38. பரிணாம மந்திரம்.

3

பரிணாம மந்திரம்.

 

உருகி ஓடும் பனியாறாய்

பெருகும் அன்பு பேராறாய்

தரும் நேசம் அமைதியானது.

பெரும் ஆதரவான கைப்பிடியது.

 

 

கருவோடு திருவான பெருமையது.

பருகிடும் பெற்றவர் பாசமது        

குருவானது. நாம் பெரும்  தருவாக

இருவரும் ஒருமையாய்த் தருவது,

 

 

 

கருவறை தொடங்கிக் கல்லறையீறாக

சில்லறையின்றிப் பெறும் தூயது.

நல்லறமாகவிது வாய்த்திட்டால் வாழ்வு

பல்லறமுடையவொரு பரிணாமமாகும்.

 

 

 

பா ஆக்கம்  பா வானதி வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

 18-6-2010.

 

 

 

 

clipart_purpleline2

276. தனிமை.

loneliness

தனிமை.

 

” தனிமையை ரசி!”  என்று ஒரு கவிதையை இதற்கு முன்னர் எழுதிவிட்டு இது என்ன மறுபடியும் என்று எண்ணுவது இயல்பு.

சமீபத்தில் எழுதியது – தனிமையை ரசி.

தனிமையை நான் ரசிப்பதுண்டு. இதே நேரம் கூட்டுறவும் பிடிக்கும். 

இப்போது தருவது 2004ல் யான் எழுதி ரி.ஆர்.ரி தமிழ் அலை வானொலியில் வாசித்தது.

பின்னர் 2005ல் (ஐப்பசி, கார்த்திகை, மார்கழி) யேர்மனிய கலைவிளக்கு சஞ்சிகை பிரசுரித்தது.

2006ல் சி.ஐ.ரிவியில் நான் தொலைபேசி மூலம் வாசித்தது.

சில சொல்லிணைப்பின் திருத்தத்துடன்

இப்போது ரசியுங்கள்!…….

 

 

தனியன் நீயென்று தவிப்பது ஏன்!

இனியன் நீயென்று நினைத்திடு தேன்!

தனிமையோடொரு பட்டிமன்றம் வீண்!

இனி–மை போடுன் பேனாவுக்குத் தான்.

 

ஏக்கமெதற்கு தூக்கியுதறிடு!

ஏதேனுமியக்க நிலையில் ஈடுபடு!

இயக்கத்தில் மனதைப் பதியவிடு!

இணைந்து ரசனையில் மனம் மயங்கிடு!

 

ஊனம் கொண்ட அறிவினிறக்கம்

ஞானம் கழன்ற உணர்வினேக்கம்.

சுய இயக்கம் சுயதிருப்தியினூக்கம்

வியக்க வைக்கும் மனநிம்மதித் தேக்கம்.

 

பூ மலர்ந்த மணம் பரப்பும் தனியே.

பூமி சுழன்றுவரும் இயக்கமும் தனியே.

பூப்படையும் பெண்ணிலையும் தனியே.

பூமத்தியரேகையெனும் மதிப்பும் தனியே.

 

பிறப்பிலும் வாழ்வில் மனிதன் தனியே.

இறப்பிலும் இறுதியில் மனிதன் தனியே.

மறப்பதேன்! சுயம்பிக்கைக் கொடியேற்று!

திறப்பதுன் மன மகிழ்வினூற்று.

 

தவிப்பு நிலை தருமிந்திரியங்களோடு

தகர்த்தெறிந்து வழக்கை விலக்கு!

தனிமையைத் தணிவோடு கையாண்டு கலக்கு!

தத்துவமாயுன் வாழ்வைத் துலக்கு!

 

 

பா ஆக்கம்  பா வானதி வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

10-2-2004.

 

barbluea

 

275. தனிமையை ரசி!

483928_414893435252210_248079144_n

தனிமையை ரசி!

 

தனிமையே தத்துவமாகு தகவோடு!

