220. நேற்றையதிலும் திறமாய் மலர்க!

 

நேற்றையதிலும் திறமாய் மலர்க!

 

வ்வொரு ஆண்டும் தனித்துவ ஆண்டாய்
இவ் வருடமும் புது எண்ணிக்கையாய்
இரண்டாயிரத்துப் பன்னிரண்டாம் ஆண்டு
மிரண்டிட வைக்குமோ! வரண்டிடா வளம்
திரண்டு இன்பம் தர வருமோ!
அணிகலன்களால் நாடு அலங்கரிப்பு!
பனியில்லாத மார்கழிக் குளிர் இருளில்
இனியில்லாத வேகமாய் மலர்கிறது ஆண்டு.

திகார வர்க்கத்து ஆக்கிரமிப்பு நெஞ்சம்
நதியோர மண்ணாகக் கரைய வருக!
சதிசெய்து உயிர்களை விதியென்று பறிக்கும்
அதிமேதாவித்தன ஆயுதக் குவியலை
பொதியாக்கித் தீயிட மதியாக வருக!
அதியுன்னத அன்பை இதிகாசமாக்க வருக!
அமைதி மருவுக! புத்துயர்வு தருக!
அமைவாய், இனியதாய், வசந்தமாய் வருக!

பிறர் மனக் கிளையை எட்டி
பலாத்காரக் கவட்டையால் கொழுவி இழுத்து
பிசாசாக உலுக்கிக் காரியப் பழம்
பிடுங்கும் நிலை மாற வேண்டும்.
தன்னிச்சையான மனிதக் கொள்கையை உலகில்
தங்கு தடையின்றி நிலை நாட்ட
தரமான புது உலகம் வரவேண்டும்!
வரமாகப் புத்தாண்டு மலர வேண்டும்!

னிதநேயக் காவலன் மனிதன்! அதைப்
புனிதம் கெடாது காத்திடட்டும் வருக!
வேரான தமிழ்க் கொல்லை புலத்திலும்
சீராக செழித்திடும் வகையாக்க வருக!
நேராகச் செல்லும் கூரான மதியும்
ஏராக எமுதுகோலும் அமைக்க வருக!
காற்றை மீறி வாழும் தீபமாய்
நேற்றையதிலும் திறமாய் ஆற்றிடு சாதனை!

 

 ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
2005.

(ரி.ஆர்.ரி தமிழ் அலை வானொலியிலும், 2008ல் ஐரிஆர் (திரு நயினை விஐயன்) வானொலியிலும் என்னால் வாசிக்கப் பட்டது.)

In muthukamalam web site:-     http://www.muthukamalam.com/verse/p834.html

 

                           

 

                                     

4. தொலைத்தவை எத்தனையோ!

– 4

(இது ஒரு தொடர் இடுகை)

அப்போது எனக்கு எட்டரை- ஒன்பது வயதிருக்கும்.
நாவலர் பாடசாலையில் ஐந்தாம் வகுப்பு படித்தேன். பாடசாலை ஓரு மணியளவில் விடும். வீடு வந்து ஆடை மாற்றி உணவு உண்ட பின் ஒரு ஆயிரம் மீட்டருக்கு உள்ளாக இருக்கும் பாக்கியம் ஆசிரியை வீட்டிற்கு, தம்பி, தங்கைகளுடன் படிக்கப் போவோம்.

நாங்கள், பெரியப்பா வீட்டுப் பிள்ளைகள், இன்னும் பாக்கியம் ஆசிரியையின்  பக்கத்து வீட்டுப் பிள்ளைகள் என்று, வயது, வகுப்பிற்கு ஏற்றபடி சேர்ந்து படிப்போம். பாக்கியம் ஆசிரியை எமது நாவலர் பாடசாலையில் ஆசிரியை, எமக்கு உறவினரும் கூட.

(Photo:- Nanry my brother satha.)

