12. வேதாவின் ஆத்திசூடி – ‘ ஒள

 

 

(Art:-  by Vetha)

 

‘ அ ‘  கர வரிகளில்

ஒள ‘  காரம்.

 

ஓளவியம் பேசேல்.

பொறாமை வசனங்களைப் பேசாதே.

து ஒளவையார் வரி.

இனி எனது வரிகள்.

 

1.     ஓளவையார் மொழி படித்து நட.
2.    ஓளவியம் கொள்ளுதல் தவிர்.

 

க்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
18-9-2010.

நல்ல தமிழ்.

யிரெழுத்து உயிருள்
பயிராகும் முதலெழுத்து.
உயிர், மெய்ப் பயிரெழுந்து
உணரவைக்கும் அகிலத்தை.

மொழிகள் அழகுடை மலர்கள்.
மொழிகள் உருசியுடை கனிகள்.
விழி நிறைந்த இன்பத் துளி.
அழிவற்ற பாதைக்கு ஒளி.

டுத்தாள ஆள இன்பம்.
எனக்கும் உனக்கும் எழிலானது.
எழுது! எட்டும் வரை எழுது!
எல்லையில்லா இன்பத்தின் கொல்லை.

பா ஆக்கம். வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
20-1-2011.

 

வேதாவின் ஆத்திசூடி  உயிர் எழுத்து வரிகள் இத்துடன் முடிவடைகிறது.

                                       

11. வேதாவின் ஆத்திசூடி – ” ஓ’

  

 

(Art:–by Vetha.)

 

 

அ’ கர வரிகளில்

‘ காரம்.

 

ஓதுவது ஒழியேல்.

நல்ல நூல்களைப் படித்தலை
விட்டுவிடாதே. படித்தபடியே இரு.

இது ஒளவையார் வரி.

இனி எனது வரிகள்.

1.   ஓச்சம் (உயர்வு) கொள், நன்னடத்தைகளால்.
2.   ஓசி வாங்கி வாழப் பழகாதே.
3.   ஓடக்கோல் போல் பிறருக்கு உதவியாயிரு.
4.   ஓடுதல் உடலுக்கு நல்ல அப்பியாசம்.
5.   ஓதி, உணர்ந்து வாழ்தல் அழகு.
6.   ஓவியக்கலை மனதுக்கு மகிழ்வு தரும்.
7.   ஓர்மம் (மனஉறுதி) கொண்டு முயற்சிகள் செய்ய வேண்டும்.
8.   ஓட்டைவாயனாக வாழப் பழகாதே.

க்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
18-9-2010.

                                

10. வேதாவின் ஆத்திசூடி – ‘ஒ

 

Art by vetha

 

‘அ’ கர வரி அடிகளில்

ஒ’  கரம்

ஓப்புரவு ஒழுகு.

உலகத்தோடு பொருந்த, உலகநடையைத் தெரிந்து அந்த வழியிலே நட.
இது ஒளவையார் வரி.

இனி எனது வரிகள்.

1.    ஒத்தாசை செய்து வாழ்.
2.    ஓப்புரவறிந்து ஒழுகு.
3.    ஓப்பமிடமுன் உள்ளடக்கம் வாசி.
4.    ஓட்டுக் கேட்டல் தவிர் ஒரு மனப்பாடுடை வழிபாடு தெளிவுடைத்து.
5.    ஓற்றுமை ஏற்றமுடைத்து.
6.    ஒழுங்கீனம் மதிப்பிறக்கும்.
7.    ஒழுக்கம் ஒருவனுக்கு ஒளி தரும்.

க்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
5-8-2010.

humming-bird

                                              

9. வேதாவின் ஆத்திசூடி – ” ஐ”

 

art by vetha.

 

 ”அ’கர வரி அடிகளில்

” ஐ” காரம்.
 

ஐயம் இட்டுண்.
ஏழைகள், அங்கவீனரெனும் இயலாதவர்களுக்கப் பிச்சை

இட்டு உண்.
ஓளவையின் வரி இது.

 

 

இனி எனது வரிகள்.

 

1. ஐக்கியம் பேணு.
2. ஐசுவரியம் என்பதில் அறிவும் அடக்கம்.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
      ஓகுஸ், டென்மார்க்.
      4-82010.

 

                              

8. வேதாவின் ஆத்திசூடி – ‘ஏ’

 

art by Vetha.

 

‘அ’ கர வரி அடிகளில்

‘ஏ’ காரம்.
 

ஏற்பது இகழ்ச்சி.

ஒருவரிடத்தில் சென்று பிச்சை கேட்பது,
இரந்துண்டு வாழ்வது இகழ்தலுக்குரியது.
இது ஒளவையாரின் வரி.

இனி எனது வரிகள்.

