இதில் முதல் பத்துப் பாடல்கள் எனது 6வது நூல்
மனக்கடல் வலம்புரிகள் – ல் பிரசுரமானது மீன் தொட்டி — வரை (கீழிருந்து பாருங்கள்)
ஒரு தாகம்.
***
27 டிசம்பர் 2016 9 பின்னூட்டங்கள்
இதில் முதல் பத்துப் பாடல்கள் எனது 6வது நூல்
மனக்கடல் வலம்புரிகள் – ல் பிரசுரமானது மீன் தொட்டி — வரை (கீழிருந்து பாருங்கள்)
***
10 நவ் 2016 12 பின்னூட்டங்கள்
பெல்ஜியம் கல்லெர்பாஸ் காடு
புங்கமர அழகோடு ஊதாப்பூக்கள்.
நக்கிள்ஸ் மலைத்தொடர் தும்பர
இலங்கையின் அழகு நிலமாம்
முட்புதர் காடுகள் , சந்தனமரம்
கேரள அழகு.காகிதம் பிசின் செயற்கைப்பட்டு
திறந்த விக்காமு, சருகுப் பசளை உரமாகும் காடு
18 ஜூன் 2016 13 பின்னூட்டங்கள்
***
23 மே 2016 10 பின்னூட்டங்கள்
*
பெரும்
நிழற் குடை இலவசச் சேவிதம்.
கால்நடைகள் வயிறாறும் தீவனச் சேவை.
பணம் செலவற்ற உரத் தழைகள்.
பகலில் நச்சுக் கரியமலவாயு உள்ளெடுக்கும் தொண்டன்.
*
மருந்து எண்ணெய் பிசின் தேவையா
அடுப்பெரிக்க, குளிர் தேச வெப்பச் சேவை
தீப்பெட்டித் தொழில், கடதாசி செய்ய
மண்ணரிப்புத் தடையாம் வரம் மரங்கள்.
*
சுகமான
பறவைகள் வாழுமிடம். பூமியின் வெப்பம்
மிதப்படுத்தும் இரசாயன சேவை. புழங்கள்
காய்களும், தேக ஆரோக்கியம் காக்க
சமயத்தில் காற்று வேகக் கட்டுப்பாட்டதிகாரி.
*
அழுக்கு நீரருந்தி தருவது அமுதம்.
தெருவோர நிழல் வாடி, சீவகாருண்யம்.
மனிதக் கரம். பிச்சைக் காரனின் வீடு.
சீ! மரமே எண்ணாதே! பல்சேவகனிவன்.
*
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
1.8.2016
*
18 ஏப் 2016 8 பின்னூட்டங்கள்
***
01 மார்ச் 2016 13 பின்னூட்டங்கள்
***
28 பிப் 2016 14 பின்னூட்டங்கள்
பாத்திரமும் பசித்த வயிறும் காய
ஆத்திரமுற்ற அரசின் அவசரகால நிலையால்
நேத்திரம் சோர மீனவர் கரையிலேஇ
காத்திருக்கும் தோணிகள் மீன் பிடிக்கவென.
உயிருக்கும் வாழ்வுக்கும் உத்தரவாதமின்றி
உற்றம் சுற்றம் பார்க்காது மக்கள்
ஊரைஇ நாட்டை விட்டு வெளியேற
உதவும் குழுக்களுடன் காத்திருக்கும் தோணிகள்.
களுகங்கை பெரு மழையால் பெருகியது.
கடலாகப் பாதைஇ தோணியில் பயணம்.
காலையும் மாலையும் தேயிலைக் கொழுந்துகளை
காத்திருந்த தோணிகளில் தொழிற்சாலைக்கு ஏற்றினர்.
கழுத்துறை மாவட்ட கொக்கேனைத் தோட்டத்தில்
கணக்கற்று வெள்ளம் பெருகும் வேளையில்
காலையும் மாலையும் தோணிகளில் நாமும்
காஷ்மீரம் போல் சுற்றுலா காத்திருந்த தோணிகளில்.
6-11-2008
08 பிப் 2016 8 பின்னூட்டங்கள்
***
24 நவ் 2015 14 பின்னூட்டங்கள்
நந்தவனப் பூ மெத்தையில் சிறு நதி ஓரத்தில்
சொந்தம் யாருமின்றி இயற்கையை மிக விரும்பி ரசித்தல்
வண்டுகள் ரீங்காரித்துப் பறக்க வண்ணத்துப் பூச்சிகளும் சிறகசைக்க,
கண்டிட முடியாத் தென்றலை உணர்ந்து குளிர்மையை ரசிக்க
எவரமைத்தார் இந்த நந்தவனத்தை?! அருகினில் ஒரு இதம்
கவருகின்ற தென்னை மரச்சோலையும் பறவைகள் ஒலியும் பரவசம்!
பொல்லாக் காற்று இல்லாததால் தென்றலும் மெல்லிசைக் கடை
தொல்லையில்லா ரசனை! கவிதை பொங்கிட ஏது தடை?!
தலையசைத்த மலர்கள் வாசனையை இதயத்துள் மெதுவாகத் தூவின
தலை ஆட்டும் தென்னோலைகள் சில தேங்காய்கள் தந்தன
தனிமை இல்லையே! எங்கோ போனது! வண்டுகள் ஓசையும்
இனிமை சேர்க்கச் சோலைநிழல் காட்டியது கோலம்
குழலோசை ஒன்று குயிலோசையாய்த் தவழ மயக்கம் வந்தது
உழவுமழையாய் உள்ளத்தில் பொழிந்து அரங்கத்தில் அமருமுணர்வு கூட்டியது
ஆகா! அற்புதம்! என்னே இயற்கை! எழுதலாம் எழுதலாம்
சாகா வரிகள்! பிழைக்கும் கவிஞன் திறமை என்றும்!
பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்
டென்மார்க்
20 நவ் 2015 14 பின்னூட்டங்கள்