(Photo:- Nanry    கோப்பாய் குட்டி திவியன்)

 பாடசாலைக்குரிய வீட்டு வேலைகள், வேறாகவும் படிப்போம். விளையாடுவோம். மாலை ஐந்து, ஆறு மணி வரை நின்று வீடு வருவோம்.

நானும் குவீனும், தாமரையும் ஒன்றாகப் படிப்போம். படிக்கும் நேரம் தவிர எப்போதும் குவீனும், தாமரையும் சேர்ந்து குசுகுசுப்பார்கள். சேர்ந்து விளையாடுவார்கள்.  ஏனோ என்னை ஒதுக்கி விடுவார்கள். (நான் அவர்களிலும்  ஒரு வயது சிறியவள்.)

 

நான் போராடும் குணம் கொண்டவளில்லை. என் பாட்டில் சுற்றியுள்ள மல்லிகைப் பந்தலை,  முற்றத்துப் பூக்கன்றுகளை ரசிப்பேன். மற்ற பிள்ளைகளுடன் பாக்கியம் ஆசிரியை வீட்டுக் கோழிக் குஞ்சுகள் நிறமடித்திருப்பதை ரசித்து பருந்து தூக்க வர, கூச்சலிட்டு விரட்டுவோம். அடி பெருத்த தென்னை மரங்களில் ஏறி விளையாடுவோம். இப்படிப் பொழுது போகும்.

பாக்கியம் ஆசிரியையும், அவரது தங்கையும் இதைக் கவனித்து, சேர்ந்து படிப்பவர்கள் சேர்ந்து விளையாடவும் வேண்டும் என்று, குவீனையும், தாமரையையும் நன்கு ஏசினார்கள் ” நீங்கள் இப்படி பேபியை ஒதுக்கக் கூடாது” என்று.  (எனது வீட்டுப் பெயர், பிறந்ததிலிருந்து பெற்றவர், ஊரார் அறிந்திருப்பது Baby  தான்.)

எனக்கு அது மகிழ்வாக இருந்தது. மாற்றம் வருமென எதிர்பார்த்தேன், காத்திருந்தேன். ஆனால் அது தொடர் கதையாகவே இருந்தது. இதை வேறு யாரிடமும் நான் முறைப்பாடு செய்யவில்லை. ஆனால் நிச்சயம் அம்மாவிடம் இலேசாகக் கூறியிருப்பேன்.  அம்மா,அப்பா ” சமாளித்து நட!”  என்றிருப்பார்கள். (இது எனக்குச் சரியாக நினைவில்லை)

ஒரு சிவராத்திரி வந்தது. அதற்கு நித்திரை விழிப்பது சிவ புண்ணியம் என்பர். அங்கு வரும் பிள்ளைகள் நாங்கள் அதைக் குதூகலமாகக் களிக்க, பாட்டு நாடகம் என்று தயாரிக்கப் பட்டது.
பாக்கியம் ஆசிரியை கோவலன் கண்ணகி நாடகம் போட எங்களைத் தயாரித்தார். எனக்கு கோவலன் வேடம் தரப்பட்டது.

தாமரை மாதவியாக (சபையில் நடனமாட வேண்டும்). குவீனி மாதவிக்கு சாமரம் வீசும் சேடிப் பெண்ணாக. (அவரவர் தரமறிந்து வேடங்கள் தரப்பட்டுள்ளதை என் குழந்தை மனம் அறியவில்லைப் போலும்.)

மிகுதி அடுத்த அங்கத்தில் தொடரும்)

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்
ஓகுஸ், டென்மார்க்.
28-12-20011

                                        

 
 

 

 

21. புலாலுண்ணல் (அசைவம்)

 

21. புலாலுண்ணல் (அசைவம்)

 

த்தனை மரக்கறிகள் உலகிலுண்டு, எதற்காக
பித்தாகிறார் மானிடர் புலாலுண்ண!

வெறும் தசையை சுவையூட்டி உண்ண
அறுத்தல் கொலை!  பாவம்!