1.    ஏகாந்தம் எப்போதும் நல்லதல்ல.
2.    ஏவல் மொழி கேட்டுப் பிறரைப் பகைக்காதே.
3.    ஏய்த்தல், ஏமாற்றுதல் விலக்கு.
4.    ஏமாளியாய் வாழாதே.
5.    ஏண்டாப்புக் கொள்ளாதே.
6.    ஏட்டுப் படிப்புடன் அனுபவ அறிவும் இணை.
7.    ஏன் என்ற கேள்வி எப்போதும் கேள்.
8.    ஏற்றமும் தாழ்வும் சமமெனக் கருதி வாழ்.

 ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
      ஓகுஸ், டென்மார்க்.
      4-7-2010.

imagesCACSXL03

                               

7. வேதாவின் ஆத்திசூடி. – ‘எ’

 

Art by Vetha.

 

 ‘அ’ கர வரி அடிகளில்

‘எ’ கரம்.

 
 எண்ணெழுத்து இகழேல்.
கணிதத்தையும் இலக்கணத்தையும் அவமதிக்காதே.
இது ஒளவையாரின் வரி.

இனி எனது வரிகள்.

1.    எடுத்துக் காட்டு, நல்லவராக வாழ்ந்து.
2.    எகத்தாளமாகப் பேசுவது தவிர்.
3.    எடுத்தெறிந்து பேசுவதும் அழகல்ல.
4.    எடை அதிகரிக்க விடாதே.
5.    எண்ணம் தூயதாக இருத்தல் நலம்.
6.    எத்தனை தரமும் நல்லதற்கு எத்தனிக்கலாம்.
7.    எண் எழுத்து ஞானம் எவருக்கும் தேவை.
8.    எண்ணும் எழுத்தும் ஏற்றம் தரும்.
9.    எதிரியை நண்பனாக்குதல் நல்லதல்ல.
10.  எதிர்ப்பைத் துணிவுடன் எதிர் கொள்ளு.
11.   எதிர் நீச்சலிட்டு வாழ்வை வெல்.
12.   எரிச்சலுணர்வை அண்டவிடாதே.
13.    எச்சரிக்கையுணர்வு எப்போதும் தேவை.
14.   எம்மை நாமே புகழ்தல் அழகல்ல.
15.    எல்லம் (இஞ்சி) உணவில் சேர்.
16.    எழுத்தைப் பிழையற எழுதப் பழகு.
17.    எழுத்தைக் கற்பிப்போன் உயர்ந்தவனாகிறான்.
18.    எறும்பு போல் சுறுசுறுப்பாயிரு.
19.    எல்லை மீறாத அளவு எதற்கும் தேவை.
20.    எழில் கொஞ்சும் இயற்கை ஆரோக்கியமுடைத்து.
       
ஆக்கம்   வேதா. இலங்காதிலகம்.
        ஓகுஸ், டென்மார்க்.
        4-8-2010.

3FlowersDiv

                             

6. வேதாவின் ஆத்திசூடி – ‘ஊ’

 

uuvanna

Art by Vetha.

 

‘அ’ கர வரி அடிகளில்

  ‘ஊ’ காரம். 

ஊக்கமது கைவிடேல். ( ஒரு தொழில் செய்யும் போது முயற்சி, மனவலிமையைக் கைவிடாதே.)
இது ஒளவையாரின் வரி.

இனி எனது வரிகள்.

1. ஊக்கம் உயர்வுக்கு ஏணி.
2. ஊடல் இணைகளுக்கு இன்பம்.
3. ஊதாரித்தனம் வாழ்விற்கு உதவாது.
4. ஊதற்காற்றில் உடலைப் பேணு.
5. ஊமைக் காயம் ஆபத்துடைத்து.
6. ஊரிற்கு நல்லது செய்.
7. ஊராரை மதித்து வாழ்.
8. ஊழல் தீவினைக்கு வழி வகுக்கும்.
9. ஊறுகாய் உணவின் சுவை மாற்றும்.
10. ஊனமுடையோரையும் ஏற்று வாழப் பழகு.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
27-7-2010.

                                       

5. வேதாவின் ஆத்திசூடி – ‘உ’ கரம்.

 

‘அ’ கர வரி அடிகளில்

‘உ’  கரம்.

 

உடையது விளம்பேல். (தன்னுடைய பொருளை
அல்லது கல்வி முதலிய தன் சிறப்பைத் தானாகப் புகழ்ந்து பேச வேண்டாம்)
இது ஒளவையாரின் வரி.

 

இனி எனது வரிகள்.

