261. தை பிறந்தால் வழி பிறக்குமா! (பொங்கல் வாழ்த்து)

vaaaa-ab

தை பிறந்தால் வழி பிறக்குமா! (பொங்கல் வாழ்த்து)

 

 

பொங்கட்டும் பொங்கல் உழவர் பெருமக்களுக்கு!

            பொங்கல் பொங்கட்டும் புதிய அரிசியில்!

பொங்கட்டும் பொங்கல் ஆதவனுக்கு நன்றியில்!

             பொங்கட்டும் ஆனந்தம் அனைவர் மனதிலும்!

தைபிறந்தால் வழி பிறப்பதாய் நம்நாட்டிலும்

             கை ஏந்தட்டும் ஆறுதல் பத்திரங்கள்!

வைப்பான ஆசை உயிர்த்தெழட்டும்!

 

 

பச்சரிசி, சர்க்கரை, பால், பயறு

             உச்சமாய் கலந்து வைக்கும் பொங்கலாய்

அச்சமின்றி இந்து, இஸ்லாம், கிறீஸ்தவர்

            இச்சையாய் ஒன்று கலந்து மகிழட்டும்!

பச்சரிசிப் பொங்கல் இனிது பொங்கட்டும்!

            உச்சமான உன்னதக் காலநிலை நாடு

இச்சகத்தில் இலங்கை யென உலகம்

           மெச்சும் நிலை அரசியலாகப் பொங்கட்டும்!

 

 

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

13-1-2013

related poem (pongal)
https://kovaikkavi.wordpress.com/2011/01/13/202-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%80%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%ae/
 

https://kovaikkavi.wordpress.com/2012/01/14/28-%e0%ae%a4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/nbsp; 

line-lites-mov

18 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. ranjani135
    ஜன 13, 2013 @ 08:48:46

    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!

    மறுமொழி

    • கோவை கவி
      ஜன 13, 2013 @ 10:52:29

      கருத்திடலிற்கு மிக்க நன்றி அன்புள்ளமே! தங்களிற்கும்
      இனிய பொங்கல் திருநாள் வாழ்த்து.

      in london Sudatoli Magazine janu – febru-2006 published this poem…
      Thank you Sudatoli

      மறுமொழி

  2. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
    ஜன 13, 2013 @ 10:40:59

    வணக்கம்
    வேதா. இலங்காதிலகம்.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    மறுமொழி

  3. கோவை கவி
    ஜன 13, 2013 @ 10:54:11

    கருத்திடலிற்கு மிக்க நன்றி ரூபன்!
    உமக்கும் இனிய பொங்கல் வாழ்த்து உரித்தாகட்டும்.

    மறுமொழி

  4. Maniraj
    ஜன 13, 2013 @ 12:19:34

    இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

    மறுமொழி

  5. கோவை கவி
    ஜன 13, 2013 @ 12:38:18

    மிக்க நன்றி
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.

    மறுமொழி

  6. செய்தாலி
    ஜன 13, 2013 @ 13:39:54

    இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

    மறுமொழி

  7. கோமதிஅரசு
    ஜன 13, 2013 @ 14:09:28

    பொங்கட்டும் ஆனந்தம் அனைவர் மனதிலும்!//
    ஆம் , எல்லோர் வீட்டிலும் பால் பொங்கட்டும்
    மனது மகிழ்ச்சியாக இருக்கட்டும்.
    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    மறுமொழி

  8. Dr.M.K.Muruganandan
    ஜன 13, 2013 @ 15:24:07

    இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.

    மறுமொழி

  9. கோவை கவி
    ஜன 13, 2013 @ 17:49:28

    iniya pongal thirunaal vaazhthukkal !
    Sravani

    மறுமொழி

  10. b.ganesh
    ஜன 14, 2013 @ 01:47:20

    எம்மதத்தினருக்கும் ஏற்றதாய், இனிய நாடு இலங்கையென புகழ்வதொய் மகிழ்வினை மனதுக்குத் தருவதாய் பொங்கல் பொங்கட்டும். உங்களுக்கும் உங்கள் வீட்டில் அனைவருக்கும் குறிப்பாய் வெற்றிக்கும் என் இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

    மறுமொழி

  11. பழனிவேல்
    ஜன 22, 2013 @ 07:13:23

    தாமத வருகைக்கு மன்னிக்கவும்.

    “அச்சமின்றி இந்து, இஸ்லாம், கிறீஸ்தவர்
    இச்சையாய் ஒன்று கலந்து மகிழட்டும்! ”

    அழகு …

    மறுமொழி

  12. கோவை கவி
    மார்ச் 22, 2019 @ 19:20:02

    2013 year comments:-

    Seeralan Vee: இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் தங்களுக்கும் உரித்தாகட்டும் வாழ்கவளமுடன்

    சிறீ சிறீஸ்கந்தராசா:- “பொங்கட்டும் பொங்கல் உழவர் பெருமக்களுக்கு!
    பொங்கல் பொங்கட்டும் புதிய அரிசியில்!
    பொங்கட்டும் பொங்கல் ஆதவனுக்கு நன்றியில்!

    பொங்கட்டும் ஆனந்தம் அனைவர் மனதிலும்!
    **** அருமையான பொங்கல் வாழ்த்துக்கள் அம்மா!!