சையை வளர்க்கத் தசையா! மனம்
இசைவது சீவ இம்சைக்கே!

மீனை நீரிலிருந்து எடுத்தல் கொடுமை!
ஊனையுரித்தல் அதிலும் கொடுமை!

சைவம் எனும் பதமே புனிதமாகும்.
அசைவமாகிப் புனிதம் இழக்காதீர்!

மிருகங்களிலும் மேலானவன் மனிதனென்றால் ஏன்
மிருகங்களையே கூறாக்கி உண்கிறார்!

ருளுடைமை, ஆன்மீகம், தெய்வீகம் என்பவன்
அருளழித்துப் புலாலுண்ணல் தவிர்க்கலாம்.

னத் தூய்மை  உடற் தூய்மையாக்கும்.
இவையும் சைவத்துள் அடங்கும்.

கோரைப் பற்கள் புலாலிற்கு ஏற்றவை.
மனிதப் பற்கள் தாவரங்களுக்கானவை.

சைவம் என்பது சவம் உண்பது.
சைவனாகிச் சிவனடி சேரலாம்.

(அறிவு ரப்பர் போன்றதாம்! புலால் உண்பதின் நன்மையையும் நன்கு கூறுகின்றனர், வாசித்தேன். எனது தலைப்பிற்கு எனது வரிகள் இது. வாதாட அல்ல!…)

 

க்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
25-12-2011.

 

                                    

 

219. மனுகுல மீட்புக்காய்….

 

மனுகுல மீட்புக்காய்….

 

பெத்தலகேம் நகரில் ஒரு மீட்பர்
இத்தரையில் உதிப்பார் என்று பல
உத்தம அறிகுறிகள் அன்று தோன்றியதாம்.
அத்தியாயத்தின் கதவு அமைதியாய்த் திறந்தது.
நாட்டு வழிப் பாதையில் சூசை
காட்டிய வழியில் கர்ப்பிணி மரியாள்
கட்டி முத்தான யேசுபாலன் உதிக்க
எட்டிய அடிதளர எழுந்தது பிரசவவலி.

திருவான தேவ கருணை இரட்சகர்
அருமை மாளிகை அந்தப்புரம் போல
ஒரு மகிமையான மாட்டுத் தொழுவத்தில்
கருவறை விட்டு பூமியில் உதித்தார்!
காரிருள் குளிர் போர்வை விரிக்க
அரிய மனுகுல மீட்பர்  பிறந்ததாய்
ஊர்த்துன்ப மேகம் கலைந்து மக்கள்
வாரி அள்ளும் துன்பமும் கரையட்டும்.

யேசுபாலன் உதயம் போல தமிழருக்கு
தேசு மிகு உதயம் பிறக்கட்டும்!
வாசமுடன் தமிழர் தமிழ் மொழியென
தேசமெலாம் பெயரேற வாழ்வுயரட்டும்!
பாலன் பிறந்தார் மனுகுல மீட்புக்காய்!
காலம் பிறக்கட்டும் இலங்கையர் அமைதிக்காய்!
பாலம் அமையட்டும் நாட்டு ஒற்றுமைக்காய்!
நாலும்  சிறந்து நாடு சிறக்கட்டும்!

(அனைத்து அன்புள்ளங்களிற்கும் இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துள்.)

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
27-12-2007.

(ரி.ஆர்.ரி,  இலண்டன் தமிழ் வானொலி, ஐரிஆர் (கவிதைச்சாரல்) வானொலிகளில் என்னால் வாசிக்கப் பட்டது.)

                               

218. இலக்கணம் மாறினால்..

 

இலக்கணம் மாறினால்..

 

நீல வான் வெளியில் நிர்மலமாய்
கோலமுடன் பறக்கும் நித்தமுமாய்.
சிறகு விரிக்கும் சுதந்திரமாய்
உறவு கொண்டாடும் உன்னதமாய்.

