41. வேதாவின் வலை.2

 இங்கு வாருங்கள் – https://kovaikkothai.wordpress.com/

வேதாவின் வலை.2
என்று புதிதாக ஒரு பக்கம் திறந்துள்ளேன்.
கட்டுமான வேலைகள் முடிய அதாவது தொழில் நுட்ப வேலைகள்
முடிய உலா வரும் என்பதைத் தெரிவிக்கிறேன்.
முதவாவது – கோவைக்கவி.வேட்பிரஸ். கொம் __________தமிழில் – வேதாவின் வலை
இரண்டாவது – கோவைக்கோதை.வேட்பிரஸ்.கொம்——-

தமிழில்—வேதாவின் வலை.2
என்பதைத் தெரிவிக்கிறேன்.

*
வேதா. இலங்காதிலகம்
டென்மார்க்.
17-5-2017

*

heartborder

496. மை

281c9-mai

 

*

நிலாச்சோறு – நிலவே மலரே – 52.

மை

*

அறியாமை, இளமை, இருள், களங்கம்
குறிக்கும் மையின் தன்மைகள் ஏராளம்.
முறைமை, மெய்மை நியாயமெழுதும் மை.
தெறிக்கும் அபிப்பிராயங்கள், முறிக்கும் உறவுகள்,
அறிவிக்கும் சரித்திரங்கள், உலகாளும் தகைமைகளை
முரசறையும் மையினாளுமை, பெருமை வல்லமை.

*

தோழமை அன்பின்மை யால் இல்லாமை ஆகும்.
ஆதரவின்மை உலகில் பாரிய வறுமை.
பேசாமை, பாராமை உறவிற்குப் பகைமை.
உரிமை கொண்டுறவைச் சீர்மை செய்வோம்.
இளமை, முதுமை அனுபவங்கள் நன்மை,
பெருமை. சிலரிதைச் சிறுமையெனவும் எண்ணுவார்.

*

கண் மை கவர்ச்சியூட்டும் செழுமை.
பெண்மை இழிவெனும் மடைமை ஒழியட்டும்.
பேதைமை யைப் பெண்கள் வெல்லுதல் அறிவுடைமை.
அறிவின்மையால் கைம்மை நிலைமை தீமை.
ஆண்மை ஆளுதலென்பது பழைமை வழமை.
தகவின்மை தலைமை ப் பதவிக்கு ஏற்புடைமை யல்ல.

*

விரல் மை வாக்களிப்பின் உறுதிப்பாடு.
வசிய மை யால் வெற்றிலை மை யால்
கசியும் பன்மை கதைகள் சோதிடப்புலமை.
வண்ண மைகளால் வரையும் ஓவியங்கள்
கண் பறிக்கும் சிகரதிற்கழைக்கும் பொதுமை.
பசுமை க் கலைகள் புலன்களிற்குக் குளிர்மை.

*

இம்மை மறுமை செம்மை பெற
பொய்மை யாம் கருமை விலகுதல் முழுமை.
ஓற்றுமை உணர்வால் இல்லாமை வேற்றுமை.
பொறாமை யற்ற எளிமை வாழ்வு இனிமை.
குடிமை பெருக்கும் தாய்மை வலிமை.

*

அம்மை அண்மை அஞ்சாமை தரும்.
உவமை யில்லா எழுமை தரும்.
உயர்வு மைகளை தனிமை தெலைக்கும்
இறவாமை த் தமிழில் மையின்றி எழுதிய
தமிழின் அடிமை

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க் 9-5-2017

*************************************

30. மகாகவி (பிரபலங்கள்)

Image may contain: one or more people and suit

*

மகாகவி

*

(பாரதி பற்றி – 4வது)

