என் கணனி அனுபவம்.
ஆரம்பத்தில் கவிதைகளைத் தமிழில் பாமினியில் எழுதி ரி.ஆர்.ரி தமிழ், அலை, இலண்டன் தமிழ் வானொலிக்கு மின்னஞ்சலில் அனுப்பியபடி இருந்தேன்.
தமிழ் எழுத்துக்களை (பாமினி வேறும் தமிழ் எழுத்துகளை) எமது நகரத்து நண்பர் ஒருவர் பதிந்து தந்தார். இவருக்கு நன்றி.
கணனியில் இணையத் தளங்கள் பார்ப்பது, கவிதைகள், செய்தி வாசிப்பது என்று காலம் போனது. இதைக் கணவரும் செய்வார். 3 புத்தகங்கள் வெளியிட்டதும் கையெழுத்துப் பிரதிகளை அனுப்பித் தான்.
ஆனால் புத்தகங்களை மக்களிடம் பரப்புவதில் சிரமம் இருந்தது. இணையத்தளம் திறக்கலாம் என்று எண்ணம் உதித்தது. இளம் நண்பர்களிற்கு வந்து உதவி செய்ய நேரமே இல்லை. உதவி கேட்டால் மளமளவென செய்தனர் அதைக் காட்டித் தரும் உதவி மனமில்லை.
நானாகவே வேட்பிரஸ் – புளோக் விவரங்களை வாசித்து அறிந்து வேட் பிரஸ்ல் புகுந்தேன். எனது மருமகள் முகப்புச் செய்வதில் முதன் முதலில் உதவினாள்.
பின்னர் சகோதரர் எழுத்தாளர், கவிஞர் வித்தியாசாகர் அதைத் தமிழாக்கி ” வேதாவின் வலை ”..யென்று எழுதுங்கள் என்றேன் – எழுதினார்.
” தமிழ் பேசி தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம் ” என்றது அவரது வசனமே.
இவருக்கு மனமார்ந்த நன்றி.
இன்னும் மேலும் உதவிகள் அவ்வப்போது நண்பர்களிடம் கேட்டு செய்தேன். கணவர் இதில் ஆர்வமில்லை.
டேனிஸ் மொழியில் கணனி அடிப்படைக் கல்வி ஒரு கிழமை எடுத்தேன். மவுஸ் பிடிப்பதே ஆரம்பத்தில் சிரமமாக இருந்தது.
தமிழ் எழுத்தை யூனிக்கோட்டிற்கு மாற்றுவதில் சுவிஸ் நண்பர் எழுத்தாளர் செய்தியாளர் கவிஞர் ஏ.ஜே.ஞானேந்திரன் வீட்டிற்கு வந்த போது ” இப்படி இருங்கள்” என்று கணனியில் உட்கார வைத்துக் கேட்டு அறிந்து கொண்டேன். எழுத்துருமாற்றியைப் பாவிக்கிறேன். இது எனக்குச் சுகமாக உள்ளது. ஏஜேஜிக்கும் மிகுந்த நன்றி.
600க்கும் மேற்பட்ட கவிதைகள் வலையில் பல தலைப்புகளில் பாமாலிகை (பாக்களின் மாலை) என்று இட்டுள்ளேன். தமிழ் மணத் தொடர்பு சிறிது காலமாகவே உள்ளது. வேறும் தமிழ்வெளி. தமிழ் 10, இன்ட்லி, வலைப்பூக்கள் என்றும் இணைக்கிறேன்.
ஆரம்பத்தில் மேசைக் கணனியாக இருந்தது. இப்போது மடிக்கணனியாக உள்ளது. திடீரென செத்துப் போகும் மேசைக் கணனி. காரணம் வைரஸ் மெயில்களைத் திறப்பது. இவைகளைப் பார்த்துத் திறப்பது, தவிர்ப்பது என்பதும் கூடக் காலப் போக்கில்; அனுபவப் படிப்பாகப் தான் படிக்க முடிந்தது.
இவைகளை நிர்த்தாட்சணயமாக அழிக்க இப்போது நன்கு பழகியுள்ளேன்.
வலை திறந்து 3 வருடங்கள் முடிந்து விட்டது. இன்னும் பல எனது பேரனிடம் படிக்கலாம் என்று எண்ணுகிறேன்.
எக்சீலில் கணக்கு எழுதுவது, வங்கி அலுவல்கள் போன்றவை எனது கணவர் செய்வார்.
இன்னும் பல படிக்க உள்ளது. பார்ப்போம்.
சகோதரர் தமிழ் இளங்கோ இத் தொடர் பதிவை எழுதக் கேட்டதற்கு மிகுந்த நன்றி. சுவைபட எழுத முடியவில்லை.
இத் தொடர் பதிவை எழுத சகோதரி இளமதியை http://ilayanila16.blogspot.de/அழைக்கிறேன்.
சகோதரி ஸாதிகாவை http://shadiqah.blogspot.dk/search?updated-min=2013-01-01T00:00:00%2B05:30&updated-max=2014-01-01T00:00:00%2B05:30&max-results=20 அழைக்கிறேன்..
http://hainallama.blogspot.dk/ டாக்டர் முருகானந்தம் அவர்களை அழைக்கிறேன்.
3 பேர் போதுமென்று நினைக்கிறேன்.
அன்புடன் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.