த்தனை தூரம் பறந்திடினும்
வித்தகமாய்த் தன்னிடம் திரும்பும்.
வஞ்சகமற்ற அழகு உருவம்
வடியாத சுறுசுறுப்பு நடையாம்.

செல்லப்(வீட்டுப்) பறவை இது
நல்ல அமைதிச் சின்னம்.
காதலுறவிற்கு உதாரணமாய்
கவிபாடுமொரு கருப் பொருளாம்.

கவல் பரிமாற்றம் செய்யும்
காதல் விடுதூதாம் சரித்திரத்தில்.
பிணையிழந்த பிரிவுத் துயரம்
இணையில்லா இவ்வினச் சிறப்பியல்பு

(இந்தப் படத்தைக் கிளிக் பண்ணிப் பாருங்கள்! அவையள் தலையாட்டிச் சுகிக்கினம்)

ளிபொங்குமதன் காதல் வாழ்வின்
வழித் துணையை ஒன்றிழந்தால்,
இயற்கைக்காதல் இலக்கணம் மாறினால்
இசைந்து உயிரிழக்குமாம் இணைப்புறா.
 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
9-10-2005.

                            
 

19. இப்படித்தான் வாசிப்பு தொடக்கப்படுகிறது…

 

இப்படித்தான் வாசிப்பு தொடக்கப்படுகிறது…

 

(அனுபவக் குறிப்பு:- 7-3.2005ல் இலண்டன் தமிழ் வானொலியில் ” ஓடிவிளையாடு பாப்பா”வில் காலையில் இடம் பெறும் அனுபவக் குறிப்பில் ஒலி பரப்பானது.)

எனது வேலையிடத்தில் பிள்ளைகளைக் கொண்டு வந்து விடும் பெற்றோர், திரும்பிப் போகும் போது பிரியும் விடை கொடுப்பது என்பது சில பிள்ளைகளுக்கு மிகக் கஷ்டமான ஒரு விடயம். அழுவார்கள், பெற்றோரைக் கட்டிப் பிடித்தபடி அடம் பிடிப்பார்கள்.

சில பெற்றோர்கள் பிள்ளைகளைப் படம் வரைய, லீகோ கட்டைகளை அடுக்கி விளையாட என்று ஏதாவது ஒரு நடவடிக்கையில் புக விட்டு விடை பெறுவார்கள். அதாவது மகிழ்வோடு விடை பெறுவார்கள்.

இதில் இரண்டு பெற்றோர்கள் மிக சுறு சுறுப்பாக வருவார்கள். இவர்களது பெண் பிள்ளைகள் இன்னும் 4, 5 மாதத்தில் பாடசாலையில் அரிவரி வகுப்பில் சேர உள்ளனர்.

 
இவர்கள் பாலர் நிலையத்திற்கு வந்தவுடன் பெற்றோரோ அல்லது பிள்ளைகளோ புத்தக அடுக்கிலிலிருந்து ஒரு புத்தகத்தை உருவி, பிள்ளையை மடியில் இருத்தி புத்தகத்தை வாசிக்கத் தொடங்குவார்கள். பிள்ளைக்கும் விளங்கும். 3 -4 பக்கங்கள், அல்லது ஒரு கதை என வாசித்த பின் மகிழ்வாக விடை பெறுவார்கள்.

 

இது நாள் தோறும் காலையில் நடக்கும். 24 பிள்ளைகளில் 2 பெற்றோர் தொடர்ந்து இப்படிச் செய்கிறார்கள். இந்தப் பெற்றோர் நல்ல படிப்பு, உத்தியோகம் என்று நல்ல நிலையில் உள்ளவர்கள்.

என்னை இது மிகவும் ஈர்த்தது.

எமது தமிழ்த் தாய்மார் இப்படி நடக்கிறார்களா?

இப்படிப் புத்தகம் வாசிப்பார்களா?

என்று பல கேள்விகளை எனக்குள் கேட்கிறேன்.

