..
பெடறேசன் சென்ரர் (சதுக்கம்) சிறிது தூரம் நடக்க ஒரு கட்டிடம். உள்ளே மிக அழகாக இருந்த கட்டிடத்தில்

img_03021

ஒரு பெரிய குழந்தை உருவம் தலை குப்புறத் தொங்கியது. அதைப் பார்த்துத் திகைத்து விட்டேன்… இஃதென்ன அநியாயம் என்று!… உடனே இதைப் படம் எடுத்தேன்.

img_02991

அதன் கீழே யோகா செய்தனர். ஏதோ குழந்தைகள் கொண்டாட்டத்திற்காகச் செய்தது என்று கூகிளில் தேடித் தேடித் தகவல் எடுத்தேன்.
விவரம் சிறிது படமாகப் போடுகிறேன் பாருங்கள்.

unavngivet-png-2

reynold

( எழுத்துகளுடன் உள்ள படங்கள் இரண்டும் கூகிள் படங்கள்)
மற்றவை எனது படங்கள்)
அடுத்து நகரம் சுற்றிப் பார்க்க மறுபடி நடந்து (சுற்றுலாவில் எமது நடைப் பயணமும் இங்கு தொடங்கியது) முதல் நின்ற இடத்திற்கு அருகில் இருந்த மாதா கோயில் அருகில் பேருந்தில் ஏறிச் சுற்றினோம்.( சிவப்புப் பேருந்து நிற்குது பாருங்கோ! . இது கூகிள் படம்)

image

சுற்றுதல் 45 நிமிடம், ஒரு மணி என்று இருக்கும். விரும்பிய இடத்தில் இறங்கி ஏறி எத்தனை தடவையும் சுற்றலாம்.

(சேச் படியில் நின்று எடுத்த புகையிரத நிலையப் படம் 2)

img_03081

img_03061

இத்துடன்  அடுத்த 7வது பதிவில் சந்திப்போம்.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
24-10- 2016

canada-nakatam

456. அன்பெனும் நதியிலே

62114_252088771593849_1470896617_n

அன்பெனும் நதியிலே

எத்தனை வருடங்களின் பின்னே
இலங்கை டென்மார்க் உறவுகள்
ஆனந்தமான அன்பெனும் நதியினிலே
அவுஸ்திரேலியாவில் திருமணத்திற்கான இணைவு.

வார்த்தைகளில் விபரிக்க முடியாத
வாஞ்சையான அன்பு உறவுகளை
வாழ்கவென மனம் வாழ்த்தியது
வாசமிகு அன்பெனும் நதியினிலே.

கணனியிலிருந்து விடுதலையாகிக் கவனமது
கரைந்து அன்புச் சேறாகியது.
மனச் சுவரில் சித்திரமாக்கியது
மகசூலிட்டது அன்பு நதி.

வாழ்வினுறுதிக்கு அன்பு வச்சிரம்.
வாத்தியமாகியும் இசை சேர்க்கும்.
வாரணமாகும் வாரி வழங்கினால்.
வானுயர் இனிமை அன்பு.

பற்றுங்கள் அன்பால் ஒற்றுங்கள்.
வற்றிடாத அன்பு நதியின்
உற்பத்தியூற்று தன்னம்பிக்கை முத்து
அற்புத விளைச்சல் தரும்.

அவம் அழிக்கும் அருட்சோதி.
அர்ப்பணமாக்கி எங்கும் சமர்ப்பியுங்கள்.
அன்பு நதி ஆர்வமூட்டும்.
வன்மமழியும் அன்பில் நீந்துங்கள்.

கவி ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
2-10-2016.

0066

4. கண்ணதாசன் சான்றிதழ்

13603261_1748417112089730_3740032208945390882_o

முதல் காதல்

*

( ஐந்தாவது கண்ணதாசன் .சிறப்புச் சான்றிதழ்
முதற் காதல்.)

