(Art:- by Vetha)
‘ அ ‘ கர வரிகளில்
‘ ஒள ‘ காரம்.
ஓளவியம் பேசேல்.
பொறாமை வசனங்களைப் பேசாதே.
இது ஒளவையார் வரி.
இனி எனது வரிகள்.
1. ஓளவையார் மொழி படித்து நட.
2. ஓளவியம் கொள்ளுதல் தவிர்.
ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
18-9-2010.
நல்ல தமிழ்.
உயிரெழுத்து உயிருள்
பயிராகும் முதலெழுத்து.
உயிர், மெய்ப் பயிரெழுந்து
உணரவைக்கும் அகிலத்தை.
மொழிகள் அழகுடை மலர்கள்.
மொழிகள் உருசியுடை கனிகள்.
விழி நிறைந்த இன்பத் துளி.
அழிவற்ற பாதைக்கு ஒளி.
எடுத்தாள ஆள இன்பம்.
எனக்கும் உனக்கும் எழிலானது.
எழுது! எட்டும் வரை எழுது!
எல்லையில்லா இன்பத்தின் கொல்லை.
பா ஆக்கம். வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
20-1-2011.
வேதாவின் ஆத்திசூடி உயிர் எழுத்து வரிகள் இத்துடன் முடிவடைகிறது.