இப்படிச் சிறு வயதிலேயே இவர்கள் (டெனிஸ் மக்கள்) வாசிப்புத் தொடங்குகிறது. வாசிகசாலைக்குச் சென்று கட்டுக் கட்டாகப் புத்தகங்கள் கொண்டு வந்து வயது வித்தியாசமின்றி வாசிப்பார்கள்.

நாங்கள் புத்தகங்கள் செய்தால், கையில் வாங்கிப் பார்த்து விட்டுத் திருப்பித் தரும் எம்மவர்களும் உள்ளனர். (3 புத்தகங்கள் செய்து பெற்ற அனுபவம்)

இந்த அனுபவம் ஒருவரையாவது வாசிக்கப் பண்ணினால் அது எனது வெற்றி,  உங்கள் ஒளிமய எதிர்காலமுமாகும். நல்லதிஷ்டம் கிட்டட்டும்

(எனது புத்தகங்கள் பற்றிய தகவல்கள் – எனது புத்தகங்கள் – என்ற தலைப்பின் கீழ் வலையில் உள்ளது . விரும்பியவர்கள் வாசிக்கலாம். உங்களிடமிருந்து கேள்விகள் , மின்னஞ்சல்கள் வர முதல் நானே அத் தகவலைத் தந்துள்ளேன்.)

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
5-3-2005.

 

                             

 

217. போலியுறவெதற்கு!….

 

போலியுறவெதற்கு!….

 

வ்வொரு வார்த்தையிலும் அன்புருக,
ஓவ்வொரு செயலிலும் இன்பமாக,
எண்ணும் தொறும் நிம்மதியுறவு
வண்ணமுடை மனம் நிறையுறவு!

ழகப் பழக நிறையுறவு
பாகாய் இனிக்கும் திறனுயர்வு!
வாகான சம உணர்வின்றேல்
பாகற்காயாகும் குறையுறவு.

ள்ளும் இலாபம் ஏந்தி
அள்ளி யணைத்து நடிக்கும்
உள்ளத்தில் புனிதம் ஏது!
கள்ளமுடை உறவு சூது!

னம் திறந்து பேசாது
தினம் நல்ல உறவென்று
இனம் பிரித்து உறவாடிக்
கனதியாய் வாழுமுறவு எதற்கு!

ரவும் பகலும் மனதில்
உரசி உரசித் தீயேற்கும்
சரசரக்கும் பொறாமைக் காடு
பரவச அன்பைக் குறைக்கும்.

போலி உறவால் வருந்திக்
காலியாவது உயிர்ச் சக்தி!
கலி தொலைய வேலி போடு!
வலி தீர வழிமூடு!

றவு போன்று உருகும்
உறவில்லாதார் உறவு வீண்!
மறக்கற்பாலதென்று அணையிடு!
துறக்கற்பாலது மிக நன்று.
 

 

வி ஆக்கம். வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
16-12-2011.

                                  
 

20. துன்பம்.

வாழ்வியற் குறட்டாழிசை 20.

துன்பம்.

 

துணிந்த மனதாளன், முயற்சியாளனுக்கு வரும்
துன்பம் தூசிக்கு நிகர்.

ன்பம், துன்பத்தைச் சமமாக ஏற்பவர்
இகத்திலே  யோகி ஆகிறார்.

ன்பம் வரவெனும் ஏற்றம் என்றால்
துன்பம் செலவெனும் இறக்கம்.

வாழ்வு நிலையற்றது என்பதைப் புரிந்தால்
தாழ்வு துன்பத்தால் இல்லை.

ந்த துன்பத்தைப் பரிமாறிக் கலந்துரையாடுதல்
நொந்த மனதிற்கு ஆறுதலாகும்.

றுமை, நோய், பணம், நிம்மதியின்மை
பொறுமையைப் பறிக்கும் துன்பம்.

ன்பத்தை முழுதாக வரவேற்கும் நாம்
துன்பத்தையும் ஏற்கப் பழகலாம்.

