4. பயணம் – மலேசியா 15. ( இறுதி அங்கம்)
சாந்தியின் அம்மா ஒழுங்கு படுத்தினார் நாங்கள் லிட்டில் இந்தியா பார்ப்போம் என்று. நான் முன்பு குறிப்பட்டுள்ளேன் நிறைய செங்கல்லுச் சூளைகள் இருந்ததால் அது பிறிக் பீஃல்ட் என்றும் அதுவே லிட்டில் இந்தியா என்றும் வந்ததாக.
வேலை செய்ய இந்தியாவிலிருந்து தொழிலாளர்களைத் தருவித்து இருப்பிடமும் கொடுத்தனர். அப்படி ஆதியில் வந்தவர்களே லிட்டில் இந்தியாவில் இந்தியர்கள் என அழைக்கப் படுபவர்கள்.
அதே போலவே முன்னர் இலங்கைத் தமிழரும் வருவிக்கப்பட்டனர்.
இந்திய உணவு வண்ண நிற அலங்கார வளைவுகள் என நவீன லிட்டில் இந்தியா காட்சி தருகிறது. சும்மா சுற்றிப் பார்த்தோம். ஒரு துணிக் கடையுள் புகுந்தோம். தீபாவளிக்கு முன்னும் பின்னுமான நேரமது. டென்மார்க்கில் டெனிஸ் மயமாக இருப்பதால் தீபாவளி அலங்காரங்கள் தேவலோகம் போல இருந்தது.
படத்தில் இவைகளைக் காண்கிறீர்கள். அந்த அலங்கார வளைவு அழகாகவே இருந்தது.
மலேசியாவில் அடுத்த விசேடம் எங்கும் தெருவில் பூமரங்கள் செடிகளாக வைத்து அழகு படுத்தியுள்ளது விசேடம். உதாரணமாக இரு படங்கள் போட்டுள்ளேன்.
இரவுச் சாப்பாடும் அங்கேயே சாப்பிட்டோம்.
(லிட்டில் இந்தியா அலங்கார வளைவுகளுக்கிடையில் இருந்த பூந்தொட்டிகள்.
அடுத்து சிங்கள மகாவிகாரை பார்த்தோம்.
லிட்டில் இந்தியா சுற்று வட்டத்திலேயே இது இருக்கிறது.
This is google photo in day light.
கடந்த 50 வருடமாக இது நடக்கிறதாம். ஒரு போதி மரத்தடியில் 12 பிள்ளைகளுடன் தூண்டுதலற்ற தன்னிச்சையான ஆசிரியர்களுடன் ஆரம்பமானதாம். – this is also google photo
கோவில் அத்துடன் சிங்களப் பாடசாலையும் சேர்ந்து நடக்கிறதாம்.
தேரவாட புத்த மதம் இலங்கை போன்றது.
இன்று பாடசாலையில் 20 வகுப்புகளும், 1300 பிள்ளைகளுடன் நடக்கிறதாம்.
இத்துடன் எமது பயணவிவரிப்புகள் முடிவடைகிறது.
எனது படங்கள் இரவுக் காட்சியாக உள்ளது.
நாம் இங்கு சுற்ற மலாக்கா வந்ததுடன் மகளும் துணைவரும்
கமரூன் கை லாண்ட்ஸ்க்கு (Cameron highlands ) சென்றுவிட்டனர். -தேயிலைத் தோட்டப் பகுதி.
257வது ஆக்கம் ” இன்னிசைச் சந்தம் பெருகட்டும்” படம் அங்கு எடுத்த படமே. இணைப்பு தருகிறேன். https://kovaikkavi.wordpress.com/2012/12/08/257-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%9a%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%9f/
என்னோடு 15 அங்கமாகப் பயணித்த அனைவருக்கும் நன்றி கூறி முடிக்கிறேன்.
இறையாசி இருந்தால் இன்னோரு பயணக் கதை தொடரலாம்.
நன்றி. வணக்கம்.
வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
22-12-2012.