*
கூவிடுவாய் குயிலே! ( பாரதி பற்றிய – 2வது)
*
மார்கழி பதினொன்று சுப்பிரமணியபாரதியின்
பிறந்த நாளிது நீ அறிவாயா
குயிலே! நீ அறிவாயா!
பனுவல்ககளின் மனு அவன்- உலக
பாவலர்களின் கனவு அவன்- குயிலே
பாவலர்களின் கனவு அவன்.
அவன் பாட்டுத் திறன் தமிழுலகை
பாலித்திடுவது பார்த்தாயா குயிலே!
பாலித்திடுவது பார்த்தாயா!
காயிலே இனிப்பு கனியிலே இனிப்பல்ல
காலமுழுதுமவன் பாடலினிப்பு –குயிலே
காலமுழுதுமவன் பாடலினிப்பு.
கருநீலத்து வயிரத்துளி பாரதிகவியெமை
கட்டும் மொழிச்சுடர் -குயிலே
கட்டும் மொழிச்சுடர் தான்.
பெண்விடுதலை எழுச்சிக் குரலெடுத்து
பெண்மையை வாழ்த்திய கவியவன் – குயிலே
பெண்மையை வாழ்த்திய கவியவன்.
இன்று புதிதாயெத்தனை பாரதிகள்
நன்று பல கவிகள் புனைகிறார் -குயிலே
நல்ல பல கவிகள் புனைகிறார்.
இன்று மகாகவியை நினைத்து கௌரவிப்போம்
குயிலே நீயும் எம்மோடு
தீங்குரலில் கூவிடுவாய்.
கவியாக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
11-12.2003.
வேறு
சுட்டும் விழிச்சுடரே…..
சுட்டும் விழிச்சுடரால் தீர்க்கமாய் உன்
கட்டும் தமிழ்க் கதிரின் ஆளுமையை
எட்டுத் திக்கும் கொட்டிய எட்டயபுரத்தானே!
கட்டுப்படாது பலர் இங்கு கட்டறுந்துள்ளனர்.
கெட்டு அழிந்ததால் இனியெம் வருங்காலப்
பட்டுத் தமிழ்ப் பாலகரையாவது உன்
பாட்டுத் திறத்தாலே பாலித்திட வேண்டுமென்று
வீட்டுக்கொரு தமிழனும் திட்டமிட வேண்டும்.
வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 11-12.2017.
*
வா ரதி இன்று
பாரதி நாள்!
பாராளும் கவி
ஏராளம் தந்தான்!
வேராழம் ஊன்றினான்.
தாராளமாய் வாழ்த்துவோம்
December 11, 2014 ·
*