பாராளும் அரசனையும் துன்பம் துரத்தும்
போராளியாகவே வேண்டும் நிச்சயமாக.

ல்லவன், கெட்டவன் பேதம் இன்றி
எல்லோரிடமும் துன்பம் மோதும்.

துன்பத்தைத் தத்துவம், பொழுது போக்கு
இன்னரும் கலைகளால் வெல்லலாம்.

டர்களை எதிராடும் குணமற்றவர் நொந்து
தொடர்வது தற்கொலை முயற்சியுமாகும்.

 

க்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
14-12-2011.

  

                                  
 

216. பேனா முனை

 

பேனா முனை

 

ர் முனையாய் உலகை உழும்
கூர் முனையாம் பேனா முனை.
யார் தடுத்தும் ஓயா முனை.
தீர்வெடுக்கும் தீர முனை.
மேலாடை கழற்ற நிர்வாணமாகும்
காலாடக் கசியும் கரு நாளம்,
நூலாடும் கருத்துச் சொல்லோவியம்
மேலோடிச் சமூக அழுக்ககற்றும்.

ழுத நீலக் குருதியிழப்பு, உலகின்
பழுது சுட்டி, அழுக்கு விலக்கும்.
புத்துணர்வுப் பதியமிடும் கூர்முனை.
பேனாவை உடைத்து அழிக்கலாம், அதில்
ஊனாகும் உயிர்க் கனவு அழியாது.
தூணாகும் மனுநெறிக் காவலன் பேனா.
பூமி வெடித்துப் பூப்பது போல்
பூக்குமுணர்வின் ஓங்கார முனை.

நெஞ்சத்து உணர்வோவியச் சித்திரத் தூரிகை
கிஞ்சித்துமஞ்சாது அஞ்சலிக்கும் அமுத முனை.
அஞ்சித் தொழுது கைகள் கூப்பாது
நெஞ்சு நிமிர்த்தி வெளிவிடும் துளிகளால்
நெரிபடும் மனிதர் பேனாவை ஆள்பவனின்
நேசவாழ்வையே எடுத்து விடுகின்றார்.
கூரான கருத்தைச் சார்பாக எண்ணாத
நேரற்ற மனிதரும் பேனாவை எறிவாரோ!

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
7-7-2006.

(இலண்டன் தமிழ் வானொலியிலும், சி.ஐ.ரிவியிலும் கவிதை நேரங்களில் என்னால் வாசிக்கப்பட்டது.)

(வேறு)
 இது – எனது முதல் கவிதை நூலான வேதாவின் கவிதைகளில் வெளியானது.

                                         

40. கண்ணடிக்கும் மின்னல்.

 

கண்ணடிக்கும் மின்னல்…..

 

காரசாரமான மேக உரசலில்
ஆரவாரமான ஒளி மின்னலில்
கார்மேகம் எதைத் தேடுகிறது!

டைந்த மின்சார இணைப்பை
உதாசீனமாக யார் தொட்டார்!
உக்கிரமாயுள்ளதே இந்த மின்னல்!

மின்சார எழுதுகோலால் குழச்தையின்
தன்னார்வக் கோடுகள் மேகத்தில்
கன்னாபின்னா வெனக் கண்ணடிக்குதே!

மேகக் கன்னிகளின் காம
மோகாக்கினிப் பிளம்புகளோ இந்த
வேகமான ஒளி மின்னல்கள்!

ண்ணைப் பொத்திப் பலர்
கட்டிலடியில் ஒளிக்கிறார்!
கண்பறிக்குமாம் மின்னல் என்று

த்தனை வயதாகியும் பல
அப்பு  ஆச்சிக்கு இன்றும்
அநியாயப் பயமாம் மின்னலிற்கு.

   

ன்னல்கள் இழுத்து மூடி
கண்களையுமிறுக மூடிச் சிறுவராய்
மின்னலிற்குப் போர்வையுள்ளான ஞாபகம்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
9-12-2011.

 

                            

 

Previous Older Entries