25வது கவியரங்கம்.
(6வது எத்தனம்.)
தமிழ் வணக்கம்————————————————– வாழ்க்கைச் சிகரம் வசப்பட……
என் சிறகுகள், என் மூச்சு என்னுயிரான ஏணியாம் தமிழ் இன்பத் தமிழுக்கு வணக்கம் உலகின் முகடு, கூரையில் திபெத்தின் தலைநகர் லாசா விமான நிலையத்தில் இன்பத்தமிழ். தமிழ் தொல் கவிஞராம் ஒளவைப்பிராட்டி அருளிய ” கற்றது கையளவு கற்காதது கடலளவு” என்ற வாசகம் தமிழில் பொதிக்கப் பட்டுள்ளதாம். அத்தகைய தமிழுக்கு மீண்டும் வணக்கம் தலைமை வணக்கம்…………………………………. மிரட்டும் தகைமைகள், விருதுகள் ஏந்திய அண்ணலே! பல் திறமைத் தலைவரே! 25ம் கவியரங்கத் தலைமைப் பெருமையாளரே! வணக்கம். நிலாமுற்றம் தங்களாலும் பெருமையடைகிறது. விசேட உறவான 25ம் கவியரங்கத் தலைமைக்கும்
வாழ்த்துகளுடன் வணக்கமும். சபையோரே சான்றாளரே வணக்கம்.—————————————- நல்லது கெட்டது கூறி சபையை நேராக்கும் பல்லறிவு திறமை கொண்ட அன்புடையோரே இனிய சபையோரே விமரிசனத்தின் மூலம் அறிவு புகட்டி அரவணைக்கும் எல்லோருக்கும் வணக்கம்.
வாழ்க்கைச் சிகரம் வசப்பட அறிவு புகட்டும் ஆசான், சுழன்று மிரட்டும் சூழல்;, சுற்றி உதவும் கரங்களான உறவு, நானிலம் போற்றும் நட்பு, பாதையெங்கும் கிடைக்கும் பாடங்கள் உதவுதல் உண்மை. நானிங்கு எடுத்த தலைப்பு:——– குன்றா அரவணைக்கும் குடும்பம்—————————————————-———–
ஆச்சரியப்படலாம் பலர்! ஆதியில் குழந்தையாய் பெற்றோர் அணைப்பில் அகரப் படி – எழுந்தோம். அனைத்தும் தலைகீழ் மாற்றமாய் 42வயதில் புலம் பெயர்வு. நாலா விதமும் கலங்கும் மாற்றம். மொழி கலாச்சாரம் கடுமையாய் எம்மைப் புரட்டிப் போட்டது. கலங்காது டெனிஷ் மொழி படித்துயர்ந்தோம். பதின்ம வயதுப் பிள்கைள் அப்பா அம்மா பாடம். ஒரே வகுப்பில் மொழி நாமே ஒருவருக்கு ஒருவர் துணை. அகராதி பெரும் துணை ஆங்கிலத்தோடு. நம்பிக்கை பெருந்துணையோடு சிகரம் நோக்கி. பின் பாலர் பராமரிப்பு நர்சரி ஆசிரியையாக 3 வருடம் படிப்பு. வட்டமாக நின்று படிக்கும் போது டெனிஷ் ஆணுடன் கை கோர்க்கும் நிலை. நான் நழுவி விலகினேன்.(பயிர்ப்பு – பழக்கமில்லை)) அவன் அவமான உணர்வில் முகம் சிவந்தான். வீட்டில் கலந்து பேசினேன். இப்படியானால் படிப்பை நிறுத்துங்கள் அம்மா என்றாள் மகள். அப்பா புன்னகைத்தபடி. அன்பான ஆதரவுடன் தொடர்ந்தேன். இப்படிப் பல. தாறுமாறான பிள்ளைகள், குடிகாரக் கணவரென்றால் என்னால் முன்னேற முடியாது. கோயிலான குடும்ப அரவணைப்பு கோகுலமாகக் கோலோச்ச உதவியது. கோப்பெருந்தேவனும் இளவரசன் இளவரசியும் செங்கோல் கோணாமல் பாதுகாத்தனர். அவர்களிற்கு ஆண்டவனிற்கும் நன்றி.;
வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 2-7-2016.