30. மகாகவி (பிரபலங்கள்)

Image may contain: one or more people and suit

*

மகாகவி

*

(பாரதி பற்றி – 4வது)

இந்திய எட்டயபுரத்தான்
தந்தை சின்னச்சாமி.
ஈந்தவள் இலக்குமியம்மாள்.
ஐந்தாமகவையில் தாயையிழந்தார்.
¤
இந்த மகாகவி
சொந்தமாக சுப்பையா.
சிந்தனைக் கவி.
ஏந்தினார் முண்டாசு.
¤
சந்தடியின்றி அரசவையில்
முந்தியிருக்கும் கவிஞரானார்.
தந்தது ”பாரதி” யென்று
அந்த எட்டயபுரத்தரசு.
¤
எந்தக் கவிக்கும்
உந்துதலாகுமிவர் வரிகள்.
சந்தம் கொஞ்சிட
சுந்தரமாக எழுதினார்.
¤
குந்தகமற்ற ”அச்சமில்லை”
விந்தையான வீரமேந்திய
வந்தனை வரிகள்.
குந்தியிருக்கிறது மக்களிதயத்தில்.
¤
வந்திக்கும் பெண்மைக்கும்,
வந்தே மாதரம்,
நந்தலாலா வரிகள்
பந்தியிடுகிறது நிறையுணர்வால்.
¤
ஏந்திழை செல்லம்மாவை
ஏந்தினார் மனைவியாய்
வந்தனர் மகளிருவர்
அந்திக்கிரியையில் இருபத்தவர்.

*

வேதா. இலங்காதிலகம் டென்மார்க் 9-8-2016

No automatic alt text available.

29. திருவள்ளுவர்.

 

 

4 வரிப் போட்டி

12928119_1746698228949757_1906415748366125523_n
¤

(தின்மை – தீமை)

குன்றாத பகவன்
தின்மையற்ற ஆதிக்கும்
சென்மமெடுத்தார் செந்நாப்போதார்
என்ற திருவள்ளுவர்.
¤
குன்றுகள் உடையதாம்
மன்னராம் வள்ளுவம்
என்ற நாட்டிற்கு!
நன்கு வேட்டையாடினாராம்.
¤
முன்னோடி திருவள்ளுவர்
இன்னுயிர் மனைவியாக
மென்மை வாசுகியைத்
தன்னுடையவள் ஆக்கினார்.
¤
அன்றாடம் போற்றி
இன்பித்துப் படியென
இன்கவி குறளை
கன்னலமுதாயீந்தார் திருவள்ளுவர்.
¤
தன்னிகரற்ற வாழ்வியல்
நன்மார்க்க நீதிகள்
மன்னுயிர்க்கு ஈந்தார்.
நன்கொடை திருக்குறள்.
¤
பன்முகக் கூறுகளுடைய
ஊன்றுகோல் வள்ளுவம். (திருக்குறள்)
ஆன்மிக அறம்
அன்றாட நெறிகளுடையது.
¤
அன்பான ஒளவையார்
அன்று மதுரையில்
நின்றுதவினார் திருக்குறள்
நன்கு அரங்கேற.
¤
கன்மேலெழுத்து வள்ளுவரது
நன்னூல் திருக்குறள்.
சென்னையில் வள்ளுவருக்கு
இன்னமுதக் கோட்டமுண்டு.
¤
நன்றி மறப்பது
நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது
நன்றென்றார் வள்ளுவர்
¤
தன்னீர்மை பெருக்கிடும்
என்றறிந்து நாட்கனைக்
கொன்றிடாதே திருக்குறள் 
உன்னை சான்றோனாக்கும்.

*

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
7-8-2016.

 

வேறு

தமிழுக்கு உயிரான வள்ளுவனே

முன்னோடியான இவர் தீமையற்ற ஆதிக்கும்
குன்றாத பகவனுக்கும் செந்நாப்போதார் என்று
இன்கவியாகப் பிறவியெடுத்த மகான் வள்ளுவர்.
இன்னுயிர்த் துணைவியாக வாசுகி இணைந்தார்.