தனிமையே தத்தளிக்காது தாண்டு!

இனிமையே தருக்கோடு கலந்தாடு

தனிமையோடிணைந்து இசைந்தாடு!          (தனிமை)

 

சீரில்லா உறவுக் கூடு

சீற்றத்தின் வெற்றுக் கோடு

தீராத வெறுமைக் காடு

தீமூட்டும் தனிமைக் கோடு.                             (தனிமை)

 

ஓற்றைப் பெற்றோருக்கும் தனிமை.

இரண்டகப் பெற்றோருக்கும் வெறுமை.

திரண்ட ஏமாற்றத்தால் வெம்மை.

மிரண்டெரியூட்டும் கசப்புக் காடு              (தனிமை)

 

சுக்கு நூறாகும் மனம் பாளமாகும்

இக்கட்டில் நொறுங்கிக் காயமாகும்

திக்கறியாது தடுமாறிப் பெருமூச்சிடும்.

முக்குளிக்கும் தனிமை மனம்.              (தனிமை)

 

சுய நம்பிக்கைத் துணையுடன்

பயம் துணிவால் வெம்பிடும்.

பிணக்குக ளழிந்து இணக்கமாகும்.

கணக்கில் தனிமை தூரவாகும்.         (தனிமை)

 

தனிமையை மனம் துனித்தல்

சனியன், சூனியமெனக் கருதல்,

குனிவு நிலைளே நினைத்தால்.

வனித மனம் தனிமையையும் ரசிக்கும்.    (தனிமை)

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

12-5-2013.

 

(துனித்தல் – வெறுத்தல். வனித – சிறப்பு, மேன்மை)

 

div178

274. பனிப்போர்.

Abstract-Coloful-Design-Wh-452

பனிப்போர்.

 

 

எப்போதுமெங்குமொரு பனிப்போர்.

             தப்பாகவோ சரியாகவோவொரு தனிப்போர்.

அப்புமியலாமையிற் சுரக்கும் கசப்பு நீர்.

             உப்பும் போட்டியுணர்வின் பொறாமை நீர்

மூப்பு வகிக்கும் மூலவழியாலெழும் பனிப்போர்.

             ஆப்புவைக்கும் ஆக்கச் சக்திக்காகத போர்.

சப்பென வாழ்வுச் சந்தோசம் கருக்கும் போர்.

               காப்பில்லா மனிதநேயப் பிணிப்போர்.

 

 

பார்க்கும் தொலைக் காட்சிகள் பாதமூன்றப் பனிப்போர்.

                பரிமாறும் வானொலிகளின்  வார்த்தைப் பனிப்போர்.

பாடகர்களிடை பாண்டித்தியத்தால் பனிப் போர்.

                பாவலர்கள் பேசாது பரிமாறும் பனிப்போர்.

பக்தி வளர்ப்போர் பட்டை போடுவோர்

                பந்தடிப்போர் பரிவட்டம் பிடிப்போர்

பட்டம் வாங்கியோருக்கும் எங்கில்லைப் பனிப்போர்.

                பிச்சாண்டிகளுக்கும் பிரத்தியேக இடப்போர்.

 

 

பாரிலியற்கையைச் சீண்டும் செயற்கைக்கும் பலப்போர்.

                 பாசப் பிள்ளைகளிற்கும் பெற்றொரிற்கும் பனிப்போர்.

பிரிய மனைவிக்கும்  கணவனுக்கும் பனிப்போர்.

                 தெரியாது மறைப்போர்  நடிப்போரின் மாயப் போர்.

விரியும் சிந்தனைக்கும் பழமைக்கும் பனிப்போர்.

                  எரியும் காதலுக்காய் இளமையின் பனிப்போர்.

எரிச்சல் தருமிந்தப் பனிப்போரைத் தூண்டுவோர்

                  எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றுவோர்.

 

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

8-5-2013.