சந்தம் துள்ளும் பதின்ம வயதில்
தந்தையின் நண்பர் மகனெனும் இனிய
பந்தத்தில் எம்மில்லத்தில் குடி புகுந்தார்.
விந்தையில்லை நேச வனத்துள் இயல்பாகவே நாம்.
தொய்யாத ஒழுக்கவியல் வேலியுள் காதல்
செய்யோனென இரகசியமாகச் சுடர் விட்டது.
மெய்யாக வெளியுலகிற்கு வெளிச்சமான போது
பெய்தது எதிர்க்கணைகள் எம்மில்லத்தில்.
எட்டுப் பிள்ளைகள் இவரின் தந்தை
சட்டென இதயம் நின்று விண்ணுலகேகினார்.
கட்டான குடும்பப் பொறுப்புகள். நிலையில்
கடமை கருதி தென்னிலங்கை சென்றார்.
குடும்பத்தில் மூத்த பிள்ளைகள் நாமிருவரும்.
கடிதம், பிரிவு காத்திருப்பாய் நீண்டது.
கடினமான ஏழு வருடங்கள் காதலாடினோம்.
கவிதையும் காதலுமப்போது பின்னிப் பிணைந்தது.

இலையாம் தேயிலை இறப்பர் தோட்டத்திலிவர் தொழில்.
மலையாய் நெஞ்சிலுயர்ந்த  அலை
நிலையானது கடிமணமாய். தெற்கிற்கு மாறினேன்.
தளிர்விட்டது குடும்பம் குழந்தைகள் பேரர்களாக.
முதற்காதல் முழுக் காதலாகி நர்த்தனமிடுகிறது:
முதுவேனில் வீணையுடன் இன்பக் கீர்த்தனமாகிறது.
மதுவிது குறையாத அன்புப் பாலமிது.
வலியது உண்மையான நடிப்பில்லையன்றேல் இனிப்பது.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
8-7-2016

stock-photo-flower-line-for-border-and-frame-different-version-in-my-portfolio-11545657

 

2. நூல் மதிப்பீடு – முன்னுரை – வாழ்த்துரை

14095884_430843800372992_5121173612954359690_n

thanu

நெடும் தீவு  தனுவிற்கு  நான் எழுதிய 

வாழ்த்துரை

” வீறு கொண்டெழும் வாலிபம்
ஆறு போன்று பாயும்.
தீரமுடை வழி காட்டலில்
நேரிய பாதை செல்லும்”

சமூக விழிப்புணர்வு கொண்ட இளம் வாலிபன் இலங்கை யாழ்ப்பாணம் நெடுந்தீவு தனு எடுக்கும் கன்னி முயற்சியான புத்தக வெளியீட்டு முயற்சி மிகவும் தேவையானதான ஒரு முயற்சி.
போரின் வெடிப்புகளாலும், அமைதியற்ற அநாகரீகச் செயல்களாலும் நொந்து போன மனதிற்கு இதம் தருமொரு இனிய முயற்சி.
சேவியர் தனிநாயகம் அடிகளாரின் தந்தை நாகநாதன் மற்றும் அவர் தந்தை வழிப்பூட்டனார் தனிநாயக முதலி ஆகியோர் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். அப்புகழ் பூத்தவர்கள் உதித்த இடத்தில் உதித்த தனுவும் தனது தமிழார்வம், தேசப்பற்றுக் கொண்டு தமிழாள ஆர்வமுடன் அடியெடுத்து வைக்கிறார்.
தம் சுய அறிவிழந்து போதை மருந்துப் பழக்கத்திலும், தீய வழிகளிலும் செல்வோர் மத்தியில் வேதனைப் பாதையில்; நடக்காது சாதனைப் பாதையில் அடியெடுத்து வைக்கிறார்.
இவரது ஓரிரு கவிதைகளைப் பர்க்கும் போது ” எம் ஊர் ” என்ற கவிதையில் இவரது ஊர் உணர்வு வீசுகிறது. தனது ஊரைத் தெரியாதவர்களிற்குக் கவி வரிகளில் மிக இனிமையாக விவரிக்கிறாh. நெடுந்தீவைப் படம் பிடித்துக் காட்டுவதாக நான் உணர்ந்தேன்.