கன்னலமுதாய் இன்கவியான குறளை ஈந்தார்.
நன்மார்க்க நீதிகள் நிறைந்த தன்னிகரற்ற
நன்கொடையாக மன்னுயிர்க்குதவும் நூல்.
பன்முகக் கூறுகளுடைய ஊன்றுகோல் வள்ளுவம்.

ஆன்மிக அறம் அன்றாட நெறிகளுடையது.
அன்று மதுரையில் திருக்குறள் அரங்கேற
நின்றுதவியவர் அறிவு, அன்புடைய ஒளவையார்.
சென்னையில் வள்ளுவருக்கு இன்னமுதக் கோட்டமுண்டு.

கன்மேலெழுத்தான ஒரு நன்னூல் திருக்குறள்.
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மற என்றார்! ஒன்றல்ல!
ஆயிரத்து முன்னூற்று முப்பது குறள்கள்!

தமிழர் பண்பாட்டுச் செறிவின் அடையாளம்.
தமிழின் அகரம் அகராதி திருக்குறள்.
தமிழுக்கு உலக இலக்கிய அரங்கில்
தகவுடைய உயரிடம் தந்தார் திருவள்ளுவர்.

11-6-2018

 

 

end

 

28. பா வேந்தர் பாரதிதாசனார்

15+12+s2

பாரதிதாசனார்

சமுதாயச் சிந்தனைக்கு வித்திட்டவர்
பாட்டுக்கவி பாரதிதாசனார் என்று கூற வந்துள்ளேன்.

ஒன்றே சமூகமெனும் சகோதரத்துவம் பற்றி எழுதினார்
சமதர்மத்தால் வாழ்வோம்.
நேசத்தால் ஒன்றாய் நிற்போம் என்றார்.
புதிய உலகம் என்று உலக ஒற்றுமை வரிகூறி
தாமும் தமர்களும் வாழ்வதற்கே என்று
பேரிகைகொட்டி எழுதினார். கூடித் தொழில் செய்க
வாழ்வினிலே உயர்வு கொள் ஆய்ந்து பார்!
மானிட சக்தி பெரிது! முன்னேறு என்றார்.

எழுச்சியுற்ற பெண்கள், மூடத் திருமணம்
குழந்தை மணம் கொடுமையென்றெழுதினார்
பெண்ணக்கு நீதி, குழந்தைப் பேறு
மரணம் தவிர்க்க காதலுக்கு வழி வைத்து
கருப்பை வழி சாத்துவோமென்று
கர்ப்பத் தடைபற்றி அன்றே கூறினார்.

தமிழின் இனிமை, உணர்வு,
தமிழ் வளர்ச்சி தமிழ் காதலென
தமிழ் சங்ங நாதம் முழக்கினான்.
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
என்ற கலங்கரை விளக்க சங்கு நாதம்.

மயில், முல்லை, சூரியன்ஈ காடு
கானல் என்று பணம் கொடுத்து
வாங்காத மருத்துவமாம் இயற்கைக் காட்சி
இன்பம், மக்கள் நிலையை எழுதினான்.
இதனால் மனநலன் சிறந்து
சமுதாய நலன் பெருகுமன்றோ!

எளிய நடையில் தமிழ் நூல் எழுத வேண்டும்.
ஒரு தமிழன் படிப்பில்லை என்றால்
நாணிட வேண்டுமென்றான். இலவச
நூற் கழகம் எவ்விடமும் வேண்டுமென்றான்.
தமிழில்லா பிறமொழி நூல்கள்
தமிழாக்கி வாசிக்கத் தரவேண்டுமென்றான்.

