புற்றுநோயை வென்றவள்.
அகில உலகமும் தெரிந்த டென்மார்க்கின் ஓப்பரா பாடல் பாடும் நட்சத்திரமும்
மகாராணியின் 70வது பிறந்த நாளிற்குப் பாட்டுப் பாடியவருமான
ரீனா கிபேக் 2010ல் தொண்டைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.
மூக்குப் பிரியும் சுவரில் பெரியகட்டி உருவானது.
கழுத்து தோள்பட்டை எலும்பு வரை அது பயணப்பட்டமாதிரி.
அறுவை சிகிச்சை
மேலும் பரவாது இருக்க கதிரியக்கச் சிகிச்சை, கீமோதெரப்பி என்றும்,
இனி அவர் பாட முடியாது என்ற நிலையும் வந்தது.
நுரையீரல்வரை நோய் பரவியது. கதிரியக்கச் சிகிச்சை, கீமோ என்பவைகளால்
10 கிலோ எடை குறைந்தும், உணவு விழுங்க முடியாமலும் உடல் நோவினாலும் அவதிப்பட்டார்.
வைத்தியர்கள் கை விரித்து விட்டனர். அவர் இறந்து விடுவார் என்ற முடிவைக் கூறினார்கள்.
மிக மனம் சோர்ந்தார். கெயலிவ் வைத்தியசாலை வைத்தியரின் ஊக்கத்துடன்
மாறுபட்ட சிகிச்சையாக அதிக அளவு விட்டமின் சி திரவ நிலையாகவும்,
விட்டமின் டி3 டபிள் அளவாகவும், மீன் எண்ணெய். பழவகைகள், உடற்பயிற்சி பாடல் என்று
சுறுசுறுப்பாக இயக்கினார்கள்.
2011ல் ஸ்கான் செய்த போது புற்று நோயிற்கான எந்த அடையாளமும் அவரிடம் இருக்கவில்லை.
வைத்தியர்கள் ஆச்சரியப்பட்டனர். மறுபடி ஓப்பரா திரைகளில் பாடுகிறார்.
தன்னை ஊக்கப் படுத்திய வைத்தியரை மெச்சுகிறார்.
உடலில் நேயெதிர்ப்புச் சக்தியைக் (immunity) கூட்டினால் எந்த நோயையும் வெல்லலாம் என்பதற்கு
ரீனா கிபெக் சிறந்த உதாரணம்.
(B.T denish பத்திரிகையில் வந்த கட்டுரையின் சுருக்கம்.)
தமிழாக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
8-12-2014.