இந்திய எட்டயபுரத்தான்
தந்தை சின்னச்சாமி.
ஈந்தவள் இலக்குமியம்மாள்.
ஐந்தாமகவையில் தாயையிழந்தார்.
¤
இந்த மகாகவி
சொந்தமாக சுப்பையா.
சிந்தனைக் கவி.
ஏந்தினார் முண்டாசு.
¤
சந்தடியின்றி அரசவையில்
முந்தியிருக்கும் கவிஞரானார்.
தந்தது ”பாரதி” யென்று
அந்த எட்டயபுரத்தரசு.
¤
எந்தக் கவிக்கும்
உந்துதலாகுமிவர் வரிகள்.
சந்தம் கொஞ்சிட
சுந்தரமாக எழுதினார்.
¤
குந்தகமற்ற ”அச்சமில்லை”
விந்தையான வீரமேந்திய
வந்தனை வரிகள்.
குந்தியிருக்கிறது மக்களிதயத்தில்.
¤
வந்திக்கும் பெண்மைக்கும்,
வந்தே மாதரம்,
நந்தலாலா வரிகள்
பந்தியிடுகிறது நிறையுணர்வால்.
¤
ஏந்திழை செல்லம்மாவை
ஏந்தினார் மனைவியாய்
வந்தனர் மகளிருவர்
அந்திக்கிரியையில் இருபத்தவர்.

*

வேதா. இலங்காதிலகம் டென்மார்க் 9-8-2016

No automatic alt text available.

47. பாமாலிகை (தமிழ் மொழி)

இதில் முதல் பத்துப் பாடல்கள் எனது 6வது நூல்
மனக்கடல் வலம்புரிகள் – ல் பிரசுரமானது இனிய தமிழெழுது- வரை (கீழிருந்து பாருங்கள்)

 

26.jpg.ss

*

செந்தமிழ் வாழியவே!

*

செந்தமிழ் வாழியவே! எம் வேர்!
நந்தமிழ் வாழியவே! எம் உயிர்!
தீந்தமிழ் தொல்காப்பியத் தமிழ் பார்!
அருந்தமிழை அழகாய்ப் பேசுவீர்!

*

செம்மொழி! திராவிட மொழிக் குடும்பத்தின்
முதன்மை மொழியில் ஒன்று, நறுந்தேன்!
பைந்தமிழ்! எட்டுக் கோடியினருக்கும் மேலானவர்
அருந்தமிழைப் பேசும் பெருமையுடைத்து.

*

இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுக்கும் மேலானது!
மிரண்டிடாதீர்! குமரிக்கண்டத்தில் தோன்றிய மொழி!
முரணற்றது மணிமகுடம் சங்க இலக்கியங்கள்!
திரண்ட இலக்கிய மரபுடைத்து.

*

திருக்குறள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, நாலடியார்
பெரும் பொக்கிசப் புதையல் தமிழ்!
கருத்தோடு காத்து வளர் செந்தமிழை!
விருப்போடுயர்ந்து செந்தமிழ் வாழியவே!

*

வள்ளுவர், கம்பர், பாரதி, ஒளவை
அள்ளிப் பரப்பிய ஆதி மொழி!
அள்ளி அணையுங்களெம் தெய்வ மொழியை!
தள்ளாதீர் செந்தமிழ் வாழியவே!

*

பா ஆக்கம் பா வானதி
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
15-5-2016

*

end

493. சொல்லழகு. (பா மாலிகை (கதம்பம்)

sollalaku nool

*

நிலாமுற்ற குழுமம் கடந்த ஆண்டு செய்த விழாவில்புத்தகம் வெளியிட்டனர் அதில் வந்த எனது ஒரு கவிதை இது.