உலகின் சிறந்த ஒளடதம் ஒவ்வொரு
மனிதனுக்கும் மாபெரும் தேவையான
காதலைப் பற்றி 120க்கும் மேற்பட்டு கவிவரிகள்
எழுதினார். என் அத்தான் பொன் அத்தான்
என்றெழுதினார். இதைக் கவிஞர் கண்ணதாசன்
அத்தான் என் அத்தான் என்று பாடி வைத்தார்.

இப்படியாக இன்னும் பல உண்டு! நாடு முன்னேற
மக்கள் நலன் முன்னேற, நல் சமுதாயச்
சிந்தனைக்கு பாரதிதாசனார் பெரிதும் வித்திட்டார்.

https://kovaikkavi.wordpress.com/2014/05/19/18-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-2/

https://kovaikkavi.wordpress.com/2016/08/06/28-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/

12965393-set-of-gold-dividers

27. “கல்வித் தந்தை காமராசர்”

13690700_1731908173745148_5575063480280440550_n

 

கவியுலகப் பூஞ்சோலையின் 15-07-16 தினபோட்டிக் கவிதை ‪#‎கல்வித்‬தந்தை காமராசர்#—- இன்றைய போட்டி கவிதையின் வெற்றியாளர் கவிஞர்_# வேதா. இலங்காதிலகம்.# அவர்களுக்கும் பங்கேற்ற அனைத்து கவிஞர்களுக்கும் வாழ்த்துகள்

சிறப்புச்சான்றிதழ் “கல்வித் தந்தை காமராசர்”

எளிமை நேர்மைக்குப் பெயரேந்திய ஏந்தல்.
ஏழைக்குப் பாடசாலை தந்த உன்னதர்.
ஏழைப் பங்காளனாம் விருதுநகர்காரர்.
சிவகாமி அம்மையார் குமாரசாமி நாடார் வாரிசு.

பெற்றோரிட்ட பெயர் காமாட்சி. அம்மாவின்
செல்லப் பெயர் ராசா. இரண்டும்
இணைத்து ஈற்றில் காமராசு ஆனது.
கல்வி கற்றிட வசதியில்லாச் சூழல்.

துணிக்கடை வேலை. தேசத் தலைவர்கள்
பேச்சுகளால் அரசியல் சுதந்திர போராட்டத்தில்
ஆர்வம். பதினாறு வயதில் காங்கிரசிலிணைவு.
போராட்டம் சிறைச்சாலை வாழ்வாய் வளர்ந்தது.

தேர்தலில் வென்றார். உன்னத நிலைக்குயர்ந்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் காமராசர் காங்கிரசானது.
ஓன்பது ஆண்டு தமிழக முதல்வராயிருந்தார்.
பசிக்குப் பகலுணவு தந்தார் படிக்காதமேதை.

கதராடையுடன் போராடினார் கருப்பு காந்தியானர்.
தொழிற் பேட்டைகள் திறந்தார். பல
நீரணைகள் கட்டினார். விவசாயம் செழித்தது.
தமிழக ஆட்சியைப் பொற்காலம் ஆக்கினார்.

ராஜாஜியின் குலக் கல்வித் திட்டத்தைக்
கைவிட்டார் தென்னாட்டு காந்தியெனவும்
அழைக்கப் பட்ட கர்மவீரர் காரியக்காரர்.
பெருந்தலைவர் என்றும் அழைக்கப் பட்டார்.

இறந்தும் பாரதரத்னா விருது பெற்றார்.
மறத்தமிழனாக வரலாற்று ஏடுகளில் இவர்.
மதுரைப் பல்கலைக்கழகம் மதுரைக் காமராசர்
பல்கலைக்கழகமானது. கடற்கரையில் அவர் சிலை
இன்னும் பல……

வேதா. இலங்காதிலகம்.     டென்மார்க்

காமராசர்

முன்னாள் தமிழக முதலமைச்சர் காமராசர்
ஒன்புது ஆண்டுகள் அரசாண்டார். கருப்புகாந்தி
தென்னாட்டு காந்தி படிக்காத மேதை
வான்முட்டும் எளிமையான பச்சைத் தமிழர்.
இலவசக் கல்வி மதிய உணவீந்தார்.
உப்புச் சத்தியாக்கிரகம், சிறை கலந்த வாழ்வு
தரித்திரனாய் விருதுநகர்வீரர் தரணியாண்டார்.
ஆறுவரை படித்து ஆலைகள், அணைகள் செய்தார்.

