படம் 36
விநாயக சதுர்த்தி.
விரதம் முடிய, பார்வதியே
விரவல் செய்தார் கடலிலுன்னை.
பரதத்துவம் பாதத்தில் மிதிபடாமல்
சிரத்தையாயுன்னை நோன்பு இறுதியில்
பரவையில் போட கரைகிறாய்
பூமியில் அவதரித்த நாமிறுதியில்
பூமிக்கேயென்ற தத்துவம் கூறும்
பூதல உருவாய் நீயிங்கு!
பஞ்சமா பாதகங்களை மானுடம்
அஞ்சாது செய்வதை தொலைக்க
நெஞ்சத்தால் உணர்ந்து கரைக்க
தஞ்சம் நீயென அடையாளமாகுகிறாய்.
தளர்வற்ற மாசறு மனம்
அளவற்று நீள அருள்வாய்!
வளர்பிறைச் சதுர்த்தி ஆவணியில்
வரம் தா ஆனைமுகத்தோனே!
( விரவல் – கலத்தல். பரதத்துவம் – பரம்பொருள். பரவை – கடல்.)
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
31-10-2015.
https://www.vallamai.com/?p=63493