*

நிலாமுற்றம் கவிதைப் போட்டி 8.7.2016

முத்துப்பேட்டை மாறன் to நிலாமுற்றம் (கவிதைகளுக்கான தேடல்)

வணக்கம் கவி உறவுகளே

நிலாமுற்றம் குழுமம் தனது ஆண்டுவிழாவையொட்டி நடத்திய கவிதைப்போட்டியில் வெற்றிப் பெற்றவர்களின் முதல் பட்டியலை இந்த நல்ல நாளில் அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.அறிவிக்கப்படும் கவிஞர்கள் கும்பகோணத்தில் நடைபெறும் ஆண்டுவிழாவில் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பிப்பார்கள்.வெளிநாடு வாழ் கவிஞர்களுக்கு சான்றிதழ் மட்டுமே அனுப்பி வைக்கப்படும்.நிகழ்ச்சியில் பங்குபெறுபவர்களுக்கு அரங்கத்தில் கேடயம் வழங்கப்படும் என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

#நிலாமுற்றம்_நடத்திய_ஆண்டுவிழா_கவிதைப்போட்டி

#தலைப்பு_ சொல்லழகு

#_போட்டி_வெற்றியாளர் வேதா இலங்காதிலகம் Vetha Langathilakam

கவிஞக்கு என் வாழ்த்துகள்

அவருக்கு நிலாமுற்றத்தின் நல்வாழ்த்துகள்.ஆண்டுவிழாவில் கவிஞர் கௌரவிக்கப்படுவார்.வெற்றிப்பெற்றவர்கள் தங்கள் அசல் புகைப்படத்தை கவிஞர் பாலு கோவிந்தராஜன் அவர்களின் உள்பெட்டிக்கு அனுப்பி வைக்கவேண்டும்.புகைப்படம் அனுப்பினால் மட்டுமே சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்படும்.கேடயத்தில் வெற்றியாளர்கள் புகைப்படம் இணைக்க வேண்டும்.

அன்புடன் முத்துப்பேட்டை மாறன்

நிர்வாகிகள்
தேர்வுக்குழு

 

சொல்லழகு.

சொல் மனிதன் சொன்னதாலானது.
சொல்லழகால் மொழி உருவானது.
சொல்லிலுண்டு மொழியின் உயிருடல்.
மனிதன் மொழிந்ததாலானது மொழி.
சொற்கள் சேர்ந்தால் சொற்றொடராகும்.
சொல்லிற்குப் பல் பிரதானம்.

*

ஓரெழுத்து ஈரெழுத்தாம் பல
சொல்லழகு தமிழிற்கு அழகு.
ழுகர ளகர சொற்கள்
தமிழின் மகுட வைரங்கள்.
மயங்கொலிச் சொல்லழகும் உண்டு..

*

இடமிருந்து வலமாக வலமிருந்து
இடமாக வாசிக்கும் சொல்லழகு
விகடகவி திருபருதி என்றுளது.
ஒரு சொல்லிற்கு பல பொருளுடைத்து.
ஓரெழுத்துச் சொல் நாற்பத்தேழு உண்டு.

*

சொல்லழகு சட்டென்று மனங்கவரும்.
சொன்னார் ஒளவைப் பிராட்டியர்
சொல் திறம்பாமை கற்பெனப் படுவது.
அம்மா என்ற சொல்லழகு.
மம்மா மம்மி எமக்கெதற்கு.

*

சொல்லழகு இல்லையேல் சுவையேது.
பேச்சினில் நிறையும் சொல்லழகும்
கவிஞனின் கவிதைச் சொல்லழகும்
இதயத்தைத் தாலாட்டி என்றும்
இணைந்திட வைக்கும் அமுதவழகு.

*

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
8-7-2016.

குழுவினருக்கு  மனமார்ந்த நன்றிகள்.

 

    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

 

 

16. கண்ணதாசன் சான்றிதழ் (17)

 

 

 

 

 

இது 17வது சான்றிதழ் கவிதை.