2016

NADARS (3)

26.பாரதியார்.

zz

*

பாரதியார்.  (பாரதி பற்றி  – 3 வது)

*

 

பாரதம் பெருமையுறும் தவப்புதல்வன் மகாகவி
பாரதி பிறந்தார் நெல்லை எட்டயபுரத்தில்.
ஆரதி செய்கிறாரவர் ஆராதனைக் கவிகளை.
சீரதிகமென்று சீராட்டுகிறார் உலக மக்கள்.

*

நீரவர்(அறிவுடையோர்) யாவரும் விரும்புமிவர் கவிகள்
சாரம் அதிகம்! யாரும் மறுக்கார்.
வீரதீர வரிகளும் கூரதிகமாய் எழுதி
யாரதிகம் எழுதுவார் என்ற நிலையே!

*

வேரதிகம் ஓடிய இவன் சாயல்
தீர வரிகளும் அதிகம்.
போரதிகம் செய்து புலவர் பட்டத்திற்கு
பாரதியாகவும் சாரத்தியம் செய்கிறார் பலர்.

*

பாரதியென்று பதினொரு வயதில் பட்டமாண்டார்.
ஊரதிருது நூற்று இருபத்திரண்டு வருடமாக
பாரதி வரிகள் பாராளுது. பாரதியாக
சோராத கவிகளாயும் பலர் எழுதுகிறார்கள்.

*

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
11-12-2015

*

1653344_615174351888104_825373005_n

25. டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம். (15-10-1931—27-7-2015)

1506516_340117702778936_7427974958756135061_n

டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம். (15-10-1931—27-7-2015)

இந்திய ஏவுகணை நாயகன், தமிழ்
இலக்கிய ஆர்வலன், பன்முக விஞ்ஞானி
இந்தியா வல்லரசாகக் கனவு கண்டார்.
இராமேஸ்வரத்தில் உதித்த முத்து கலாம்.
இந்திய அறிவியல் நட்சத்திரம், வீணையும்
இசைக்கும் இசை ஆர்வலர் மரணமற்றவர்.
மகத்துவர், மக்களின் ஜனாதிபதியானவருடல் மறைந்தது.
மனிதருள் மாணிக்கத்திற்கு ஆத்ம அஞ்சலி.

பத்மபூஷன், பாரதரத்னா, ஆர்யபட்டா இன்னும்
பத்விபூஷன் என்று எண்ணற்ற விருதாளர்.
படகு சொந்தக்காரன் மரைக்காயர் தந்தையார்.
ஜைனுலாப்தீன் – ஆஷியம்மாவின் திருப்புதல்வன்.
சைவ உணவுக்கார இசுலாமியர், உலகமறை
திருக்குறளின் அடியொற்றி நடந்த பிரம்மச்சாரி.
திருவே அறிவென உலகோரை ஊக்கியவர்.
நெருப்பின் சிறகுகளிவர் ஆங்கிலச் சுயசரிதை.

மாமேதை, கனவுகள் காணுங்களென்று நினைவாகினார்.
மார்க்கம் காட்டி இளையோர் சிந்தனைகள்
தீர்க்கமாக மாணவர் குழாமுடன் கலந்தவர்.
பார் போற்றும் விஞ்ஞானி கவிஞருமாவார்.
நாட்டுக்காகத் தனையீந்த நற் சிந்தனையாளர்.
அறிவியல் தொழில் நுட்பத்தை நல்ல
நெறியோடு காதலித்த இந்தியத் துருவநட்சத்திரம்.
அறிவால் அறிமுகம் அறிவுறுத்திய அறிஞன்.