‘படகு புதியவர்களிற்குத் திகில் எமக்கோ
பழஞ்சோற்றுப் பதம்”…என்கிறார் சிறப்பாக.
இன்னொரு கவிதையில் வவுனியா சாலை ஓரத்தில் தான் கண்ட நிகழ்வை உயிரெழுத்து வரிகளாக ”அ ” விலிருந்து ”ஒள” வரை ஒளவையாரின் பாணியில் வரைந்துள்ளார்.
”இல்லாத எம்மிடம் ஈக்கள் மொய்ப்பதேனோ”
என்று ஏழைமை நிலையை வேதனை பொரும எழுதுகிறார். இந்த வேதனைகள் நாட்டிலிருந்து வடிந்து மறைந்து மகிழ்வு நிலைக்க வேண்டும்!
”உணர்வாயா” எனும் கவிதையில் முதியோர் இல்லம் பற்றி
”கூவிக் கொண்டே என் ஆவி போயிடுமோ!
கூவி முடிவதற்குள் இவ்வில்லம் வாருமய்யா!”
என்று பிள்ளைகளின் பாராமுகத்தை, வயோதிபத்தைக் கவனிக்காத குணங்களை எடுத்துரைக்கிறார்.
பல கவிதைகள் இணைக்கப் பட்டுப் புத்தகமாகிறது. ஓவ்வொரு வரிகளும் தமிழ் வாரிசுகளிற்குப் பாடமாக அமைந்து வழிகாட்டட்டும்.
வாலிபன் தானே! காதலை விடுவாரா! ”காத்திருக்கும் காதல்” கவிதையிலும் ஊரை விட்டு வைக்கவில்லை.
”கடலோரம் வீசும் கூதற்காற்றில் என்
காதில் கதை சொன்ன ஆசை மச்சானே!
இதயத்தைக் கடலில் கரைத்தாயா
ஊர் வந்தால் சொல்லி விடு”
என்று காதலில் ஏங்குகிறார்.
இவரது கவிதைப் பயணம் – எழுத்துப் பயணம் வெற்றிகரமாக உச்சம் எட்ட எனது நல்லாசிகளை வழங்குகிறேன்.
பலப்பல நூல்கள் வெளியிட்டு எழுத்து வானில் தனு கொடிகட்டிப் பறக்க இறையாசி நிறையட்டும்.
மனமார்ந்த வாழ்த்து. வாழ்க! வளர்க!
__
திருமதி வேதா. இலங்காதிலகம்
(பெட்டகோ)
ஓய்வு பெற்ற பாலர் நிலைய ஆசிரியை.
கவிஞர் (வேதாவின் வலை)
டென்மார்க். 7-6-2015

div138

5. அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் 5.

img_01541

அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் 5.

 வெள்ளிக்கிழமை  மெல்பேர்ண் சிறீ சிவா விஷ்ணு கோயிலுக்குப் போனோம்.

img_01631

மாப்பிள்ளையின் தந்தையின் தங்கை வந்தார். அவருடன் நாங்கள்

img_01591

எல்லோருமாக இரண்டு வாகனத்தில் போனோம். அதிக தூரமில்லை. கோவிலில் கொடியேறியதால் விசேட பூசை நடந்து கொண்டிருந்தது.

img_01471
ஒரு சில படங்கள் தான் எடுத்தேன்.

img_01491
மெல்பேர்ண் சிவா விஷ்ணு கோயில் என்று கூகிளில் நிறையப் படங்கள் பாருங்கள். (எனக்கு இப்படிப் பார்த்து ஆராய மிகப் பிடிக்கும்).

img_01501

தரிசனம் முடிய கோயில் உணவகம் என்று போக அது மூடும் நேரமாச்சு என்று

img_01611

img_01601

வேறொரு அருகிலுள்ள இடம் சென்று எல்லோருமாக உணவருந்தினோம்.

ஒரு மகிழ்வான ஒன்று கூடலாக இருந்தது. மறக்க முடியாதது. நன்றி புவனாவிற்குச் சேரும். அவர் தான் உணவென்று அனைவரையும் அழைத்தார்.

img_01791
இந்த இடை நடுவில் ஒரு திருமண வாழ்த்துக் கவிதை ஏற்கெனவே எழுதி தம்பி மகனுக்கு மெயில் பண்ணி அதைச் சட்டம் இட தம்பி மகனுடன் திரிந்தோம். எழுத்தைச் சுற்றி நல்ல வேலைப்பாடுடன் சட்டமிடலாம் என்றால் ( மாதிரி கூட அச்சுக் கூடத்திற்கு மெயில் அனுப்பினோம்) ஏ4லும் பெரிதாக என்று செய்தும் முதலாளி வெள்ளி தங்கமென மினுக்கும் நிறத்தில் சட்டமிட்டு எம்மை மயக்கி விட்டார். ஓன்றும் செய்ய முடியவில்லை எந்த வேலைப் பாடுமின்றி அவர் பண்ணியபடியே வாங்கி வந்தோம்.

