*
தொலைந்தது மீண்டும் வந்தது…
*
காலப்பஞ்சுப் பொதியில் தீப்பிடித்து
நிர்மூலமான வீடுகள், காணிகள் புத்துருவானதென்று
உயிர் பிழியப்பட்ட மனம் அடங்கலாம்.
உருக்குலைந்த குடும்பமினித் திரும்புமோ!
*
ஆடிக்காற்றாய் அலைந்த தமிழர் மனம்
தேடியுறவுகளை அலைந்து பெருமூச்சிடும் மனம்
தொலைந்தது மீண்டும் வந்தது என்று
குதூகலித்துக் கொண்டாடுமோ ஒரு நாள்!
*
வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
20-12-2010 வார்ப்பு. கொம் படமும் வரிகளில் அன்று எழுதியது.