எனது எழுத்துலகப் பயணத்தில் பெற்ற விருதுகளை
இங்கு பதிவது இங்கு தேவையெனக் கருதுகிறேன்.
கண்ணதாசன் சான்றிதழ் காலக் கவிதைகளுடன்
தனி பதிவாக இங்கு பதிகிறேன். அதன் மூலம்
இறுதியாகப் பெற்ற விருதுடன் இப்பதிவைத் தொடங்குகிறேன்.
அங்கீகாரம்
(சங்காத்தம் – இணக்கம்)
வாழ்தலின் ஒரு அங்கம்.
தாழ்தலைத் தடுக்கும் அங்கீகாரம்.
ஆழ்தலை ஏந்தும் அங்குசம்.
இங்கிதமான கைப்பிடி முன்னோக்க.
எங்கும் வசப்படாது ஏமாற்றும்.
தங்காதும் ஓடும் தரித்திரமாக.
கங்கை தான் திறமைக்கு.
கிங்கிணியான இன்பம் எட்டினால்.
வங்காள விரிகுடாவாகும் பலருக்கு.
பொங்கி வழிந்து ஓடும்.
சங்க காலம் முதல்
சங்கடம் தரும் புள்ளி.
சங்கரன் முதல் சாதாரணனும்
அங்கீகார சங்கமத்தில் ஐக்கியமாக
சங்கற்பமிடுவதே பெரும் யாகம்.
சங்காத்தம் எம் திறனிலுண்டு.
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
26-10-2016
அன்று கவியுலகப் பூஞ்சோலையாக இருந்தது.
இன்று (25-10-2016) தமிழமுது கவிச்சாரல் என்று
பெயர் மாறியவர்களிற்கு எழுதிய நன்றி வரிகள்.