சாந்தி சாந்தி

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
28-7-2015.

11817266_915548441817403_3094461405612453494_n

anjali-2

24. எம்.எஸ்.வியிசை வண்ணங்கள் தரளக் குவியல் 1+2

s1

1. எம்.எஸ்.வியிசை வண்ணங்கள் தரளக் குவியல்

அசைந்தாடும்தென்றலின் பயணம் இவரிசை.
திசையின்றி உலகெங்கும் பரவிய பேரருவி.
இசைக் கொளரவம் நீராரும் கடலுடுத்தி..
நசையுறு இசைக்கு அழிவில்லை அஞ்சலிகள்.

சங்கீதம்! இங்கிதமுடை சுவர சாரதி.
அங்கீகாரம் கலைமாமணி, பிலிம் பெஃயர்,
மங்காத வாழ்நாள் சாதனையாளர், கௌரவ டாக்டர்.
சங்கீத இராசாங்கம் 1945 – 2015வரை.

இசைப்படியமைவு ” பணம் ” என். எஸ். கிருஷ்ணன்
இசைக்கருவி மூன்றுடன் தாழையாம் பூமுடித்து.
இசைக்கருவி முன்னூறுடன் எங்கே நிம்மதி.
இவரிசைமன்னன் பேரருவி, மெல்லிசை மன்னன்.

மனயங்காத் சுப்பிரமணியம் விசுவநாதன் ஐயா
கேரளா பாலக்காட்டு மகாஇசைப்பிறப்பு 24-6-1928.
சரளமாய் 1200 படங்களிற்கு மேலிசையிட்டார்.
பிரவாளயிசையதிபதி உயிர் மறைவு 14.7.2015.

(பிரவாளம் – பவளம்.)

வரிகளாக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
14-7-2015

2 எம்.எஸ்.வியிசை வண்ணங்கள் தரளக் குவியல்

முருக பக்தர் எம்.எஸ்.வி
வறுமையிலிருந்து பெருமை பெற்றார்.
வெறுமையறு நிறைவிசை சமைத்தார்.
பெருமையுடை துணைவி ஜானகியம்மாள்.
கல்விச்சாலைசெல்லாத இசைமேதை.
கண்ணகியிலிருந்து பத்துப் படநடிகர்.
கடும் வயோதிபத் துன்பமேக(ஏகல்)
கண்மூடினார் அமைதி கொள்ளட்டும்.

எண்பத்தேழு வருடங:களில் எத்தனையிசை!
எகிப்து இசை பட்டத்துராணி
மெக்சிக்கன் இசை முத்தமிடும் நேரமெப்போ
ரஷ்ய இசை கண்போன போக்கிலே
லத்தீன் இசை யார் அந்தநிலவு
யப்பானிசை பன்சாயி காதல்பறவைகள்
பெர்சியன் இசை நினைத்தேன் வந்தாய்!
பெருமை!..இனிமை!..தமிழே!….

வரிகளாக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
15-7-2015

anjali-2

23. இன்று காந்தி உதித்த தினம்

photo

இன்று காந்தி உதித்த தினம்

வாரா வாரம் நவஜீவனிற்கு எழுதியது
நேரான வாழ்வின்  சத்திய சோதனை
பாரமான தொடர்ச்சியான தொரு வரலாறு.
ராஜீயத்துறையில் காந்தி செய்த சோதனைகள்
ஆன்மீகத் துறையிலவர் நடத்திய சோதனைகள்
பாராட்டும் காந்தியின் சுயசரிதையாக அமைந்தது.
காந்தியின் இலட்சியம் தன்னைத் தானறிதல்,
கடவுளை நேருக்கு நேராகக் காணல்,
மோட்சத்தை அடைதல் என்றதாக இருந்தது.
இவற்றிற்காகவே வாழ்கிறேன், நடமாடுகிறேன், நான்
பேசுவன, எழுதுவன, முனைவனவிக் குறிக்கோளுடையதே.
முதியவர்கள் மட்டுமன்றி குழந்தைகளும் விளங்கிடும்
வகையில் மதவிடயங்கள் மட்டுமே இணைப்பதென
சத்திய சோதனையை காந்தி எழுதினார்.

