யார் குரலிது!
இனிக்கும் நான்குமாத மழலை மொட்டுறவு
இந்திரவில் (வானவில்) ஒரு பூலோக சொர்க்கம்!
இவ்வுலக பந்தத்தால் இறுக்கமாய் உருவாகும்
இணையற்ற புனித நேசப் பிணைப்பு!
அமிர்தத் தாய்ப்பால் சுவைக்கிறான் எம்
அரிய இரண்டாம் பேரன் சோழன்.
சுதந்திரமாய்ச் சுவைத்த வேளை நான்
சுகம் விசாரிக்க உள் நுழைந்தேன்.
என் குரலோசை கேட்டதும் யாரிது!
என்னம்மா அப்பா தவிர்ந்த குரலிது!
எங்கிருந்து வருகிறது! ஆவல்! ஆர்வம்!
பரபரப்பு சுட்டிப்பயல் ஞானக் குழந்தைக்கு!
பால் குடிப்பதை உடன் நிறுத்தினான்.
பக்கமெல்லாம் தலை திருப்பித் தேடினான்.
பார்த்திட முன்னின்றேன் ‘ஹாய்!’ கூறி.
பரவசமாய்ச் சிரித்தென் கரத்துள் வந்தான்.
குழந்தை மழலைப் பிதற்றல் பூவாளிக்
குளிப்பாட்டல், குளிர்கழிச் (ஐஸ்கிறீம்) சுவையமுதம்!
மந்திரப் பழம், இந்திரப் பழம்
சந்திரப் பழமான விநோத இன்பம்!
சடுதியாய் எழுந்தென் குரல் தேடிய
சோழன் வந்துவந்து போனானென் மனதில்!
நாள் முழுதுமவன் லீலா விநோதத்தை
நானுமிவரும் சொல்லிச்சொல்லிக் களித்தோம்! அற்புதம்!
பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
1-2-2015.