    சுந்தரகுமார் கனகசுந்தரம் :- தை பிறந்தால் வழி பிறக்கும்.

    Naren Rajah :- Happy pongal

    N.Rathna Vel :- மகிழ்ச்சி. நன்றி. எங்கள் இனிய பொங்கல் வாழ்த்துகள்.
    Ramadhas Muthuswamy :- // தைபிறந்தால் வழி பிறப்பதாய் நம்நாட்டிலும்
    கை ஏந்தட்டும் ஆறுதல் பத்திரங்கள்!
    வைப்பான ஆசை உயிர்த்தெழட்டும்!//…. மியவும் அருமையான இனிய கவிதையம்மா! வாழ்த்துக்கள்!!! தை பிறந்து நல்ல இன்ப வழிகள் நமக்குப் பிறக்கவிருக்கின்றன. எல்லோருக்கும் எமது நற்பொங்கல் வாழ்த்துக்கள்!!!

    Sujatha Anton:- பொங்கட்டும் பொங்கல் உழவர் பெருமக்களுக்கு!
    பொங்கல் பொங்கட்டும் புதிய அரிசியில்!
    பொங்கட்டும் பொங்கல் ஆதவனுக்கு நன்றியில்!
    பொங்கட்டும் ஆனந்தம் அனைவர் மனதிலும்!
    ஒவ்வொரு ஆண்டும் தமிழரின் கனவு. உழைத்து வியர்வை சிந்தும்
    உழவனின் கரங்களை பற்றிக்கொள்வோம். அவனுக்கு நன்றிக்கடமை உடையவர் நாம். இல்லையேல் பட்டினி தழைத்தோங்கும். இனிய தைப்பொங்கல் பெருநாள் வாழ்த்துக்கள்.!!!!

    Vetha Langathilakam :- அத்தனை முகநூல் உறவுகள் – எமது சொந்த உறவுகள் – நண்பர்கள் அனைவருக்கும் பொதுவாகவே பொங்கல் வாழ்த்து போட்டுள்ளேன். இனிமை பிறக்கட்டும்.

    Aathi Parthipan பொங்கட்டும் பொங்கல் உழவர் பெருமக்களுக்கு!
    பொங்கல் பொங்கட்டும் புதிய அரிசியில்!
    பொங்கட்டும் பொங்கல் ஆதவனுக்கு நன்றியில்!//pongal vaaltthukkal

    Gowry Sivapalan:- Thanks and same to you

    பட்டுக்கோட்டை ஒப்பிலான் பாலு :- இனிய மாலை வணக்கம் அன்புச் சகோதரிக்கு ..உங்களுக்கும் குடும்பத்தார்க்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் …வாழ்க வளமுடன் !

    Dr.Muttiah Kathiravetpillai Muruganandan:- இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

    Ponnaiah Periyasamy :- உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் மனம் நிறைவான பொங்கல் வாழ்த்துக்கள் …
    Raji Krish:- என் இனிய அன்பு செல்வங்களே உங்களுக்கும்….உங்கள் அன்பு குடுத்தினருக்கும் என் இனிய பொன்னான தமிழர் திருநாளான உழவர்களின் உழைப்பால் நாம் கொண்டாடும் தினமான இனிய தை பொங்கல் திருநாள் நல் வாழ்த்துகள்… வேதா..♥♥.

    Pushpalatha Gopalapillai :- நன்றி..உங்களுக்கும்..உங்கள் குடும்பத்தினர்..அனைவருக்கும்..இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்.**!!**

    Abira Raj:- நன்றி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள்

    Thevarani Sivarajah:- Anaithu Anpu nenchankalukum
    niraivaana ponkal vaazhthukal
    Muthulingam Kandiah :- ஆதவன் வானில் எழுகின்றான்….அறுவடை நெல்லில்…அறுசுவை தரும் பொங்கல்…புது பானையில் பொங்கி வ்ழிகிறது….புத்தாண்டு தமிழருக்கு பிறந்தது…பரந்து வாழும் நம்மவர்.. இணைந்து நின்றிட இந்நாள்..வளம் பல தந்து நிறைந்திட…வருங்கால வரலாற்றில்…வளர்பிறையாக வாழ்வு அமைந்திட …வாழ்த்தி ..வணங்கி ..வரவேற்போம்…..இன்சுவை பொங்கள் இனிதாக அமைய அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள்..

    Naguleswarar Satha :- Vali pirakkum polaththaan Ullathu! Ellaame nanraaka Nadakkavendum.

    Verona Sharmila :- அன்பு பெருக…
    மகிழ்ச்சி என்றும் தங்க….
    செல்வம் நிலைக்க….
    முயற்சி பெருக….
    வெற்றி என்றும் உங்கள் வசமாக….
    என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்…அருமையான கைவண்ண ஓவியம், பொங்கலை போன்ற இனிமையான கவிதை…

    ஞானம் மா:- Happy pongal..

    Umah Thevi :- இனிய தை பொங்கல் நல் வாழ்த்துக்கள் .
    Rebecca Thomas:- இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்..

    Ragavan Sivatharsini :- sirappaana ponkalaai makilchchipponkal unkal kudumpaththaar anaivarukkum

    Sivagowri Sivagurunathan Rajashanthan :- THanks a lot…Happy Pongal to u all!!!

    மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக