திருமண வாழ்த்து.
” அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன் பழிப்பதில்லாயின் நன்று ” (திருக்குறள்)
காதல் வானில் தூதாகிய தாரகைகளின்
காதல் தூது திருமணக் கூட்டிற்குள் சரணம்.
மோதலின்றிச் சாதல் வரை கூடல் இனிக்கூடல்!
ஈதல் எடுத்தலேயினி வாலிபக் கடைசித் துளிவரை.
காதல் வாழ்க ஆடல் பாடலுடன் நோதலின்றி.
சுனையென ஆசைகள் இணைந்து முளைத்தது.
நனைந்த இதயங்கள் காதலாகிக் கனிந்தது.
முனைவர் விடுதலை மயிலாடுதுறை இளைஞனுக்கும்
முனைவர் உமாதேவி கோயம்புத்தார் மங்கைக்கும்
வினையாகிய காதல் திருமணக் கிரீடம் சூட்டுகிறது.
இனப்பற்றாளன் இனிய பண்பாளன் விடுதலை
தினம் பிறருக்கு உதவுவதில் பிரியமானவன்.
மனம் பெரியாரியலில் மூழ்கி நீந்துகிறான்.
தனம் இவன் ஈழத்தமிழரோடு இணைந்தவன்.
இனசனத்துடன்; 18-1-2013ல் திருமணம் கொள்கிறான்.
எங்களால் மறக்கவியலாத அன்புத் தோழனின்
மணநாளிது மனதார வாழ்த்துகிறோம் வாழ்க!
மங்கை உமாதேவியுடன் பதினாறும் பெறுக!
மங்கலமென்பது கணவனும் மனைவியும் இணைந்து
திங்கள் போல் ஒளிவீச உயர்ந்து வாழ்தலே!
வாழ்க! பல்லாண்டு வாழியவே!
ஓகுஸ் வாழ் தமிழ் மக்கள் டென்மார்க்.
9-1-2013
இந்தியாவில் நடந்த திருமணத்தில் வாசித்து கொடுக்கப்பட்டது.
16.3.2013ல் ஓர வரவேற்பில் மறுபடி என்னால் வாசிக்கப்பட்டது.
பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
16-3-2013.
0.000000
0.000000