நாம் மண்டபத்தின் உள்ளே நுழைய ”செந்தமிழான எங்கள் தமிழ் மொழியே’ ” பாடல் ஒலித்தது. செயற்கைப் பூக்கள் தூவ / சீருடையில் வாலிபர்கள் எமைப் பின் தொடர்ந்தனர். .மண்டபம் நிறைந்த மக்கள் அனைவரும் எழுந்து நிற்க, நாம் நடக்க எனக்குக் கண்கள் குளமாகி விட்டது. மிக சிரமப்பட்டு என்னைக் கட்டுப் படுத்திக் கொண்டேன். அது மறக்க முடியாத தருணம்.!!!…………..
மேலும் சில பாராட்டுகள்
*
ஓயாது செய்த தமிழ்ப் பணிக்கு
ஓகூஸ் தமிழர் ஒன்றிணயத்தில் விழா _நீவீர்
பாயாத இடமுமில்லை தமிழ் அருவி போல்
சேயாகி நாம் நிற்க தாயாகி தமிழ் அன்னை
வடிவாகி அன்று முதல் இன்றுவரை பணிசெய்தீர்
தொடாத கருவில்லை கையாளாத வார்த்தையில்லை
விடா முயற்சியோடு சிறாருக்கும் கவி தொடுத்தீர்
கடாரம் தாண்டி டென்மார்க்கிலும் தமிழை வளர்த்தீர்
அடாத தடை வரினும் விடாமல் தமிழ்த் தொண்டு செய்தீர்
அனுபவம் தந்த முதிர்ச்சியாய்ப் பழுத்த கவிதைகள்
ஆழ்ந்த கருத்துக்கள் அசைபோடும் நினைவுகள்
இலக்கணச் சுத்தமாய் இலக்கிய வடிவாய்
அனைவரும் பயன்பெறும் விதத்தில்
வாழ்த்த எந்தத் தகுதியுமில்லை
வாழ்த்தி வணங்குகின்றேன்
வாழ்க நின் புகழ்
வாழ்க நின் தமிழ்த் தொண்டு
ராதா மரியரத்தினம்
04.05.15
வாழ்க
நற்புகழாய்
மேலும் பல
வெற்றிப் படிகளேறி
நல்வாழ்த்துகள்
Vetha Langathilakam
Vetha. Langathilakm
Denmark
31-5-2015