நல்லவருக்கு ஏன் மரணம்!!!!
இயற்கையாக நிகழ்வது மரணம்.
கெட்டவர்கள் மரணித்தால் இது ஒரு சம்பவம். நல்லவர்கள், சிந்தனையாளர்கள் மரணித்தால் அது பெரும் பாதிப்பு. மனதைக் கசக்கியெடுக்கிறது.
அநியாயக்காரர்கள், துவேசக்காரர்கள், நீதியை அவமதிப்பவர்கள், பொய்யாக வாழ்பவர்கள் நீண்ட காலம் வாழ்ந்து நல்லவருக்கும், நாட்டிற்கும் துரோகம் செய்யும் போது நல்லவர்கள் ஏன் விரைவில் மரணிக்கிறார்கள் என்று மனம் வெதும்புகிறது.
நல்லர்களிற்குக் கிடைக்கும் இறுதி அஞ்சலிகள் மரியாதைகளாவது கெட்டவனைத் திருத்தாதா! திருந்த ஒரு வழி சமைக்காதா எனும் நப்பாசை எழுகிறது.
மணித்தியாலக் கணக்காக தனது பாதுகாப்பிற்காக நின்ற காவலாளியைத் தொடர்பு சாதனத்தால் தொடர்பு கொண்டு அவரை ஆசனத்தில் அமரவைக்க விரும்பிய தலைவன் வாழும் உலகில் தான் வெள்ளை வான் கலாச்சாரம் பின்பற்றும் தலைவர்களும் வாழ்கிறார்கள்.
எல்லோருக்கும் சிவப்பு இரத்தம் தான் ஓடகிறது. குணங்களில் தான் எத்தனை பேதங்கள்.
கெட்ட பெற்றோர் கூட தம் பிள்ளை நல்லவனாக வருவதையே விரும்புகிறார்கள். வளரும் பிள்ளைகள் அன்னை தந்தையின் குணங்களையும் வாழும் சூழல் தாக்கங்களாலும் பல குணாதிசயங்களில் உருவாகின்றனர்.
நல்ல பிள்ளைகளை பெற்றோர் உருவாக்க முயல வேண்டும்.
ஏன் எல்லோரும் நல்லவராகவே உருவாக உருவாக்க முடியாது!
நல்ல சிந்தனை செயல் கொண்டவர்களால் நல்ல வீடு உருவாகிறது.
நல்ல வீடுகளினால் நல்ல கிராமங்கள் உருவாகிறது.
நல்ல கிராமங்களால் நல்ல நாடு உருவாகிறது.
ஏன் எல்லோரும் நல்லவராக முடியாது!.
ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
29-7-2015.