 

 

Devider

 

 

52. கவிதை பாருங்கள்(photo,poem)

528926_440115489397881_1767663747_n[1]

உரவு மொழியானாலும் கவியிலே
தரவு கருத்தாக அமைகவே.
மரபுக் கவிதை வரைந்தாலோ
பிரபு கவியில் நீயென்பார்.

 

உரவு- வலிமை – (கருத்து எழுத மறந்திட்டேன். மன்னிப்புடன்)

 

 

Fire and flame frame

273. அறுபடும் வேரும் அன்னியமாகும் உறவும்.

lotas

அறுபடும் வேரும் அன்னியமாகும் உறவும்.

 

 

நீர் ஊற்றி நிலம் நெகிழ வைத்தல்,

வேர் அறுபடாது வெளியே மரமிழுத்தல்

வேளாண்மை வழியொரு எளிமை வழி.

வேதனையின்றி உறவு வேர் அறுபடாத வழி.

 

 

ஆதரவை அழுக்கின்றிப் பூரணமாய்க் கொடுத்திட்டால்,

ஆனந்தமாய் அன்பை அள்ளி வழங்கிட்டால்,

ஆட்கொள்ளும் அமைதி அன்னியமாகாது

ஆணித்தரமாயுறவு வேர் அறுபடாது.

 

 அலட்சியக் காற்றின் அவலட்சண அலை

அன்பெனும் வேரை அறுபட வைக்கும்.

அகங்காரப் பட்டாடை தரித்து அலங்கோலமாய்

அன்னியமாக்கும் நல்லுறவு நிலையை.

 

 

 

அறுபடும் வேர் துடித்துச் சோர்வதும்,

அறுபட்டும் அதிலொரு புத்தளிர் துளிர்ப்பதும்

அன்னியமாகிய உறவு மனிதரை வதைப்பதும்

மென்னியைத் திருகிடும் மன அமைப்பு.

 

 

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

1-5-2013

 

 

humming-bird

 

51. கவிதை பாருங்கள்(photo,poem)

fab17b18ca88[2]---------------

வாக்காள் அருள்

வாக்கியம் பேசல்.

மாக்கள் பெறாப் பாக்கியம்

வாக்குத் தவறாதே!

காக்கும் ஆறறிவு

ஊக்கமுடை உயர்வு

மக்கள் நாம் மாக்களல்ல!

மாக்களை வதைக்காதே!

பூமாலை போலொரு

பாமாலையாக்கப் பெரும்

பாடடைகிறான் பாவாணன்.

பாவை மதித்திடு!

28-4-2013.

(வாக்காள் – நாமகள்)

orange

கலையும் கற்பனையும் (கைவினை). 7

P1040836

கலையும் கற்பனையும் (கைவினை). 7

சிறு வயதில் ஊரில் களி மண்ணில் உருவங்கள் செய்து விளையாடினோம். இவற்றில் முக்கியமாகப் பிள்ளையார் பிடித்தும் விளையாடியது நினைவு வருகிறது.

இது போல இங்கு பாலர் நிலையத்தில் கடையில் வாங்கிய நிறமூட்டிய களிகளில் உரு அமைப்ப்பது மிகப் பிரபலம்.

இதில் இரண்டு வகைகள் உண்டு. டெனிஸ் மொழியில் எல்இஆர் என்று ஆங்கிலத்தில் எழுத்துக் கூட்டும் ”லிய” என்போம். அல்லது ”மொடலிய வொக்ஸ்”  என்போம்.

ஒரு வகை எந்த நாளும் இடிபாப்பம் செய்யும் மாக்கலவை போல பிடித்து விளையாடிய  பின்னர் ஒரு கிண்ணத்தில் வைத்து அடுத்த அடுத்த நாட்களும் செய்வோம். இறுகிவிட மாட்டாது. மாதக் கணக்கிலிருக்கும். பிள்ளைகள் இதனோடு விளையாடுவதை மிக நேசிப்பார்கள். ஏனெனில் இதைப் பினையும் உணர்வு மிக இதமானது. 