கவியுலகப் பூஞ்சோலையின் 8-8-16 தினபோட்டியின் #தலைப்பு_உண்மை_நட்புஇன்றைய போட்டி கவிதையின்#வெற்றியாளர்_கவிஞர்_Vetha_Langathilakamஅவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் பங்கேற்ற அனைத்து கவிஞர்களுக்கும் வாழ்த்துகள்

🎉🎊💐🎉🎊🎈🎊🎉💐🎊🎉🎊💐🎉🎊🎈🎊🎉💐🎊
கண்ணதாசன் கவிஞர் சான்றிதழ் பெறுகிறார்)
🎉🎊💐🎉🎊🎈🎊🎉💐🎊🎉🎊💐🎉🎊🎈🎊🎉💐🎊

உண்மை நட்பு


(நீரவர் – அறிவுடையவர். தரளம் – முத்து)

மதுவேந்தும் மலர்க் கூட்டத்துள்
புது உல்லாசப் பயணமாகும்
மெதுமையுணர்வுடைய உண்மை நட்பு.
பச்சைப் புல் தரையில் பாதம்
பதிக்கும் மெத்தெனும் சுகவுணர்வு.

*

விரும்பி மனதில் பதியமாகி
அருத்தமுடன் வேரூன்றி அகமீதில்
அருட்சோதியாய் பிரகாசிக்கும் தீபம்
கருத்தாய் அந்தமின்றி நீளும்.

*

முதுகு சாயும் இருக்கையாய்
தோள் தருமுறவாய் அணைந்து
தோணியாய் கரை வரை
பயணிக்கும் உண்மை நட்பு.

*

நீரவர் நட்பு உயர்வு
சேரவர் வரிசையில் அனுபவம்
தரளம் சேகரிக்கும் தரமுடைத்து.
தூரவர் போயினும் சுகந்தம்.

*

நீருயரத் தாமரைத் தண்டு
உயர்வதாய் நட்பெம்மை உயர்த்தும்
திறவாத புத்தகமாகும் நன்கு
உறவாடாத உண்மை நட்பு.

*

நினைக்கும் தோறும் இனிக்கும்
நீங்குதலற்ற பிணையும் நெருக்கம்.
நல்லது கெட்டது அளவோடு
நவின்று நன்மை பெருக்கும்.

*
வருவதும் போவதுமாய் மலர்தலும்
வாடுதலுமாயொரு தொடர் நிகழ்வாகும்.
உட்கட்டுச் சிறப்புறும் உறவு
உட்பற்றுடன் நீண்டு தொடரும்.

*

நட்பதிகாரத்தில் வள்ளுவரும் மொழிகிறார்
ஒட்டுரிமையாம் உருகியிறுகும் நட்பை.
சர்வமும் தானெனும் கனமுடைய
பேச்சு செயலழிவுடையுறவு நீக்குதற்பாலது.

*
வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 8-8-2016.

*

🎉🎊💐🎉🎊🎈🎊🎉💐🎊🎉🎊💐🎉🎊🎈🎊

36. தொலைந்தது மீண்டும் வந்தது…

12039676_698210246980112_4955103489819450402_n

*

தொலைந்தது மீண்டும் வந்தது…

*

காலப்பஞ்சுப் பொதியில் தீப்பிடித்து
நிர்மூலமான வீடுகள், காணிகள் புத்துருவானதென்று
உயிர் பிழியப்பட்ட மனம் அடங்கலாம்.
உருக்குலைந்த குடும்பமினித் திரும்புமோ!

*

ஆடிக்காற்றாய் அலைந்த தமிழர் மனம்
தேடியுறவுகளை அலைந்து பெருமூச்சிடும் மனம்
தொலைந்தது மீண்டும் வந்தது என்று
குதூகலித்துக் கொண்டாடுமோ ஒரு நாள்!

