இடைவேளையின் பின்னர் 2
முதலில் உறவுகளை சந்தித்த மகிழ்வு.
பிறகு வியர்வை.
குளிரூட்டப்பட்ட நாடு போல டென்மார்க்.
இது நேர் எதிர்மாறு. ஆவியில் வேகவைப்பது போல உடல்.
தங்கை மகள் ” இந்தாங்கோ பெரியம்மா”.. என்று லமுனேற் செய்த ஒரு அட்டையைத் தந்தாள். அதை விசிறியாகப் பாவித்தேன். காற்றாடி சுற்றினாலும் அதை மீறி வியர்த்தது. திட்டமிட்டபடி முகநூல் நண்பர் திரு சிறி சிறீஸ்கந்தரஜா வீட்டிற்கு எனது தம்பியுடன் விஐயம் செய்தோம்.
மிகவும் இலட்சுமீகரமான அன்புடை தோற்றம் தந்த இவரது மனைவி மகளைக் கண்டு அளவளாவி வந்தோம்.
முகநூல் நண்பர் டாக்டர் முத்தையா கதிரவேற்பிள்ளை முருகானந்தம் (ஹாய் நலமா புளொ ஸ்பொட்.கொம்.) மிகவும் பரபரப்பாக நடமாடும் மனிதர் இவரை வீட்டில் ஆறுதலாகச் சந்திக்க முடியாது என்று இவரது வீட்டிற்கு செல்லாது கிளினிற்குச் சென்றோம். இவருடன் அளவளாவி. எனது 2 புத்தகங்களையும் கொடுத்தேன் .அவரும் தனது 3 புத்தகங்களை எனக்குத் தந்தார். நான் நின்ற 2 ஞாயிற்றுக் கிழமையும் இவரது ஆக்கம் – கட்டுரை – வீரகேசரி பத்திரிகையில் பார்த்தேன்.
மிகவும் அன்பான இளமைத் தோற்றம் கொண்ட இனியவர். நோயாளிகளை நிறுத்தி வைத்துத் தனது நேரத்தை எமக்குத் தந்தார். மிகவும் மகிழ்ந்தோம்
– மிக்க நன்றி.
பம்லப்பிட்டி கோயிலுக்குச் சென்றேன். இது நானாக நடந்து சென்றேன். போனவுடன் புறாக்கள் என்னைப் பறந்து வந்து சுற்றின. ஒருவேளை பக்தர்கள் பிரசாதம் போட்டுப் பழக்கியுள்ளனரோ!…சுற்றிப் பார்த்திட்டு ஒ!..உன்னிடம் .ஒன்றுமில்லையா எனக் கூட்டமாகப் பறந்து சென்றன…
கிளிக்கினேன்.
ஆறுதலாக வணங்கிய பின் அமர்ந்திருந்து பார்த்த போது பச்சைப் பசேல் என கூரை மேலே தென்னை ஓலைகள் கண்ணையும், மனதையும் கவர்ந்தது.
புதிய கோயில் திறக்கவில்லை பூட்டியிருந்தது.
அதையும் படம் எடுத்த பின் வீடு சென்றேன்.
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
30-3-2014