இலங்கை கொழும்பில் அமரரான என் தங்கையின் பிறந்த நாள் பிரார்த்தனையில் இங்கிருந்து நானும்…29-6-2015 ல்….
63வது பிறந்த நாள் அமரர் கமலாம்பாள்
முகில் பூக்கள் படைசூழ்ந்த
அகில் புகையும் ஆர்மோனியங்களின்
திகிலற்ற இசையுள் நனைந்து
சுகித்திருப்பாய் மென் காற்றாக.
இன்றுன் அ,றுபத்தி மூன்றாமகவை
என்ன ஆச்சரியமொரு முறைNனும்
உன்னை நான்கு மாதங்களுள்
சின்னக் கனவாகவும் காணவில்லை.
அன்பெனும் கிரீடம் சூட்டி
இன்ப விருந்தோம்பல் செங்கோலெடுத்து
நன்மையான அறுபத்திரண்டு வருடங்கள்
மின்னலாய் ஒளிர்ந்து மறைந்தாய்
வாழ்வின் புரிதல், நியமங்களில்
ஆழ்ந்து உழலும் துன்பமில்லை.
பவள மல்லிகையாய், மயிலிறகாய்
பவளமாய் ஒளிர்கிறாய் சாந்தி!
இரவும் பகலும் உன்
தரமான அன்பு பச்சையமாகி
வரம் தரட்டும் எமக்கு
சரங்களாய் இறங்கட்டுமுன் ஆசிகள்!
எட்டிச் சிறகடித்துப் பறந்தாலும்
விட்டுப் பிரியாது நாளும்
தொட்டு விளையாடுகிறதுன் நேசம்.
பட்டொளியானவுன் அனுபவங்களிற்கு நன்றி.
வேதா. இலங்காதிலகம்.