மேசையில் மெழுகு சீலை விரித்து, பிள்ளைகளுக்கும் பாதுகாப்பு ஆடை (ஏப்றன் என்று கூறுவோம்) அணிய வைத்து, ஓரிரு பெரியவர்களின் மேற்பார்வையில் இருந்து அனுபவிக்க, விளையாட விடுவோம். நாமும் அவர்களோடு குழந்தையாக செய்து காட்டலாம். இதைப்பார்த்து அவர்களும் வித விதமாக உரு அமைப்பார்கள்.

தொடும் உணர்வு, பினையும் உணர்வு, கற்பனை, கூட்டுறவு, விரல்களின் இயக்கச் சக்தி முன்னேற என்று பல முன்னெற்றம் கருதி இதைச் செய்வதுண்டு.

இதை விட இன்னோரு வகையானது. பல பல நிறங்களில் உள்ளது. உருவங்களைச் செய்து அவுணில் சுடுவது. பின்னர் எடுத்து நிறமூட்டுவது.

இங்கு படத்தில் நீங்கள் காண்பது சங்கிலி, மாலைகளிற்கு தொங்கவிடும் பென்ரன்.  பெரிய பிள்ளைகளுடன் சேர்ந்து நானும் செய்து சுட்டு, நிறமுட்டியது. சாவிகளுடன் தெங்கும் உருவம் இன்னும் வேறு என்னென்னவோ அவரவர் கற்பனையின் பிரகாரம் செய்யலாம். அவுணில் சுட்டதும் கடினமாகிவிடும்.

நீங்களும் செய்து பாருங்கள்.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

26-4-2013.

fruiti

 

 

50. கம்பன் ஏமாந்தான்!…

 

 kampan

 

 

 

கம்பன் ஏமாந்தான்!…

 

கும்பன் இலக்கண வரிகள்

உம்பல் தமிழ் வரிகள்

உம்பர் தரும் வரிகள்.

சம்பகம் நிறை வரிகள்

கம்பனும் ரசித்த வரிகள்.

 

கம்பளிப் பூச்சி ஊரலாக

அம்பலத்தில் வந்து ஆடும்

கொம்பனல்லாதவன் வரிகளென்ற

வெம்பல் வரிகள் கண்டால்

கம்பன் கடிதாய் ஏமாறுவான்!

 

 

(கும்பன் -அகத்தியன். உம்பல் – வலிமை.  உம்பர் – உயர்ச்சி  சம்பகம் – தற்பெருமை.

கொம்பனல்லாதவன் – ஆற்றலற்றவன். வெம்பல் – பிஞ்சில் பழுத்தல் )

 

 

பா வரியாக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டெக்மார்க்.

22-4-2013.

 

 

abar132ba

 

 

 

 

 

 

8. வெற்றிக்கு ஒரு வயது

1st-birthday

வெற்றிக்கு ஒரு வயது

 

 

எங்கள் செல்லப் பேரன்

தங்கக்கட்டி ராசன்

உங்கு குடித்து வளர்ந்தான்.

இங்கு ஒரு வயதாகிறான்.

 

திலீபன் – சாந்தியின் அரும்

திலகம் தினகரன் ”வெற்றி”

உலவி நிறைகிறார் இன்று

கலகலப்பு ஒரு ஆண்டு.

 

எட்டியடி வைக்கிறார்

சுட்டிச் செல்வன் எங்கள்

கட்டி வராகன் வெற்றியே

பட்டுக் குஞ்சப் பெட்டகமே!

 

அச்சுப் பிச்சு மழலையால்

கிச்சுக் கிச்சு மூட்டுகிறார்

பச்சை மரகதமே! பல்லாண்டு

சீரும் சிறப்பாக வாழ்ந்திடு!

 

 

(கட்டி வராகன் – தங்கநாணயம்.   தினகரன் – சூரியன்)

 

 

 

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

16-4-2013.  

 

 

 

 

baloonz

Previous Older Entries

</iframe
Follow

Get every new post delivered to your Inbox.

Join 60 other followers