இது வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
2.10-2014

வேறு

காந்தி மகாத்மா காந்தி.
காந்தி எனும் சொல்லில்
சாந்தி எனும் அல்லல்
நீந்திய நிலை உலகில்
வந்ததே இல்லையே ஏன்!

அகிம்சா மூர்த்தியாய் பாதி
விகித மனிதரும் மானிலத்தில்
முகிழ்த்தல் பூமி நந்தவனமாய்
ஆகிட ஒரு வாய்பன்றோ!
ஆகிடவில்லையே ஏன்!

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
1-10-2013.

 

 

0032

22. கவி கண்ணதாசன்

puthusu1

எண்ணங்களை கவி எண்ணங்களை
கண்ணதாசன் வளர வைக்கிறான்.
வண்ண வண்ணக்கவிதைகள் உதயம்.
மண்ணிலே இதை மறுப்பாரில்லை.
பின்னிய அவன் பாடல்களே
பொன்னான பதிகங்களாக தினந்தினம்.

sunburst

21. நாட்டியப் பேரொளி பத்மினி.

312847_243304089052929_124832310900108_630202_1083883452_n

(இது எனது 1000 வது பதிவு.)

நாட்டியப் பேரொளி பத்மினி.

சேரநாடாம் கேரளப் பதியின் திருவானந்தபுரத்தின்
ஆரணங்கு அரச பரம்பரையில் உதித்தாள்.
பேரளந்த கோகினூர் வைரம் இவள்.
ஆரத்தினாள் நாட்டியக் கலையை வாழ்நாளில்.
காரணன் தங்கப்பன் பிள்ளை தந்தையார்.
தாரம் இலட்சுமி அம்மையார் தாயார்.
தாரகைச் செல்வம் மழலை பத்மினியை,
பரதப் புதையலை தாராட்டினார் 6-2-1932ல்.

நாட்டியம் நான்கு வயதில் பயிற்சியாம்.
ஊட்டம் கதகளி வரிசையில் ஆரம்பம்.
ஆட்டம் அரங்கேற்றம் பத்தாம் வயதிலாம்.
கூட்டாகச் சகோதரியரோடு அரங்குகள் ஏறினர்.
நாட்டியப் பேரொளி என்று விரிந்தார்.
பெருமையுடன் பிறப்புகள் லலிதா, ராகினியார்
‘ திருவாங்கூர் சகோதரிகள் ‘ பெயரை ஆண்டனர்.
பெரும் தகவு எல்லையறு நடனத்தில் பெற்றனர்.

பருவம் பதினாறில் இந்திப்பட இசைவு.
திருவுடை நடனத்தால் கல்பனாவில் நுழைவு.
ஒருமித்து இந்தியில் இருபத்தைந்து நிறைவு.
வேதாளஉலகம் பாம்பாட்டி நடன வளைவு
வேள்வியாய்த் தமிழ் முதற்பட நுழைவு (1948ல்.)
மணமகள் தமிழ் நடிப்பில் முதலானது (1951ல்.)
பணம் சிவாஜியுடன் கதாநாயகி யாக்கியது (1952ல்.)
மணம் வீசியது சிவாஜியிணைந்த 59 படங்கள்.

நூற்றைம்பது படங்களில் நடனத் தோகையை
நளினமாய் விரித்தார் நர்த்தக நூன்மடந்தை.
தமிழ், மலையாளம், இந்தி கன்னடம்
தெலுங்காம் ஐம்மொழிப் படங்கள் 250 பூரணம்.
அலுக்காது நடித்தார் பரதக்கலை பர்வதம்.
இந்தி-ரஷ்யமொழி பரதேசியிலும் நடித்தார்.
இவருருவின் முத்திரையை சோவியத் அரசார்
பெருமையாக வெளியாக்கி கௌரவம் கொடுத்தார்.

