(படம்:- நன்றி – இந்திய சஞ்சிகைக்கு)
அப்பாவாய் நீயிரு!…
உச்சிதனை முகர்வாய்! – என்
அச்சம் ஓடி மறையுதம்மா
உச்சமான நம்பிக்கை
மிச்சம் வளருதம்மா.
நின்னைத் துணை கொண்டால் – ஒரு
நிமிடமும் பேரின்பம் தானம்மா.
சின்னஞ்சிறு வெறுப்பும்
மின்னலாய் ஒளியுதம்மா.
மெச்சிடும் உன்னுறவு – எனக்கு
துச்சமே இல்லையம்மா.
அச்சச்சோ தூரப் போகாதே
அச்சா அம்மா நீயே.
எப்போதும் பகலில் – எனக்கு
அப்பாவைக் காணா ஏக்கம்.
எப்படி எடுத்துரைப்பேன்
அப்பாவின் பிரிவுத் துயர்!
செப்புவேன் ஒன்றுனக்கு
தப்பாய் எடுக்காதேயம்மா.
அப்பா வரும் வரையெனக்கு
அப்பாவாய் நீயிரு அம்மா!
பா ஆக்கம். வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
10-3-2012.
(உண்மைச் சம்பவம் கவிதையாக.)
cpsenthilkumar
மார்ச் 10, 2012 @ 08:09:17
நீங்க வோர்டு பிரஸ்சா? இப்போதான் பார்க்கறேன்..
ஓவியம் அழகு
கவிதை ஓக்கே
கோவை கவி
மார்ச் 10, 2012 @ 11:43:21
மிக நன்றி சகோதரா தங்கள் இனிய வருகைக்கும், கருத்திடலிற்கும். மிக மகிழ்வடைந்தேன். இறை ஆசி கிட்டட்டும்.
சத்ரியன்
மார்ச் 10, 2012 @ 08:30:08
ஏக்கம் கனக்கும் கவிதை.
கோவை கவி
மார்ச் 10, 2012 @ 12:58:34
ஓ! சத்ரியன்! மிக மிக மகிழ்வு கொண்டேன். நன்றியும் கூட உமது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.
இறை அருள் கிட்டட்டும்.
ஸாதிகா
மார்ச் 10, 2012 @ 09:13:35
ஓவியம் விழிகளையும்,கவிதை கருத்தினையும் வெகுவாய் கவர்ந்தன சகோ வேதா இலங்காதிலகம்.
கோவை கவி
மார்ச் 10, 2012 @ 13:49:59
அன்பின் சகோதரி மிக மிக மகிழ்வு கொண்டேன். நன்றியும் கூட தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும். இறை அருள் கிட்டட்டும்.
சென்னை பித்தன்
மார்ச் 10, 2012 @ 10:23:57
தந்தையுமானவள்!அருமை சகோ
கோவை கவி
மார்ச் 10, 2012 @ 13:53:24
தந்தையுமானவளாக இருத்தல் சிரமம் தான். இது பிள்ளையின் நப்பாசை தானே. தங்கள் வருகைக்கும், கருத்திடலிற்கும் மிக மகிழ்வும், நன்றியும் ஆண்டவன் அருள் கிட்டட்டும்.
hotlinksin.com
மார்ச் 10, 2012 @ 10:28:05
கவிதை அருமை…
கோவை கவி
மார்ச் 10, 2012 @ 13:04:39
Dear Hotlinksin! மிக மிக மகிழ்வு கொண்டேன். நன்றியும் கூட தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும். இறை அருள் கிட்டட்டும்.
வே.நடனசபாபதி
மார்ச் 10, 2012 @ 10:54:00
// அப்பா வரும் வரையெனக்கு
அப்பாவாய் நீயிரு அம்மா//
தாயுமானவரைப்பற்றி தெரியும் நமக்கு. தந்தையுமானவரைப்பற்றி அருமையாய் கவிதையில் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!
கோவை கவி
மார்ச் 10, 2012 @ 13:54:29
சகோதரா! தங்கள் வருகைக்கும், கருத்திடலிற்கும் மிக மகிழ்வும், நன்றியும் ஆண்டவன் அருள் கிட்டட்டும்.
கோவை கவி
மார்ச் 10, 2012 @ 11:09:49
R Thevathi Rajan likes this..
Dinesh Paneer Das
Graphic & Web Designer viewed this…
jaghamani
மார்ச் 10, 2012 @ 13:46:44
செப்புவேன் ஒன்றுனக்கு
தப்பாய் எடுக்காதேயம்மா.
அப்பா வரும் வரையெனக்கு
அப்பாவாய் நீயிரு அம்மா!
