Face book தமிழமுது கவிச்சாரல் மற்றும் தமிழமுது தேன்சாரல் குழுமங்களின் தலைமை நிர்வாகி பூங்காவனம் இரவீந்திரன் அம்மா அவர்களின் கணவர் இன்று இயற்கையெய்தினார். .
அவர் கணவரின் மறைவை முன்னிட்டு இரங்கல் வரிகள்.
*
பிரியமுள்ள சகோதரி!
உலகமாம் காட்டுப் பாதையில்
வலக்கையாகிய உறவு நழுவல்
இலகு அல்ல இன்ப
இலயம் தவறும் இசையே.
மறைதல் எல்லோருக்கும் ஆனது.
மனமதை ஏற்று உறுதியாய்
மலைப்பற்ற பயணம் தொடர்தல்
மனதோடு மல்லாட்டம் தான்.
தெய்வத்தை இறுகப் பற்றும்
தேவதை தாங்கள் சிறிது
தேவை காலமே தேறிட.
தேனினுமினிய தமிழும் உறவாய்த்
தோள் கொடுக்கும். அறிவெனும்
தேசுடை கருவியுமுண்டு. ‘உரனென்னும்
தோட்டியான் ஓரைந்தும் காப்பான்.
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து ‘
சாந்தி!…சாந்தி!…சாந்தி!
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க். 25-3-2017.
*
*