தொடர் கதை……
துன்பநிலை வாழ்வில் தானாக வருவதில்லை,
அந்த நிலை வாழ்வில் நாமாகத் தொடும் எல்லை.
சொந்த மனதில் சோதனை விரக்தி நிறைந்தால்
சிறுமனம் திரிந்து எரிந்து புகையும்.
பொறுமைக் குணம் பற்றி முற்றாக அணைந்தால்
நாம் தூங்க நல்ஞானம் தூங்குவதால்,
ஆம் என்று சோகம் தானாய்ப் புகுதலே.
ஆன்ம தவம், தர்மநெறி நீறு பூப்பதால்
ஆன்மாவின் ஆழ் அமைதி அவிந்து போதலே.
ஆழ்ந்து பார்த்தால் அதுவுமொரு தொடர் கதையே.
22-2-2004.