பத்மினியின் செல்லப் பெயர் பப்பிம்மா.
உத்தமபுத்திரன் இவருக்கொரு மகன் பிரேமானந்.
பாட்டிம்மா, வெள்ளையம்மா, பார்த்தால் ராணி
சம்யுக்தா தான். பரதப் பேரொளியின்
சம்பூரண நடனம், கற்சிலை உயிர்ச்சிலையாகும்
”மன்னவன் வந்தானடி ” திருவருட் செல்வரில்.
தில்லானா மோகனாங்கி 1961-5-25ல்
கல்யாணம் புரிந்தார் வைத்தியர் இராமசந்திரனை.

பேரழகி முத்திலகங்களுடனும் நடித்தார் இணைந்து.
சிறந்த நடிகை விருது 4முறையானது. (1954-59-61-66)
1958 தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது.
1985ல் பூவேபூச்சூடவா பிலிம் பெயர் விருது.
1970ல்அமெரிக்க நியூயெர்சி வாழ்வானது.
பரதத்தைத் தேங்கவிடாது கங்கையாய்ப் பெருக்கியது
1974ல் நியூயெர்சியில் நடனப் பள்ளியாரம்பமானது.
1981ல் மங்கையர் திலகம் இராமச்சந்திரன் மறைவு.

பரதக்கலை பர்வதம் பத்மினியின் ஆடல்
பன்னாட்டுத் தமிழ்நடுவ விழாவில் 72 வயதில்.
பாடல் திருமதி சுதா ரகுநாதனாகிப்
பதிவானது நியூயோர்க்கில் 2003ல் இறுதி.
வியக்கும் மொழி ஆளுமை நர்த்தகி.
மயக்கும் பரத ஆளுமை வித்தகி.
தயக்கமற்ற நிரூபணம் வஞ்சிக்கோட்டை வாலிபன்.
” கண்ணும் கண்ணும் கலந்து ” வைஜைந்தியுடனாடல்.

அரசிளங்குமரியின் நினைவின்று வியட்நாம் வீடு
மீண்ட சொர்க்கமான தேனும் பாலுமே.
இமயமளவான பரதக் கலாப மயில்
அரசகுமாரியுருவான அழகு மயில் தங்கப்பதுமை.
மாதவப் பெண் மயிலாள் 24-9-2006ல்
அமரதீபமானார். என்மனதிலிவர் ஆடற் காவேரி.
இன்னொரு பத்மினியாக இன்று சோபனா.
பரதத் தலைமுறை தொடரட்டும் தொடரட்டும்.

(ஆரத்தி – தீபஆராதனை. தாராட்டினார் – தாலாட்டுதல்.
தாரகைச் செல்வம் – கண்மணிச் செல்வம்.
நூன் மடந்தை – கலைமகள். இசைவு – இணக்கம்.)

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
22-6-2014.
(இலண்டனுக்கு தொண்ணூறுகளில்  நாட்டியப் பேரொளி பத்மினி  ஓரு நடன அரங்கேற்றத்திற்கு வந்த போது எமது மகள் இலண்டன் தமிழ்வானோலி அறிவிப்பாளராகப் பணி புரிந்த போது எடுத்த பேட்டியின் போது எடுக்கப்பட்ட படம் இது.) 188847_10200228612615190_2097902116_n

 

13346564_1867964049896585_4531687876141509918_n

 

திருவாங்கூர் சகோதரிகள் (லலிதா-பத்மினி- ராகினி)

நாட்டியப் பேரொளியுடனான நேர்காணல் 1: http://youtu.be/Rh1TaM09hdw
2: http://youtu.be/sbzd0XwWqDA

p – sep-14

wordpress-2
16161859-vector-set-of-vintage-calligraphic-ornaments

Previous Older Entries