*

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
20-12-2010  வார்ப்பு. கொம் படமும் வரிகளில் அன்று எழுதியது.

veedu

492. மே தினம்…. மே தினம்

may -tst

*

2-4-2009ல் வார்ப்பு இணையத் தளத்தில் நான் எழுதிய கவிதை – புனை பெயர் கோவைக்கோதை
*

மே தினம்…. மே தினம்

*

உழைப்பின் ஊதியம் இளைத்தது.
உழைப்பாளர் உரிமைகள் இழந்தனர்.
களைப்பில் மனிதர் வளைந்தனர்.
சளைக்கவில்லை பலர் விழித்தனர்.
நுழைந்தது கேள்விகள் – கொதித்தனர்.
விளைந்தது போராட்டம் – குதித்தனர்.
*
சிக்காகோ, நியூயோர்க் பொஸ்டனீறாக
அக்கிரமம் அழிக்கத் திரண்டனர்.
நோக்கம் நிறைவேற போராட்டம்,
சிறை. உக்கிரமானது சர்வதேசப் புரட்சி.
உழைக்கும் நேரம் எட்டுமணியாக
உரிமையை போராடி வென்றனர்.
*
தொகுதியாய் கூட்டங்கள் உரிமைபேச
தொழிலாளர் தினமானது வைகாசி ஒன்று.
எப்போதும் பணத்தில் குறியானவர்கள்,
தப்பாக மக்களை ஏமாற்றுபவர்கள்,
எப்போது தானாகத் திருந்துவார்கள்,
அப்போதன்றோ பலருக்கு மே தினம்!
*
கோவைக்கோதை. ஸ்கன்டிநேவியன். 2-4-2009.
re publishing 30-4-2017
*

உழைப்பாளிகள் கருத்துடைய வேறொரு கவிதை

https://kovaikkothai.blogspot.com/2022/01/373-906.html

*
u.line

10. சான்றிதழ்கள்.

 

nilachoui...kamuka vandy

*

17884345_154432788420671_7001231560449851800_n

*

 

unavngivet

21. அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 21

அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 21

இது 21 வது அங்கம்.
இதன் தொடர்ச்சி இரண்டு மூன்று அங்கங்கள் எனது மூன்றாவது வலையில் பதிந்துள்ளேன்
பாருங்கள் அதன் இணைப்பும் தருகிறேன்.)

https://kovaikkothai.blogspot.com/search?q=23)

காலையில் உணவை முடித்துக் கொண்டு 11 மணிக்கு கிறே கவுண்ட் பேருந்து எடுத்தோம்.

IMG_0875[1]

IMG_0876[1]
வழியில்  பாருங்கோ     ஐகியா கடை பிறிஸ்பேணிலும் உள்ளது.

IMG_0882[1]

IMG_0884[1].jpg

சாரதி வரிசையல்லாத மற்ற வரிசையில்வ ழமை போல முதலிருக்கை
படம் எடுக்க வசதியாக பிடித்து அமர்ந்தோம்.  அருமையான காட்சிகளும்  நினைக்க முடியாத கட்டிடங்களின் அழகும் கண்கள் பறித்தன.

IMG_0898[1]

கோல்டன் பீச்  தங்கக் கடற்கரை நெருங்கவே  பாதியளவு தூரத்தில் கட்டணம் செலுத்தி குழந்தைகளிற்குரிய விளையாட்டிடம் நீர்  விளையாட்டு   என்று தெருவில் தெரியத் தொடங்கின

IMG_0899[1]

IMG_0897[1]

IMG_0901[1]

IMG_0902[1]

..கிட்ட வந்திட்டோம்.

IMG_0912[1]

IMG_0916[1]

இத்துடன் இந்த அங்கம் முடித்து அங்கம் 22ல் சந்திப்போம்

வேதா. இலங்காதிலகம். டென்மார்க்29-4-2017

Bridge-and-Trail-36-x-12

https://kovaikkothai.blogspot.com/2019/02/42-22_17.html

இந்த இணைப்பில் தொடர்ந்து 3 அங்கங்களுடன் இந்தப் பயணக் கட்டுரை முடிவடைகிறது.

Thank you

Previous Older Entries