( பிரதீபன் சாந்தினி என்று பயணக் கதைக்கு முன்பு
நான்போட்ட 45வது வாழ்த்துப் பதிவு பாருங்கள் )     பின்பு  தம்பி மகன்

img_01991

இருக்குமிடம் சென்றோம். அது இன்னொரு மலையோடு சேர்ந்த அழகான இடமாக இருந்தது.

img_02051

222222
அவுஸ்திரேலியாவில் என்னைக் கவர்ந்தது வீடுகள். இது எவ்வளவு அழகான வீடு என்று வியக்க அடுத்த வீடு அதை விட அழகான அமைப்பாக இருந்தது. சரி மற்றதைப் பார்ப்போம் என்றால் அது இன்னும் மிகத் திறமாக இருந்தது. கொழும்பு 7 – சினமன் காடின் – கறுவாக்காடு போல பூந்தோட்டம் பச்சைப் பசேலென்று மாளிகை போன்ற அமைப்புடன் இருந்தது. என் கணவர் பகிடி   விட்டார் ” மாறிடுவோமா இங்கு! ” என்று.    ” எமது பென்சன் பணத்தை இங்கு தருவார்களானால் நாளைக்கே சம்மதம் ” என்றேன் நான். பணமில்லாமல்  எங்கே  என்ன செய்ய முடியும்!…. சொல்லுங்கள்!!…….

img_02081

img_02171
அடுத்து நெடு நெடு என்று சாலையோரங்களில் வளர்ந்துள்ள மரங்கள். சாம்பல் நிறமாகவும் அதன் தோற்றமும் வித்தியாசம் அழகு என்று என்னை வெகுவாகக் கவர்ந்தது. இறுதியில் அது யூகலிப்டஸ் மரங்கள் என்று அறிந்தேன். முற்றிய மரங்கள் வெடித்த பட்டைகளுடன் இருக்குமாம். சாலையோர மரங்கள் அரசாங்கக் கண்காணிப்பில் வளர்க்கும் முற்றாத மரங்கள். மிக மிக அழகு. அவ்வப்போது இந்த மரங்களின் படங்கள் தொடரும். இத்தோடு முடிந்து விடாது.
யூகலிப்டஸ் மிகவும் பயனுள்ள மரம். அதன் இலையிருந்து எண்ணெய் எடுக்கப் படுகிறதாம். இயற்கைச் சூழலில் இந்த எண்ணெய் ஆவியாகி சிறு சிறு துளிகளாகக் காற்றில் மிதக்கிறதால் சூரிய ஒளிபட்டு இவை நீல நிறமாகித் தெரியுமாம். சிட்னியின் மேற்குப் புற மலை (Blue mountaim ) நீல மலையெனப் பெயர் பெற்றது இதனால் தானாம்.
20  முதல் 50 மீட்டர் வரை இன்னும் சில 90 மீட்டர் வரையும் உயருமாம். இலை மிக கடினத் தன்மையானதும் உடைத்து விட்ட விரலாட்டம் நேர் குத்தாகத் தொங்கும். காற்றின் ஈரலிப்பு நீர் இலையூடாக மரத்திற்கே வடியுமாம்.

img_00821-jpg-can
நமது நாட்டில் டென்மார்க்கில் ஒரு மரம் அடர்ந்து வளருமானால் கிளைகளை நறுக்கித் தெருவை நிம்மதியாக இருக்க விடுவார்கள் – மின்சார இணைப்புகள் அவுஸ்திரேலியா போல மண்ணில் புதைத்தாலும். ஆனால் அங்கு தெருவிலும் வஞ்சகமின்றி மரக் கிளைகளை நன்கு படரவிட்டுள்ளனர். அழகான பெரிய மாடிக் கட்டடங்களை படமெடுக்க முடியாது மரங்கள் அழகாகப் படர்ந்துள்ளது. இது கவனிக்கப் பட்ட முக்கிய விடயமாக எனக்கு இருந்தது. இயற்கையை இயற்கையாக இருக்க விட்டுள்ளனர்.மிகப் பெரிய விடயம் இது என்பது எனது அபிப்பிராயம்.