 

1. உகந்தவர் நட்பைத் தேடு.
2. உக்கிரம் கொள்ளல் ஆரோக்கியக் கேடு.
3. உசாவுதல் அறிவின் மேம்பாடு.
4. உச்சரிப்புத் தெளிவு மொழிக்குயர்வு.
5. உடற் பயிற்சி நாளும் அவசியம்.
6. உடல் எடையை அளவாக்கு.
7. உடற் கொழுப்பு அழித்தல் சுகம்.
8. உட்பகை உன்னையும் கெடுக்கும்.
9. உணவில் ஆரோக்கியம் தேவை.
10. உண்மையால் உயரலாம்.
11. உதறிவிடு கெட்ட சகவாசங்களை.
12. உத்தம நட்பு உயர்வு தரும்.
13. உத்தமனாக வாழ முயற்சி செய்.
14. உபகார உணர்வு உன்னதமானது.
15. உயிர்க் கொலை தவிர்.
16. உரிமையோடு உறவு கொண்டாடு.
17. உலக ஞானம் தேடு.
18. உலோபியாய் வாழாதே.
19. உழைப்பு உரம் தரும்.
20. உள்ளி உணவில் சேர்.
21. உள்ளுணர்வை எப்போதும் அவதானி.
22. உள்ளெரிச்சல் துடை.
23. உறக்கம் அளவாகக் கொள்.
24. உறவு குணத்தில் உயர்ந்தோரோடு ஆகட்டும்.
25. உறுதி எண்ணத்தில் கொள்ளு.
26. உறைவிடம் துப்புரவாய் வைத்திரு.
27. உற்றாரின் உறவு இனியது.
28. உற்சாகம் உன் ஆயுதமாக்கு.
        —————————————-

வரிகள் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

                                 

4. வேதாவின் ஆத்திசூடி. – ‘ஈ’

  

 

 

 ‘அ’ கர வரி அடிகளில்

‘ஈ’ காரம்.

 

ஈவது விலக்கேல். (ஈவது- ஒருவர் மற்றவருக்குக் கொடுப்பது.)
விலக்கேல் – தடுக்காதே. ஒளவையாரின் வரிகள் இது.

இதையொட்டிய எனது வரிகள்.

1. ஈகம் தேவைக் கேற்ப அமையட்டும்.
2. ஈடழிய வாழாதே.
3. ஈட்டும் பொருள் நேர்வழியாகுக.
4. ஈகைக் குணம் உயர்ந்தது.
5. ஈசனைத் துதி.
6. ஈச்சப்பியாய் வாழாதே.
7. ஈரடிக் குறள் படித்து நட.
8. ஈனமாக வாழாதே.
9. ஈன்றவரைப் பேணு.

ஆக்கியவர் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

 

                              Big Blue Divider

                             

3. அ, கர வரிசையில் ” இ ”

 

 

 

” இ ” கர  வரி.

 

இயல்வது கரவேல்.
(இயல்வது – கொடுக்கக்கூடிய பொருளை
கரவேல் – ஒளியாதே.  (ஒளியாமல் கொடு).

1. இகத்தாளம் (கிண்டல், ஏளனம்.) செய்யாதே.
2. இகழ்தல் பண்பல்ல.
3. இக்கட்டில் கை கொடு.
4. இங்கிதமாய்ப் பேசிப் பழகு.
5. இசை இன்பம் தரும்.
6. இசைகேடின்றி இசை பயில்.
7. இஞ்சியையும் உணவில் சேர்.
8. இடம்பம் (ஆடம்பரம்) அவசியமற்றது.
9. இடர் துடை.
10. இடை மெலி.
11. இடைவேளையுடன் வேலை செய்.
12. இம்மையில் நன்மை செய்.
13. இயற்கையாம் அற்புதம் ரசி.
14. இரக்க குணம் கொள்.
15. இரத்தப் பலி வேண்டாம்.
16. இரகசியம் பாதுகாத்திடு.
17. இரசித்தல் இன்பம்.
18. இரண்டகம் (துரோகம், வஞ்சகம்) விலக்கு.
19. இரத்தலின்றி உழைத்திடு.
20. இரவி ஒளி உயிர்ச்சத்து.
21. இழுக்காறு (தீயொழுக்கம், தீநெறி) வேண்டாம்.
22. இலட்சியம் கொண்டு முன்னேறு.
23. இலயம் இசைக்கு வேர்.
24. இலைக் கறி உணவில் சேர்.
25. இளமையில் இயன்ற நல்லது செய்.
26. இளநீர் உடலுக்கு ஆரோக்கியம்.
27. இன்னா செய்யாது வாழ்.
28. இன்சொல் பேசல் ஆனந்தம்.
29. இன்னிசை மனஅமைதிக்கு மருந்து.
30. இறைமொழி (வேதம்) படியுங்கள்.
               
                  ———————————-

‘குழந்தைகள் இளையோர் சிறக்க’ என்ற எனது இரண்டாவது நூலில் அ கரம் ஆ கரம் ஆகிய இரு அங்கமும் பிற்பகுதி சிறுவர் பாடலில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
அ, ஆ, இ கர வரிகள் யேர்மனியிலிருந்து வெளிவரும் ‘மண்’ சஞ்சிகையிலும் வெளிவந்துள்ளது.

                            

                           

Previous Older Entries