482. சத்திய சோதனை

1904049_698698750212867_5052261578001816809_n

சத்திய சோதனை

*

*

சத்தியமே கடவுள் வழி காட்டுமொளி.
சத்தியத்தை நாடும் ஒருவனே வாழ்வில்
சரியான விதியைப் பின்பற்றுவானென்கிறார் காந்தி.
சத்தியத்திற்கு என்றுமே சோனை தான்
சத்தியம் பாதுகாக்கும் கவசம் அல்லது
உத்தம மார்புக் கவசம் எனலாம்.

***

சத்திய சோதனை எங்கும் எவருக்கும்
நித்தியம் ஏற்படும் பிரச்சனைப் பின்னல்.
மன்னிப்பிலும் விட்டுக் கொடுத்தலிலும் வேதனைகள்
யன்னலூடாகத் தானாக விலகுதல் உறுதி.
வன்மமான சுயநலம் தான் உலக
இன்னலிற்குக் காரணம் என்றும் கணிக்கலாம்.

***

உன்னத நோக்கங்களில் தூய்மை அவசியம்.
தன்னலமே கண்களை முற்றாகக் குருடாக்குகிறது.
அன்பின் தேவையும் தெய்வ பக்தியும்
ஆன்மபலம் தந்து வேதனை விலக்கும்.
தியானம் பிரார்த்தனையால் மனக் கட்டுபாடு
வசமாக சத்திய சோதனை வெல்லும்.

***

வேதா. இலங்காதிலகம் டெனமார்க்.

7-3-2017

 

 

retro-clipart-of-a-line-border-of-black-and-orange-diamonds-by-andy-nortnik-302

7 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. திண்டுக்கல் தனபாலன்
    மார்ச் 08, 2017 @ 01:45:35

    உண்மை…

    மறுமொழி

  2. கரந்தை ஜெயக்குமார்
    மார்ச் 08, 2017 @ 14:53:40

    மகளிர்தின நல் வாழ்த்துக்கள்

    மறுமொழி

  3. தேவகோட்டை கில்லர்ஜி
    மார்ச் 09, 2017 @ 05:49:43

    அருமை சகோ

    மறுமொழி

  4. Trackback: 384. (880) சத்திய சோதனை – வலை ஓலை

பின்னூட்டமொன்றை இடுக