தந்தையின் இடம் தனி இடம்…
தாயால் நிரப்பமுடிகிறதா பார்ப்போம்..
கோவை கவி
மார்ச் 10, 2012 @ 13:57:08
சகோதரி தந்தையின் இடம் தனியிடம் தான். இது பிள்ளையின் ஆசை தானே!. உங்கள் கருத்திடலிற்கு மிக மிக நன்றியுடன் மிக மகிழ்ச்சியும். ஆண்டன் அருள் கிட்டட்டும்.
Dr.M.K.Muruganandan
மார்ச் 10, 2012 @ 15:50:53
“அச்சச்சோ தூரப் போகாதே
அச்சா அம்மா நீயே…”
எஞ்சியிருக்கும் ஒரே உறவை
நெஞ்சார நெருங்கும்
வாய் மொழி அபாரம்.
கோவை கவி
மார்ச் 10, 2012 @ 16:11:28
தங்கள் வருகைக்கும், கருத்திடலிற்கும் மிக மகிழ்வும், நன்றியும் ஐயா. ஆண்டவன் அருள் கிட்டட்டும்.
duraidaniel
மார்ச் 10, 2012 @ 19:51:59
அருமை. பாசக் கவிதை. நேசக் கவிதை. உணர்வுகள் வருடும் அருமையான வரிகள். வாழ்த்துக்கள் சகோதரம்.
-செப்புவேன் ஒன்றுனக்கு
தப்பாய் எடுக்காதேயம்மா.
அப்பா வரும் வரையெனக்கு
அப்பாவாய் நீயிரு அம்மா!-
– அழகான வரிகள். அந்த தந்தை மதிப்புக்குரியவர்.
கோவை கவி
மார்ச் 10, 2012 @ 19:59:09
எத்தனை குடும்பங்களில் இப்படித் துன்பங்கள் உள்ளது சகோதரா. அப்படி ஒன்றே இது.
மிகுந்த மகிழ்ச்சியும் நன்றியும் உங்கள் இனிய வருகைக்கும் கருத்திடலிற்கும்..இறை அருள் கிட்டட்டும்.
ramani
மார்ச் 11, 2012 @ 00:40:38
தாயின் மீது குழந்தைவைத்துள்ள பாசம் குறித்து
சொல்லப்பட்ட அளவு தந்தை மீது கொண்டுள்ள நேசத்தை
கவிதைகளோ இலக்கியங்களோ அவ்வளவு சொன்னதில்லை
தங்களது வித்தியாசமான சிந்தனையும்
மிக நேர்த்தியாகச் சொல்லிப் போனவிதமும்
மனம் கவர்ந்தது.தொடர வாழ்த்துக்கள்
கோவை கவி
மார்ச் 11, 2012 @ 08:08:37
மிகுந்த நன்றியும், மகிழ்வும் சகோதரா தங்கள் இனிய வருகைக்கும் விரிவான கருத்திற்கும்.
தெய்வத்தின் அருள் கிட்டட்டும்.
b.ganesh
மார்ச் 11, 2012 @ 00:58:36
தந்தையிடம் சில சமயங்களி்ல தாய்மையைக் காண முடிவதைப் போல தாய்மையிடம் தந்தைமையைத் தேட விழைந்த குழந்தையின் ஏக்கக் கவிதை வெகு அருமை சகோதரி!
கோவை கவி
மார்ச் 11, 2012 @ 08:11:35
ஏக்கக் கவிதையின் கருத்திடலிற்கும் இனிய வருகைக்கும் மிகுந்த நன்றியும், மகிழ்வும் சகோதரா.
தெய்வத்தின் அருள் கிட்டட்டும்.
rathnavelnatarajan
மார்ச் 11, 2012 @ 05:14:33
அருமையான கவிதை.
வாழ்த்துகள்.
கோவை கவி
மார்ச் 11, 2012 @ 08:14:08
மிக நன்றியும், மகிழ்ச்சியும் ஐயா தங்கள் கருத்திடலிற்கும் இனிய வருகைக்கும்.
மிகவும் அருத்தமுடையது எனக்கு இது.
ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.
மகேந்திரன்
மார்ச் 11, 2012 @ 15:48:24
தாய்மையிடம் ஒரு
தந்தையின் குணத்தை காண
விழையும் ஒரு அற்புதக் கவிதை
சகோதரி…
கோவை கவி
மார்ச் 11, 2012 @ 16:09:29
அன்பின் சகோதரா மகேந்திரன் தங்கள் இனிய வருகைக்கும் கருத்திடலிற்கும் மிகுந்த நன்றியும், மகிழ்வும்.
தெய்வத்தின் அருள் கிட்டட்டும்.
கோவை கவி
மார்ச் 11, 2012 @ 18:26:39
Selva Venkat likes this../ SentDinesh Paneer Das, Graphic & Web Designer ..like this.
Gunavathi Pachayapan likes this../ Sasi Krish, Annamalai University like this.
Hani Maas, Zahira College, Kalmunai like this. /R Thevathi Rajan, Annamalai University, Chidambaram like this. / வித்யாசாகர் குவைத் likes this..
கீதமஞ்சரி
மார்ச் 12, 2012 @ 01:13:15
பெண்மையில் மறைந்திருக்கும் ஆண்மையை வெளிக்கொணர முயலும் மழலையின் ஏக்கம் மனம் நெகிழ்க்கிறது. அழகான கவிதை. பாராட்டுகள்.
கோவை கவி
மார்ச் 12, 2012 @ 07:16:00
சகோதரி தங்கள் அன்பான வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக மிக மகிழ்வும், நன்றியும். ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.
பழனிவேல்
மார்ச் 12, 2012 @ 03:53:41
“செப்புவேன் ஒன்றுனக்கு
தப்பாய் எடுக்காதேயம்மா.
அப்பா வரும் வரையெனக்கு
அப்பாவாய் நீயிரு அம்மா!”
அப்பா அப்பாதான்…
அம்மா அம்மாதான்…
அழகு கவிதை.
கோவை கவி
மார்ச் 12, 2012 @ 07:14:15
”…அப்பா அப்பாதான்…
அம்மா அம்மாதான்…
அழகு கவிதை…”
இது உண்மை தான் பிள்ளை மனமல்லோ அல்லாடுகிறது.
சகோதரா உமது அன்பான வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக மிக மகிழ்வும், நன்றியும். ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.
pathmasri
மார்ச் 12, 2012 @ 18:47:05
நீண்ட நாட்களின் பின் நான் உங்கள் தளத்தில்….. நல்ல வரிகள் .எனக்கு மிகவும் பிஎத்துள்ளது..
“செப்புவேன் ஒன்றுனக்கு
தப்பாய் எடுக்காதேயம்மா.
அப்பா வரும் வரையெனக்கு
அப்பாவாய் நீயிரு அம்மா!”
ப்ரியமுடன்…
-சிரபுரத்தான்-
கோவை கவி
மார்ச் 13, 2012 @ 07:41:28
ஓ!…எவ்வளவு நாளின் பின். மிக மிக மகிழ்ச்சி சகோதரா. காலம் ஓடிக் கொண்டே உள்ளது. நாமும் மாற்றங்களுடன் ஓடுகிறோம். எது எப்படியானாலும் வந்தீர்களே! கருத்திட்டீர்கனே! நன்றி!..நன்றி.! இறை ஆசி கிட்டட்டும்.
tharshi
மார்ச் 13, 2012 @ 07:10:05
செப்புவேன் ஒன்றுனக்கு
தப்பாய் எடுக்காதேயம்மா.
அப்பா வரும் வரையெனக்கு
அப்பாவாய் நீயிரு அம்மா!
எப்படிச் சொல்வதென்றே… தெரியவில்லை…அழகான வரிகளுடன் அழகான கவிதை
கோவை கவி
மார்ச் 13, 2012 @ 07:45:20
மகிழ்ச்சி, மகிழ்ச்சி நன்றி நன்றி தர்சி. உமது வரவு எனக்கு அருத்தமுடையது.
கருத்திடலிற்கு ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.
கோமதி அரசு
மார்ச் 14, 2012 @ 11:48:00
செப்புவேன் ஒன்றுனக்கு
தப்பாய் எடுக்காதேயம்மா.
அப்பா வரும் வரையெனக்கு
அப்பாவாய் நீயிரு அம்மா!//
அருமையான வரிகள்.
அருமையான பாசக் கவிதை.
ஒவியம் அன்பை அழகாய் வெளிப்படுத்துகிறது.
கோவை கவி
மார்ச் 14, 2012 @ 19:16:43
மிகுந்த நன்றி சகோதரி தாங்கள் வந்து தங்கள் மேலான நீண்ட கருத்தைத் தந்ததற்கு.
ஆண்டவன் அருள் கிட்டட்டும்.
கீதமஞ்சரி
மார்ச் 17, 2012 @ 23:44:35
தங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_18.html
கோவை கவி
மார்ச் 21, 2012 @ 21:50:25
மிக்க நன்றி சகோதரி. அங்கு கருத்திட்டுள்ளேன்.
இறை அருள் கிட்டட்டும்.