.
அடுத்த நாள் 11ம் திகதி காலை 8 மணி மாப்பிள்ளைத் தோய வார்ப்பு என்றும் திருமணம் 9 மணி என்றும் மிக சிறப்பாக நடந்தது.

14572111_10154134039363742_1053643923_o

மாப்பிள்ளை பகுதியில் நாம் தெத்தம் பண்ண நின்றிருந்தோம். இலங்கையிலிருக்கும் தங்கை மகள் தோழியாக இருந்தார். சுமார் 300 பேருக்கும் மேலாக மக்கள்கூ  ட்டத்துடன் திருமணம் நடந்தது.

the-grand-on-princes-mulgrave-venues-event-spaces-8bab-300x0   img_9109-hdr

நல்ல ஒரு மண்டபம். 3 படங்கள் இங்கு காணுகிறீர்கள்.

the-grand-on-princes-mulgrave-venues-event-spaces-7c0d-300x0
மீதியை அடுத்த பகுதியில் 6ல் காணுவோம்.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
17-10-2016.

img_01571

3. கண்ணதாசன் சான்றிதழ் -4

13620885_1727681140834518_1975772005668467882_n

இதயத்தில் கனக்கிறாள்.

 

அவளை நினைத்தாலே நெஞ்சம் கனக்கிறது
அவளே நெஞ்சில் கனமாகிவிட்டாள்.
அவள் என் பிரிய நண்பியென்று
அவமாக எண்ணினேனோ!… இன்றெண்ணுகிறேன்.

தாயகத்திலிருந்து தெரிந்த நாமும் அவர்களும்
இங்கும் அன்பாகக் கலந்துறவாடினோம்
இரண்டு மணிநேர மகிழுந்துப் பயணம்.
அனைத்தும் பேசி கலந்துறவாடி
விருந்து சந்திப்பாக உறவு இனித்தது.

சரிதாவிற்கு பதினெட்டு இருபது வயதில்
இரு ஆண் பிள்ளைகள்.
அதே வயதுடைய எமது பிள்ளைகளும்.
திடீரென சரிதா எதற்கோ பயப்படுவது போலவும்
தந்தையிடமிருந்து தனதிரு மகன்களை

பாதுகாத்து அணைப்பதும் தெரிந்தது.
சடுதியாக ஒரு மகனை படிக்க என்று
கனடா அனுப்பினார்கள். சிலகாலம் செல்ல
மற்ற மகனையும் அனுப்பினார்கள்.

சரிதாவும் கணவரிடையேயும் அந்நியோன்னியம்
குறைந்ததாகத் தெரிந்தது. எம்மோடு அவள்
இவைகளைப் பேசவில்லை. தம்பதிகள்
ஒரே வீட்டிலிருந்தும் வேறாகத் தெரிந்தனர்.
எம்மோடு சிரித்துப் பேசி நடிப்பதாகத் தெரிந்தது.

இருபகுதி வீட்டு விஜயங்களும் குறைந்தது.
தொலைபேசிப் பேச்சுகள் தொடர்ந்தது.
சொல்லாமலே கனடா போவாள் வருவாள்.
நாம் நன்றாகப் பேசி நடிக்கிறோம்.
எங்கே கனநாளாகக் காணவில்லையேயென்றால்

கனடா போய்வந்தேன் என்பாள்.
கள்ளி சொல்லாமலே போய் வந்தாயா என்பேன்..
நன்கு சிரிப்பாள். இப்போது
தொலைபேசித் தொடர்பும் மிகக் குறைவு.
இதயத்தில் கனக்கிறாள்.

நட்பு – பிரிய நட்பென்றால்
உயிருக்குயிராய் மனதிற்கு
இதம் தரவேண்டும். இவள் கனக்கிறாள்.
திரையோடு வாழும் நட்பாகிவிட்டது.

இன்று வரை ஏதும் புரியவில்லை
அவள் சொந்த வாழ்வுக் குளப்பமாகியிருக்கலாம்
எம்மோடு பகிர கூசியிருக்கலாம்.
ஆனாலும் நாம் இனிய நண்பர்கள்…!!!..
(உண்மைக் கதை பெயர் முதலிய தகவல்கள் கற்பனை)

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
6-7-2016

12965393-set-of-gold-dividers

Previous Older Entries